மழை சீசன் தொடங்கினாலே எங்குச் சாலைகளில் மழை நீர் தேங்குமோ.. வீடுகளில் மழை நீர் புகுந்துவிடுமோ என்ற அச்சம் சென்னைவாசிகளுக்கு வந்துவிடும். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக திமுக ஆட்சி பொறுப்பேற்றத்தில் இருந்து இந்த நிலைமை மாறத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு மிக்ஜாம் புயலைத் தவிர்த்துப் பார்த்தால் மழைக் காலங்களில் பெரியளவில் மழை நீர் எங்கும் தேங்குவது இல்லை. புதிய மழைநீர் வடிகால்களை அமைப்பது, ஏற்கனவே உள்ள மழைநீர் வடிகால்களைச் சீர் செய்வது எனச் சென்னை மாநகராட்சி எடுத்து வரும் முக்கிய நடவடிக்கைகளே இதற்குக் காரணமாக பேசப்பட்டு வருகிறது.
அதாவது, கடந்த 2021ம் ஆண்டு பருவமழையின் போது, சென்னை நகரில் மழைநீர் தேங்கியதால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன. அதன்பின், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் குழு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், உலக வங்கி நிதி மூலம் ரூ120 கோடி மதிப்பீட்டில், 48 கிமீ நீளத்திற்கும், உட்கட்டமைப்பு மற்றும் வசதிகள் நிதியில் 10 கிமீ நீளத்திற்கு ரூ26 கோடி மதிப்பீட்டிலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று, கொசஸ்தலை ஆறு வடிநிலப் பகுதியில் ரூ 3220 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, 80 சதவீத பணிகள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை முடிந்து, விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. பொதுவாகவே இந்த பருவமழை காலத்தில் தான் அதிக மழைப் பொழிவு இருக்கும். அக்டோபர் மாதத்தில் தொடங்கும் வடகிழக்கு பருவமழையின்போது கிடைக்கும் மழைநீர்தான் சென்னை மக்களின் தாகத்தை போக்கும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு ஆண்டும் இருக்கிறது. ஏனென்றால் இந்த பருவமழை காலத்தில் தான் சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகள் அனைத்தும் நிரம்புவதற்கான வாய்ப்பு இருக்கும்.
Esta historia es de la edición September 26, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 26, 2024 de Dinakaran Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
மழைநீர் கால்வாய் பணியால் கடும் நெரிசல்
கும்மிடிப்பூண்டி, அக். 2: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பஜார் பகுதிக்கு ஆத்துப் பாக்கம், மாதர்பாக்கம், வலுதலம்பேடு, புதூர், ரெட்டம்பேடு, ஆரம்பாக்கம், மங்காவரம், பொன்னேரி, தேவம்பேடு, பட்டுப்புள்ளி, அப்பாவரம், மேலகழனி, நத்தம், தேர்வழி, அயநெல்லூர், பெத்தி குப்பம், சுண்ணாம்புகுளம், மெதிபாளையம், ஓபசமுத்திரம் உள்ளிட்ட 150 கிராமங்களைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் தங்கள் தேவைக்கு கார், லாரி, இருசக்கர வாகனங்கள் மூலம் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
சேதமடைந்து காணப்படும் விஏஓ அலுவலக கட்டிடம்
கிருஷ்ணாகுப்பம் கிராமத்தில் சேதமடைந்து முட்புதர்கள் சூழ்ந்து காணப்படும் விஏஓ அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சாலையில் பள்ளம் தோண்டியதால் 16 மணிநேரம் போக்குவரத்து நிறுத்தம்
மணலியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக மணலி பகுதி முழுவதும் சிறிய, பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள்
மாவட்ட அளவிலான 'தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை' விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா திருவள்ளூரில் நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் த.பிரபு தலைமை தாங்கினார்.
புதிய டிரான்ஸ்பார்மர்கள்
செங்குன்றம் அடுத்த பாடிய நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மொண்டியம்மன் நகர், நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர், ஆட்டம் தாங்கள் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று பொன்னேரி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெண்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி
பழவேற் காடு மீனவப் பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு சுய தொழில் மூலம் வாழ்க் கையில் முன்னேறுவதற்கு சுய தொழில் பயிற்சிகள் இந்தியன் வங்கி சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திராவிலிருந்து குட்கா கடத்திய வாலிபர் கைது
திரு வள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு தடுக்கும் வகையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெட்ரோ ரயில்களில் 92.77 லட்சம் பேர் பயணம்
செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்காததால் பயணிகள் கடும் அவதி
ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடந்து செல்கின்றனர்.