சரியான பதிலடி கொடுக்கப்படும் ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை
Dinakaran Chennai|October 03, 2024
ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து எதிர்தாக்குதலுக்கு தயாராகிறது மத்திய கிழக்கில் போர் பதற்றம் நீடிப்பு
சரியான பதிலடி கொடுக்கப்படும் ஈரானுக்கு இஸ்ரேல் எச்சரிக்கை

தங்கள் நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தி மிகப்பெரிய தவறை செய்த ஈரான் அதற்காக மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டுமெனவும், அவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான பதிலடி தரப்படும் என்றும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதோடு, அடுத்த கட்ட தாக்குதல் நடத்த இஸ்ரேல் ராணுவம் தயாராகி வருவதால் மத்திய கிழக்கில் உச்சகட்ட போர் பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேலின் எதிர்தாக்குதலை எதிர்கொள்ள ஈரானும் தயார் நிலையில் இருப்பதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலில் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது.

ஹமாசுக்கு ஆதரவாக ஈரான் தயவில் செயல்படும் ஹிஸ்புல்லா, ஹவுதி படையினர் இஸ்ரேலுக்கு எதிராக தாக்குதல் நடத்தியதால், லெபனான், ஏமனுக்கு எதிராகவும் போர் விரிவடைந்தது. கடந்த 2 வாரமாக லெபனான் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல் ராணுவம், ஹிஸ்புல்லா தலைவர் நஸ்ரல்லா உள்ளிட்ட முக்கிய தளபதிகளை படுகொலை செய்தது. இஸ்ரேலின் தாக்குதலில் 1000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளனர். 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ளனர். அதோடு லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லாவை ஒட்டுமொத்தமாக அழிக்க இஸ்ரேல் ராணுவம் தரைவழி தாக்குதலையும் தொடங்கி உள்ளது. மறுபுறம் இந்த அமைப்புகளை ஆதரித்து வரும் ஈரானுக்கும் இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்தது.

இந்த சூழலில், லெபனான் மக்களை கொன்று குவிப்பதற்கு பதிலடியாக நேற்று முன்தினம் இரவு ஈரான் ராணுவம் 180க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் எனப்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் சக்திவாய்ந்த ஏவுகணைகளை இஸ்ரேலின் ராணுவ நிலைகளை குறிவைத்து ஏவியது. டெல் அவிவ் நகரின் வானில் ஈரான் ஏவுகணைகள் நுழைந்ததும் சைரன் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பீதி அடைந்த இஸ்ரேல் மக்கள் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்தனர். இந்த தாக்குதலில் பெரிய அளவில் சேதம் எதுவும் இல்லை என இஸ்ரேல் கூறி உள்ளது. ஆனாலும், இஸ்ரேல் மீதான ஈரானின் நேரடி தாக்குதல், போரை புதிய கட்டத்திற்கு விரிவுபடுத்தி உள்ளது.

Esta historia es de la edición October 03, 2024 de Dinakaran Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

Esta historia es de la edición October 03, 2024 de Dinakaran Chennai.

Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.

MÁS HISTORIAS DE DINAKARAN CHENNAIVer todo
நவராத்திரி விழா கொண்டாட்டம் பசு கோமியம் குடிச்சாதான் கர்பா நடனத்திற்கு அனுமதி
Dinakaran Chennai

நவராத்திரி விழா கொண்டாட்டம் பசு கோமியம் குடிச்சாதான் கர்பா நடனத்திற்கு அனுமதி

பசு கோமியம் அருந்துபவர்களுக்கு மட்டுமே கர்பா நடன அரங்கில் அனுமதி அளிக்க வேண்டும் என்று ம.பி. பாஜ நிர்வாகி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

time-read
1 min  |
October 03, 2024
ஏழுமலையான் கோயிலில் மகள்களுடன் பவன் கல்யாண் சாமி தரிசனம்
Dinakaran Chennai

ஏழுமலையான் கோயிலில் மகள்களுடன் பவன் கல்யாண் சாமி தரிசனம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் கலப்படம் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையை அடுத்து ஆந்திர மாநில துணை முதல்வரும், ஜனசேனா கட்சி தலைவருமான பவன்கல்யாண் 11 நாட்கள் பாவமன்னிப்பு விரதம் மேற்கொண்டார்.

