Try GOLD - Free
ரேபீஸ் தவிர்ப்போம்!
Kungumam Doctor
|October 01, 2024
சமீபகாலமாக தெருநாய்கள் மனி தர்களை கடிப்பது அதிகரித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியானதை தொடர்ந்து அதன் உண்மைநிலையை அறியும் வகை யில், விலங்குகள் ஆர்வலரும், ஸ்காட் லாந்து நாட்டில் அமைந்துள்ள எடின்

பர்க் பல்கலைக்கழகம் நடத்தும் தெரு நாய்கள் - பொது சுகாதாரம் (ROH - Indies) பற்றிய ஆராய்ச்சி திட்டத்தின் முதன்மை ஆய்வாளராகவும் இருக்கும் கிருத்திகா சீனிவாசன் தெருநாய்கள் மற்றும் மனிதர்கள் மோதல் குறித்து சமீபத்தில் ஓர் ஆய்வை நடத்தியுள்ளார். இதில், உண்மையில் தெருநாய் கடிப்பது அதிகரித்துள்ளதா.. தெருநாயிடம் இருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக் கொள்ள வேண்டும்.. நாய் கடித்துவிட்டால் முதலுதவியாக என்னென்ன செய்ய வேண்டும் என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் கிருத்திகா.
தெருநாய்கள் மக்களை கடிப்பது அதிகரித்துள்ளதா உங்கள் ஆய்வு என்ன சொல்கிறது.
மனிதர்களும் தெருநாய்களும் காலம் காலமாக இங்கே இணைந்துதான் வாழ்ந்து வருகிறார்கள். தெருநாய் மனிதர்களை கடிக்கும் நிகழ்வுகளும் அவ்வப் போது ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. எனவே, தெருநாய் கடிப்பது அதிகரித்துள்ளதா, குறைந்துள்ளதா என்பதை முழுமையாக சொல்லிவிட முடியாது. ஏனென்றால், எங்களின் ஆய்வுபடி சில ஊர்களில் சில பகுதிகளில் நாய் கடிப்பது அதிகரித்து இருக்கிறது. சில ஊர்களில் முன்பை விட குறைந்து இருக்கிறது. எனவே, அதிகரித்து இருக்கிறது.. குறைந்து இருக்கிறது என்று சொல்லி விட முடியாது. ஆனால், ரேபீஸால் ஏற்படும் மரணங்கள் முன்பை காட்டிலும் தற்போது குறைந்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கிறது.
ரேபிஸ் நோய் குறித்து
ரேபிஸ் என்பது வைரஸ் கிருமிகள் மூலம் ஏற்படுகின்ற நோய். நாய் கடித்தால் மட்டுமே இந்த நோய் ஏற்படும் என்று பலர் நினைக்கிறார்கள். அப்படியில்லை. இந்தக் கிருமிகள் பூனை, நாய், ஆடு, மாடு, குதிரை, குரங்கு, நரி, கீரி, ஓநாய், வௌவால் போன்ற பாலூட்டிகள் என ரேபிஸ் கிருமி உள்ள எந்த விலங்குமே மனிதரைக் கடித்தாலும், தீண்டினாலும் ரேபிஸ் வரும். இந்தியாவை பொருத்தவரை, முறையாகத் தடுப்பூசி போடப்படாத தெருநாய் கடிப்பதால்தான் 95 சதவீதம் இந்த நோய் ஏற்படுகிறது. அதனால் தான் இதனை வெறிநாய்க்கடி நோய் என்கிறோம்.
This story is from the October 01, 2024 edition of Kungumam Doctor.
Subscribe to Magzter GOLD to access thousands of curated premium stories, and 9,500+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
MORE STORIES FROM Kungumam Doctor

Kungumam Doctor
நேர மேலாண்மையும் இலக்கு நோக்கிய பயணமும்!
வீட்டைப் பெருக்குவது, பாத்திரம் தேய்ப்பது ஒரு முறைதான், தொலைக்காட்சி ஒரு மணிநேரம் மட்டுமே பார்ப்பது, சோசியல் மீடியாவிற்கு இரண்டு மணி நேரம் இப்படி நம் மனக்கட்டுப்பாடுகளுக்கான வரையறைகளையும் எண்களாக வகுத்துக் கொள்வது கண்கூடான பலன்களைத் தரும்.
2 mins
July 16-31, 2025

Kungumam Doctor
லோ சுகர் தடுக்கும் வழிகள்!
பொதுவாக சர்க்கரை அளவு அதிகரிப்பை விட, சர்க்கரை அளவு திடீரென்று குறைவது தான் ஆபத்தானது.
1 min
July 16-31, 2025

Kungumam Doctor
இதய அறுவைசிகிச்சை... கட்டுக்கதைகள் VS உண்மைகள்!
இதய அறுவைசிகிச்சையில் இதய நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான பல்வேறு மருத்துவ நடைமுறைகள் அடங்கியுள்ளன.
3 mins
July 16-31, 2025

Kungumam Doctor
ஆட்டுப்பால் சீஸின் நன்மைகள்!
ஆட்டுப்பால் சீஸ் என்பது ஆட்டின் பாலில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு தயாரிப்பு ஆகும்.
1 mins
July 16-31, 2025

Kungumam Doctor
சருமத்தை மென்மையாக்கும் ரோஸ் ஆயில்!
சருமப் பாதுகாப்புக்குப் பயன்படுத்தும் அத்தியாவசிய எண்ணெய்களில் ஒன்று தான் ரோஸ் எண்ணெய்.
2 mins
July 16-31, 2025

Kungumam Doctor
தர்பூசணி விதையின் பயன்கள்!
தர்பூசணி விதைகள் பல நன்மைகள் கொண்டவை. அவை, வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் புரதங்கள் நிறைந்தவை.
1 min
July 16-31, 2025

Kungumam Doctor
ரத்தத்தைய சுத்தம் செய்யும் சுக்கான் கீரை!
நமது முன்னோர்கள் பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாக கீரைகளையே உணவாக பயன்படுத்தியிருக் கிறார்கள் என்பது நம் பாரம்பர்யத்தின் தனிசிறப்பு.
1 mins
July 16-31, 2025

Kungumam Doctor
எந்த திசையில் தலைவைத்து தூங்குவது நல்லது
பொதுவாக தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று.
1 min
July 16-31, 2025
Kungumam Doctor
ருபெல்லா வைரஸ் ஒரு முழுமையான பார்வை
ரூபெல்லா (Rubella) என்பது ஒரு வைரஸ் காரணமாக ஏற்படும் தொற்று நோயாகும்.
2 mins
July 16-31, 2025

Kungumam Doctor
கவுன்சலிங் ரூம் மருத்துவப் பேராசிரியர் முத்தையா
எனக்கு கடந்த ஆறு மாதங்களாக வாய்ப்புண் தொல்லை உள்ளது.
3 mins
July 16-31, 2025