நமது நாட்டில் இருக்கும் மோனசைட் உள்ளடக்கிய கனிம படிவத்தை அகழ்வு செய்வதற்கும், அதனை கையாள்வதற்கும் ஒன்றிய பொதுத்துறை நிறுவனமான ஐஆர்இஎல்க்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் ஐஆர்இஎல் ஆலை செயல்பட்டு வருகிறது. நாட்டில் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்புகள் நடைமுறைக்கு வருவதற்கு முன்பே 1970 முதல் இந்த ஆலை இயங்கி வருகிறது. மோனசைட், சிர்கான் மற்றும் அதனுடன் காணப்படும் கனிமங்களை பிரித்தெடுத்து இந்திய அணுசக்தி துறை மற்றும் நாட்டின் பாதுகாப்பு சார்ந்த நிறுவனங்களுக்கு வழங்கி வருகிறது.
இந்த ஆலை ஆண்டுக்கு 1 லட்சத்து 14 ஆயிரத்து 600 டன் அணு கனிமங்களை உற்பத்தி செய்ய அனுமதியை பெற்று செயல்பட்டு வருகிறது. நாட்டின் அணுசக்தி திட்டத்திற்கு தேவைப்படும் மிக முக்கிய கனிமங்களை எடுப்பதற்கு அணுசக்தி துறை கடந்த 2015ம் ஆண்டு தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதியது. அதன் மூலம் குமரி மாவட்டத்தில் மோனசைட் கனிமம் மிகுந்த பகுதியான 1,144.0618 ஹெக்டர் பரப்பிலான பகுதிகளை ஐஆர்இஎல் நிறுவனத்திற்கு ஒதுக்கீடு செய்ய தமிழ்நாடு அரசின் இசைவை கோரியது.
தமிழ்நாடு அரசும் 2021ல் தனது இசைவை அளித்துள்ளது. அதனை தொடர்ந்து ஒன்றிய சுரங்க அமைச்சகம் 2021ல் அறிவிப்பாணை வெளியிட்டது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு ஒன்றிய சுரங்க துறையின் முன் அனுமதி பெற்று சுரங்க குத்தகை வழங்குவதற்கான கடிதத்தை ஐஆர்இஎல்-க்கு அளித்துள்ளது. இங்கு அணு கனிம படிவுகளான மோனசைட், சிர்கான், இல்மனைட், ரூட்டைல், சிலிமனைட் மற்றும் கார்னட் ஆகியவற்றை பிரித்து எடுக்க 1144.0618 ஹெக்டர் பரப்பு நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
கிள்ளியூர் தாலுகாவில் கீழ்மிடாலம் ஏ, மிடாலம் பி, இனயம்புத்தன்துறை, ஏழுதேசம் ஏ, பி, சி மற்றும் கொல்லங்கோடு ஏ மற்றும் பி கிராம பகுதிகளில் இந்த மண் எடுக்கும் பணிகள் நடைபெற உள்ளது. இதன் மூலம் மேற்கொள்ளப்படும் அணு கனிம படிவுகள் உற்பத்தி அளவு 1.5 மில்லியன் டன்கள் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆய்வறிக்கையின் சுருக்கம் வெளியிடப்பட்டுள்ளது.
Esta historia es de la edición September 23, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 23, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
தேசிய பயண அட்டையை பயன்படுத்தி மாநகர பேருந்துகளில் டிக்கெட் பெறும் வசதி : விரைவில் அறிமுகம்
மாநகர பேருந்துகளில் தேசிய பொது இயக்க அட்டையை பயன்படுத்தி டிக்கெட் பெறும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
40 சவரன் நகையை கண்டுபிடிக்க தொழிலதிபரிடம் ஜிபே மூலம் ₹20 ஆயிரம் எஸ்ஐ லஞ்சம் - உயர் அதிகாரிகள் விசாரணை
வீட்டில் மாயமான 40 சவரன் நகைகள் குறித்து புகார் அளித்த தொழிலதிபரிடம், திருட்டை கண்டுபிடிக்க ஜிபிஇ மூலம் 20 ஆயிரம் லஞ்சம் பெற்றது தொடர் பாக உதவி ஆய்வாளரிடம் போலீசார் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சவாரிக்கு வந்தபோது பேச்சு கொடுத்து விவரம் சேகரிப்பு ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் திருடிய ஓலா ஆட்டோ பெண் டிரைவர்
சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வலை
முதலமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் ₹131 கோடி மதிப்பில் 225 சாலை பணிகள் நிறைவு
திருத்தனி கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு
பொன்னேரியில் 774.75 கோடி நிதி ஒதுக்கியும் 10 ஆண்டுகளாக மந்தகதியில் நடக்கும் பாதாள சாக்கடை பணி - விரைந்து முடிக்க கோரிக்கை
பொன்னேரி நகராட்சியில், 10 ஆண்டுகளாக நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் : இயக்குனர் கவுதமன் பேட்டி
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சவாரிக்கு வந்தபோது பேச்சு கொடுத்து விவரம் சேகரிப்பு ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் திருடிய ஓலா ஆட்டோ பெண் டிரைவர்
சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வலை
துபாய்க்கு விமானத்தில் தப்ப முயற்சி தலைமறைவு குற்றவாளி சென்னையில் சிக்கினார்
மீனம்பாக்கம், கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீசால் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டில் முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் தகவல்
தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்போரூர் அருகே பரபரப்பு ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தீவிபத்து
திருப்போரூர் அருகே ஆலத்தூர் தொழிற்பேட்டையில் டாம்ப்கால் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.