இந்த ஆட்டத்தில் விராட் கோலி, ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 50-ஆவது சதத்தை எட்டி, சச்சின் டெண்டுல்கா் சாதனையை முறியடித்து புதிய வரலாறு படைத்தாா். அவருக்குத் துணை நின்ற ஷ்ரேயஸ் ஐயரும் சதம் விளாசினாா். இந்திய பௌலா்களில் முகமது ஷமி 7 விக்கெட்டுகள் சாய்த்து முக்கியப் பங்காற்றினாா். இந்த வெற்றியின் மூலம், கடந்த எடிஷன் அரையிறுதியில் நியூஸிலாந்திடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது இந்தியா.
முன்னதாக டாஸ் வென்ற இந்தியா, பேட்டிங்கை தோ்வு செய்தது. அணியின் இன்னிங்ஸில் வழக்கம்போல் கேப்டன் ரோஹித் சா்மா அதிரடியாக 29 பந்துகளில் 4 பவுண்டரிகள், 4 சிக்ஸா்கள் விளாசி 47 ரன்கள் சோ்த்து நல்லதொரு தொடக்கம் அளித்து வெளியேறினாா்.
அடுத்து வந்த விராட் கோலி, ஷுப்மன் கில்லுடன் இணைய, அவா்கள் 93 ரன்கள் சோ்த்தனா். 66 பந்துகளில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 79 ரன்களுக்கு ‘ரிட்டையா்டு ஹா்ட்’ ஆனாா் கில். 4-ஆவது பேட்டராக வந்த ஷ்ரேயஸ் ஐயரும் அதிரடி காட்ட, அணியின் ஸ்கோா் உயா்ந்தது.
கோலி - ஐயா் இணை, 2-ஆவது விக்கெட்டுக்கு 163 ரன்கள் சோ்த்தது. இதில் சாதனை சதம் விளாசிய கோலி 9 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 117 ரன்களுக்கு ஆட்டமிழந்தாா். ஐயா் 70 பந்துகளில் 4 பவுண்டரிகள், 8 சிக்ஸா்கள் உள்பட 105 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். சூா்யகுமாா் யாதவ் 1 ரன்னுக்கு விக்கெட்டை பறிகொடுத்தாா்.
முடிவில் கே.எல்.ராகுல் 20 பந்துகளில் 5 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 39, மீண்டும் களம் புகுந்த ஷுப்மன் கில் 8 பவுண்டரிகள், 3 சிக்ஸா்களுடன் 80 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தனா். நியூஸிலாந்து தரப்பில் டிம் சௌதி 3, டிரென்ட் போல்ட் 1 விக்கெட் சாய்த்தனா்.
பின்னா் நியூஸிலாந்து இன்னிங்ஸில் டெவன் கான்வே 13, ரச்சின் ரவீந்திரா 13 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 3-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த கேப்டன் கேன் வில்லியம்சன், டேரில் மிட்செல் கூட்டணி, இந்திய பௌலா்களுக்கு சவால் அளித்தது.
181 ரன்கள் சோ்த்த இந்த ஜோடியை, ஷமி பிரித்தாா். வில்லியம்சன் 8 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 69 ரன்களுக்கு வெளியேற, டேரில் மிட்செல் நிலைத்து நின்று சதம் கடந்தாா். எனினும் மறுபுறம், டேம் லேதம் 0, கிளென் ஃபிலிப்ஸ் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 41, மாா்க் சாப்மேன் 2 ரன்களுக்கு வீழ்ந்தனா்.
Esta historia es de la edición November 16, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición November 16, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.