தொல் கார்த்திகை விளக்கு நாள்!
Dinamani Chennai|December 13, 2024
ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் பெருமழைக் காலம். பெருமழை தொடரும் சூழலைக் கட்டுப்படுத்தும் விதமாகவே கார்த்திகைத் திங்களில் மலைமுகடுகளில் நம் முன்னோர் விளக்காம் அகண்ட தீபத்தை ஏற்றி வைக்கும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தனர் என்பதை சங்க இலக்கியம் கொண்டு உணரலாம்.

கார்த்திகைத் திங்களுக்கான பழமொழிகளில் 'கார்த்திகை பிறைபோல' என்பதும் ஒன்று. பிற மாதங்களில் தெளிவாகத் தெரியும் மூன்றாம் பிறையானது கார்த்திகையில் அவ்வளவாகத் தெரியாது. திரளான மேகங்கள் கூட்டம் கூட்டமாக அங்குமிங்கும் பரவலாக ஓடுவதால் பிறை காண்பதை அரிது என்பர்.

மேலும், கார்த்திகையில் கருத்த இடமெல்லாம் மழை என்று கூறுவதிலும் ஒரு கருத்து உண்டு. அதாவது கருத்த மழை மேகங்கள் அங்குமிங்குமாகத் திகைக்கும் நிலையில், எங்கெங்கே திகைத்து நிற்கிறதோ, அங்கங்கே மழை பெய்யும் என்றனர் நம் முன்னோர்.

இப்படிக் காலங்காலமாகக் கண்டு, கண்டு அனுபவித்ததையே திருஞானசம்பந்தர் 'தொல்கார்த்திகை' என மயிலாப்பூர் தேவாரத்தில் கூறினார் போலும் என நினைக்கத் தோன்றுகின்றது.

இங்ஙனமாகிய தொல் கார்த்திகையின் போது, மலைமுகடுகளில் ஏற்றிய அகண்ட தீபத்தின் வழக்கம்தான் காலப்போக்கில் சமயக் கோட்பாட்டின்படி கார்த்திகை நாள் விளக்காக வழிபாட்டிற்குரிய இடத்தைப் பெற்றதாக உணரலாம்.

மலையில் விளக்கு வைத்த குறிப்பைப் பழமொழி நானூற்றில் 'குன்றின் மேலிட்ட விளக்கு' (204) என்றும் சீவக சிந்தாமணியில் திருத்தக்கதேவர் 'குன்றத்து உச்சிச் சுடர்' (262) எனவும், குன்றில் கார்த்திகை விளக்கிட்டன்ன' (256) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குன்றின் மேல் வைக்கப்பெற்ற தீபம் கார்த்திகையில் வைக்கப்பட்டதற்கான அடையாளமாகக் கொள்ளத்தக்கது.

Diese Geschichte stammt aus der December 13, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der December 13, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்கு இரண்டாவது இடம்
Dinamani Chennai

பயங்கரவாதம்: பாகிஸ்தானுக்கு இரண்டாவது இடம்

உலக பயங்கரவாத வரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

time-read
1 min  |
March 07, 2025
Dinamani Chennai

ரூ. 30,000 கோடி மதிப்பில் வெளிநாட்டில் சொத்துகள்

சிறப்பு பிரசாரத்தின் கீழ் அறிவித்த வரி செலுத்துவோர்

time-read
1 min  |
March 07, 2025
சிம்பொனி இசை நிகழ்ச்சி நாட்டின் பெருமை
Dinamani Chennai

சிம்பொனி இசை நிகழ்ச்சி நாட்டின் பெருமை

லண்டனில் நடைபெறவுள்ள சிம்பொனி இசை நிகழ்ச்சி எனது பெருமை அல்ல, நாட்டின் பெருமை என இசையமைப்பாளர் இளையராஜா கூறினார்.

time-read
1 min  |
March 07, 2025
அனுமதியின்றி கையொப்ப இயக்கம்: தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் கைது
Dinamani Chennai

அனுமதியின்றி கையொப்ப இயக்கம்: தமிழிசை உள்ளிட்ட பாஜகவினர் கைது

மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக அனுமதியின்றி கையொப்ப இயக்கம் நடத்தியதாக தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட பாஜகவினர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

time-read
1 min  |
March 07, 2025
தலைமைச் செயலகம் நோக்கி பேரணி: போக்குவரத்து தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்
Dinamani Chennai

தலைமைச் செயலகம் நோக்கி பேரணி: போக்குவரத்து தொழிலாளர்கள் தடுத்து நிறுத்தம்

சென்னையில் தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் செல்ல முயன்ற போக்குவரத்து தொழிலாளர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

time-read
1 min  |
March 07, 2025
பார் புகழும் பண்ணாரி மாரியம்மன்
Dinamani Chennai

பார் புகழும் பண்ணாரி மாரியம்மன்

அம்மன் கோயில்களில் பண்ணாரி மாரியம்மன் கோயில் புகழ் பெற்றது. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வனப்பகுதியான இங்கு ஆடுகள், மாடுகளை மேய்ச்சலுக்காக விவசாயிகள் அழைத்து வருவர்.

time-read
1 min  |
March 07, 2025
அரசியல் கட்சிகளால் நகர்ப்புறங்களில் வளர்ந்துவரும் நக்ஸல் தீவிரவாதம்
Dinamani Chennai

அரசியல் கட்சிகளால் நகர்ப்புறங்களில் வளர்ந்துவரும் நக்ஸல் தீவிரவாதம்

வனப் பகுதியிலிருந்து துடைத்தெறியப்பட்டு வரும் நக்ஸல் தீவிரவாதக் கொள்கைகளை சில அரசியல் கட்சிகள் எதிரொலிப்பதால், நகர்ப்புறங்களில் அது வேகமாகப் பரவி வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி கவலை தெரிவித்தார்.

time-read
1 min  |
March 07, 2025
ஜெய்சங்கர் காரை வழிமறிக்க முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்
Dinamani Chennai

ஜெய்சங்கர் காரை வழிமறிக்க முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்

லண்டனில் பாதுகாப்பை மீறி சம்பவம்

time-read
1 min  |
March 07, 2025
புத்தகத் திருவிழா விழிப்புணர்வு: ராட்சத பலூன் பறக்க விட்ட அமைச்சர்
Dinamani Chennai

புத்தகத் திருவிழா விழிப்புணர்வு: ராட்சத பலூன் பறக்க விட்ட அமைச்சர்

திருவள்ளூரில் நடைபெற உள்ள புத்தகத்திருவிழாவையொட்டி, ஆவடியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலூனை அமைச்சர் சா.மு.நாசர் வியாழக்கிழமை பறக்கவிட்டார்.

time-read
1 min  |
March 07, 2025
சென்னை கடற்கரை - எழும்பூர் 4-ஆவது வழித்தடத்தில் ரயில் இயக்கி சோதனை
Dinamani Chennai

சென்னை கடற்கரை - எழும்பூர் 4-ஆவது வழித்தடத்தில் ரயில் இயக்கி சோதனை

சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே புதிதாக அமைக்கப்பட்ட 4-ஆவது வழித்தடத்தில் வியாழக்கிழமை சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டது.

time-read
1 min  |
March 07, 2025