"உடலைத் தன் வசமாக்கிக்கொண்டி ருக்கும் ஒருவன், புலன்களை அடக்கியாள முடிந்த ஒருவன், உலக உயிர்களனைத்தும் ஆன்ம சொரூபமே என்று தெளிவடைந்த ஒருவன், உலகியல் கர்மங்களில் ஈடுபட் டாலும், நிச்சயமாக அவன் கறை படிந்தவ னாக ஆவதில்லை." சரீரம் என்ற ஒன்றை உணர்ந்தவன், அதுவே தான் மற்றும் எல் லாம் என்ற உணர்வுக்கும் ஆட்படுகிறான். உலகியல் வாழ்க்கையில் சரீரத்தை முன்னி றுத்தவேண்டியது அவசியமாகிறது. அதுவே அடையாளமாகவும் ஆகிறது.
ஆனால் மேம்போக்கான, வெளிப்படை யான செயல்களுக்குப் பயன்படும் அந்த சரீரத்துக்குள்ளே என்ன இருக்கிறது என்று பார்க்க நாம் யாருமே விழைவதில்லை. உடலைச் செயல்பாட்டுக்கான ஒரு கருவி என்றே எடுத்துக்கொள்வோம்.
அந்த உடலுக்குள் உறுப்புகள் எவ்வாறு இயங்குகின்றன என்பதை வேண்டுமானால் விஞ்ஞானம் சோதனை ரீதியாக விவரிக்க லாமே தவிர, அவற்றை இயக்குவது எது என்ற கேள்விக்குப் பெரும்பாலும் பதில் கிடைப்பதில்லை.
விழுங்கும் ஆகாரம் எப்படி செரிக்கி றது, அவ்வாறு செரிக்கும் ஆகாரத்திலிருந்து நன்மை தரும் சத்துகளையும், வேண்டாத வற்றையும் பிரிக்கும் சக்தி இரைப்பைக்கும், ஈரலுக்கும் எப்படி வந்தது? வேண்டாத வற்றை வெளியேற்றும் பொறுப்பைக் குடல் எப்படி வெகு இயல்பாகச் செய்கிறது, இது பகலில் மட்டுமா, அதாவது நாம் விழித்திருக் கும்போது மட்டுமா, இரவிலும் கூடத்தான் நடக்கிறது.
அதாவது நாம் நிம்மதியாக ஓய்வு எடுத் துக் கொள்ள, நம் உடலுக்குள் இருக்கும் உறுப்புகள் நமக்கு உறுதுணையாக நிற் கின்றன. நம் தூக்கத்திலும் ரத்த ஓட்டம் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. இதயம் ரத்தத்தை வாங்கி, வெளியிட்டுக் கொண்டு தான் இருக்கிறது. நுரையீரல் சுவாசித்து கொண்டுதான் இருக்கிறது.
இவற்றையெல்லாம் இயக்குவது யார் அல்லது எது?
கைகளை அசைக்கிறோம், கால்களை இயக்குகிறோம். அவற்றில் அமைந்திருக் கும் மூட்டுகளுக்கு எண்ணெய் போட்டு அவற்றை இலகுவாக இயங்கவைக்கும் மெக்கானிக் யார் அல்லது எது?
லௌகீகமாக இப்படி நம் உடற்கூறு களை நாம் ஆராய முற்படும்போது நமக்கு ஓர் உண்மை புலப்படும். நம்மை இயக்குப வர், நம்மை நாமாக உலவவிடுபவர், அந்தப் பரமாத்மா அன்றி வேறு எவரும் இலர். ஆகவே, நம் சரீரத்தைத் தவிரவும் வேறு ஏதோ ஒன்றும் நமக்குள் இருக்கிறது.
அது நம் அறிவுக்கு அப்பாற்பட்டது என்று விலகுபவர், அனுபவங்களின் பலன்களை
Diese Geschichte stammt aus der October 01, 2024-Ausgabe von Aanmigam Palan.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent ? Anmelden
Diese Geschichte stammt aus der October 01, 2024-Ausgabe von Aanmigam Palan.
Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.
Bereits Abonnent? Anmelden
"ஸங்கல்ப ஸித்த சாயி”
அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.
சிந்தாதேவி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.
ஆகாசமூர்த்தி
இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.
கசனின் குருபக்தி
மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.
அவதாரப் புருஷர் மத்வர்!
12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.