
இறந்தவரின் நினைவுகளை வாழ்நாளெல்லாம் சுமக்கவிருக்கும் குடும்பத்தினருக்கு உறுதியான கடப்பாட்டுடன் நீங்கா நினைவுகளை ஏற்படுத்தித் தருகிறார், நியூ இந்தியன் காஸ்கெட் சர்விசஸ் நிறுவனத்தின் இறுதிச்சடங்கு நடத்துநர் ரா.துர்கா தேவி.
தமது தந்தை க.ராஜேந்திரன் தொடங்கிய இந்நிறுவனத்தில் 17 வயது முதல் பணியாற்றி வருகிறார் திருமதி துர்கா.
“உயிருடன் இருப்பவர்களை மகிழ்வுறச் செய்வதற்கு பல வழிகள் உண்டு. பிறந்தநாள் உள்ளிட்ட வேறு எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அவரவருக்குப் பிடித்தமான செயல்களைச் செய்துகொடுக்க இயலும்.
“ஆனால், இறந்தவர்களை நினைத்து இருப்பவர்கள் துயருறும்போது அவர்களை ஆறுதல் அடையச் செய்வது கடினமான காரியம்.
“அந்தத் தருணத்தில் இறந்தவர்களைக் கண்ணியமாக வழியனுப்பும் வாய்ப்பு மட்டுமே எஞ்சியிருக்கும் என்பதால் அதனைக் கடமையாக முடிப்பது இறுதிச்சடங்கு நடத்துநர்களைச் சேர்ந்தது.
“இத்தகைய பொறுப்பை வேறு எந்தத் துறையும் வழங்காது என்பதால் இத்துறையில் நீடிக்கிறேன்,” என்றார் துர்கா.
உணர்வுபூர்வமான சவால்கள்
பெண்கள் பரவலாகக் காணப்படாத துறையாக இது கருதப்பட்டாலும், இத்துறையில் தொடர்ந்து பணியாற்றி வருவதற்கான காரணங்களுடன் தாம் எதிர்கொள்ளும் சவால்களை துர்கா விவரித்தார்.
“தொடக்கத்தில் இவ்வேலையைச் செய்தபோது பயம் ஏற்பட்டதுண்டு. குறிப்பாக, இறந்தவர்களைக் குளிப்பாட்டுவது, திருப்புவது, உடுத்துவது என்று பலமுறை கலக்கமடைந்திருக்கிறேன்,” என்று கூறிய திருமதி துர்கா, ஒருவர் உயிர் நீத்த அடுத்த நொடியிலிருந்து பணிகள் துவங்குவதால் தாம் சந்திக்கும் முக்கிய சவாலே உணர்வுகள் சார்ந்தது தான் என்றார்.
“இறுதிச் சடங்குகளுக்கான ஆயத்தங்களைச் செய்வதற்காகத் துக்க வீட்டிற்குச் செல்லும்போது, அங்கு துயரத்தில் இருக்கும் பெண்கள், சில நேரம் நானும் பெண்ணாக இருப்பதால் என்னைப் பிடித்துக்கொண்டு அழுவார்கள்.
This story is from the March 22, 2025 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the March 22, 2025 edition of Tamil Murasu.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

‘துரோகி’ பேச்சு: நகைச்சுவைக் கலைஞர் குணாலிடம் விசாரணை
மகாராஷ்டிர மாநில அரசியல் நகைச்சுவைக் கலைஞர் குணால் கம்ராவை காவல்துறை விசாரணைக்கு அழைத்துள்ளது.

நான்கு சுகாதாரப் பொருள்கள் குறித்து எச்சரிக்கை
தோலழற்சி காரணமாக 50 வயதுகளில் உள்ள ஆடவர் ஒருவர் அங் மோ கியோவில் உள்ள காப்பி கடையில் மாத்திரைகள் வாங்கியுள்ளார்.

கோடநாடு வழக்கு: ஜெயலலிதா வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு அழைப்பாணை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு (படம்) சிபிசிஐடி காவல்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது.

‘ஜன நாயகன்' வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
விஜய் நடித்துவரும் ‘ஜன நாயகன்’ திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 9ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

100ஆண்டுகள் பழைமையான சிகிச்சை முறை மூலம் உயிர் காத்த மருத்துவர்கள்
சிங்கப்பூர்ப் பொது மருத்துவ மனையில் நூறாண்டுப் பழைமையான சிகிச்சை முறையை மருத்தவர்கள் கையாண்டுள்ளனர்.

தடுப்பூசி போடாவிட்டால் நோய்ப்பரவல் அதிகரிக்கும்
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நடப்பு விவகார வலையொளியில் சுகாதார அமைச்சர் ஓங்

தெலுங்கானா சுரங்க விபத்து உயிரிழந்த இரண்டாமவர் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது
தெலுங்கானா சுரங்க விபத்தில் பலியான இரண்டாவது தொழிலாளரின் உடலை மீட்புக் குழுவினர் செவ்வாய்க்கிழமை அதிகாலை கண்டுபிடித்துள்ளனர்.

இந்தோனீசியா: காவல்துறையுடன் ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல்
சர்ச்சைக்குரிய ராணுவச் சட்டத்தை இந்தோனீசியா அண்மையில் நடைமுறைப்படுத்தியது.

அறிவார்ந்த தேசம், செயற்கை நுண்ணறிவுக் கொள்கை இயக்குநர் பதவி விலகல்
சிங்கப்பூரின் அறிவார்ந்த தேசம், செயற்கை நுண்ணறிவுக் கொள்கைகளுக்குத் தலைமை தாங்கும் மூத்த அரசாங்க ஊழியரான திருவாட்டி கோ ஹன்யான் பதவி விலகியுள்ளார்.

மேற்கு வங்க பாஜகவில் உட்கட்சிப் பூசல்; அடிதடி, நாற்காலி வீச்சு
மேற்கு வங்காள மாநிலத்தில் பாஜக உட்கட்சிப் பூசல் அதிகரித்து வருகிறது.