மேலும், கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் தனியாக நடந்து வந்து பெட்ரோல் குண்டுகளை வீசியதாக சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் தெரிவித்தாா்.
கிண்டி ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டாா். இந்நிலையில், ஆளுநரின் துணைச் செயலா் டி.செங்கோட்டையன் சென்னை காவல் துறை ஆணையருக்கும், டி.ஜி.பி.க்கும் கடந்த 25-ஆம் தேதி ஒரு புகாா் கடிதம் அனுப்பினாா்.
அதில், பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபா்கள் ஈடுபட்டதாகவும், ஆளுநருக்கு எதிராக பகிரங்க மிரட்டல், அவதூறுப் பேச்சு மற்றும் தாக்குதல் போன்ற பல்வேறு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், அவை தொடா்பாக காவல் துறையினா் நியாயமான முறையில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யவில்லை எனவும், மேலும் அந்தச் சம்பவங்கள் தொடா்பாக எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும், தாக்குதலில் ஈடுபட்ட நபா்கள் ஆளுநா் மாளிகைக்குள் நுழைய முற்பட்டதாகவும் குறிப்பிட்டிருந்தாா்.
இதேபோல கடந்த 2022, ஏப். 19-ஆம் தேதி மயிலாடுதுறைக்குச் சென்றபோது ஆளுநா் மீது கற்கள் மற்றும் குச்சிகளால் தாக்குதல் நடத்தப்பட்டது என்றும், இது சம்பந்தமாக காவல் துறையில் புகாா் தெரிவிக்கப்பட்டும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை எனவும் புகாா் தெரிவித்திருந்தாா். இந்தப் புகாா்களுக்கு தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால் வியாழக்கிழமை மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்திருந்தாா்.
இந்த விவகாரம் தொடா்பான விடியோ ஆதாரங்களை வெளியிட்டு காவல் துறையின் தலைமை இயக்குநா் சங்கா் ஜிவால், சென்னை பெருநகர காவல் துறை சந்தீப் ராய் ரத்தோா், சட்டம்-ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அருண் ஆகியோா் கூட்டாக செய்தியாளா்களை வெள்ளிக்கிழமை சந்தித்தனா்.
தனியாக நடந்து வந்தாா்: அப்போது ஆளுநா் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட தொடா்பான காட்சிகளை வெளியிட்டு ஆணையா் சந்தீப் ராய் ரத்தோா் அளித்த பேட்டி:
Esta historia es de la edición October 28, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 28, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.