time-read
1 min  |
October 03, 2024
பெண் மருத்துவர் பலாத்கார கொலை விவகாரம் மே.வங்கத்தில் மருத்துவர்கள் மீண்டும் போராட்டம்
Dinakaran Chennai

பெண் மருத்துவர் பலாத்கார கொலை விவகாரம் மே.வங்கத்தில் மருத்துவர்கள் மீண்டும் போராட்டம்

மருத்துவ சேவைகள் பாதிப்பு

time-read
1 min  |
October 03, 2024
ஜன் சுராஜ் என்ற பெயரில் பிரசாந்த் கிஷோர் கட்சி தொடங்கினார்
Dinakaran Chennai

ஜன் சுராஜ் என்ற பெயரில் பிரசாந்த் கிஷோர் கட்சி தொடங்கினார்

ஆட்சிக்கு வந்த ஒரு மணி நேரத்தில் மதுவிலக்கு ரத்து என வாக்குறுதி

time-read
1 min  |
October 03, 2024
மக்களவை தேர்தலை விட அதிகம் ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தலில் 69.65% வாக்குகள் பதிவு
Dinakaran Chennai

மக்களவை தேர்தலை விட அதிகம் ஜம்மு காஷ்மீர் இறுதிக்கட்ட தேர்தலில் 69.65% வாக்குகள் பதிவு

தலைமை தேர்தல் ஆணையம் தகவல்

time-read
1 min  |
October 03, 2024
1000 ஆண்டுகளுக்கு பின்னும் தூய்மை இந்தியா திட்டம் நினைவில் இருக்கும்
Dinakaran Chennai

1000 ஆண்டுகளுக்கு பின்னும் தூய்மை இந்தியா திட்டம் நினைவில் இருக்கும்

1000 ஆண்டுகளுக்கு பின்னரும் கூட தூய்மை இந்தியா திட்டம் மக்களின் மனதில் நீங்காமல் நினைவில் இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
October 03, 2024
அரசு திட்டங்கள், விளம்பரங்கள் இனி தமிழில் இருக்க வேண்டும் - இந்தி எப்படி புரியும்?
Dinakaran Chennai

அரசு திட்டங்கள், விளம்பரங்கள் இனி தமிழில் இருக்க வேண்டும் - இந்தி எப்படி புரியும்?

புதுச்சேரி கவர்னர் முன்னிலையில் முதல்வர் ரங்கசாமி அதிரடி உத்தரவு

time-read
1 min  |
October 03, 2024
எளிய குடும்பத்தில் பிறந்த என்னை அமைச்சராக்கிய முதல்வருக்கு நன்றி - கோவி.செழியன் பேட்டி
Dinakaran Chennai

எளிய குடும்பத்தில் பிறந்த என்னை அமைச்சராக்கிய முதல்வருக்கு நன்றி - கோவி.செழியன் பேட்டி

எளிய குடும்பத்தில் பிறந்த எளியவனான என்னை உயர்கல்வி துறை அமைச்சராக்கிய முதல்வருக்கு நன்றி என்று அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்து உள்ளார்.

time-read
1 min  |
October 03, 2024
தேசிய அளவில் மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும்
Dinakaran Chennai

தேசிய அளவில் மதுவிலக்கு சட்டம் இயற்ற வேண்டும்

ஒன்றிய அரசை வலியுறுத்தி விசிக மகளிர் மாநாட்டில் தீர்மானம்

time-read
1 min  |
October 03, 2024
ஏடிஎம் கொள்ளையர்களை கைது செய்த எஸ்.பி, போலீசாரை பாராட்டி டிஜிபி பரிசு
Dinakaran Chennai

ஏடிஎம் கொள்ளையர்களை கைது செய்த எஸ்.பி, போலீசாரை பாராட்டி டிஜிபி பரிசு

வடமாநில ஏடிஎம் கொள்ளையர்களை கைது செய்த நாமக்கல் எஸ்பி, டிஎஸ்பி உள்பட 23 பேருக்கு டிஜிபி வெகுமதி வழங்கி பாராட்டினார்.

time-read
1 min  |
October 03, 2024