சென்னை வைக்கப்பட்டிருந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடலுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தினர். மேலும், தேமுதிகவினர், பொதுமக்கள் என பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர். இதனால் தீவுத்திடல் பகுதியே மக்கள் வெள்ளத்தில் மிதந்தது.
தீவுத்திடலில் அஞ்சலி: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் வியாழக்கிழமை (டிச.28) காலை 6.10 மணியளவில் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நாள் முழுவதும் வைக்கப்பட்டிருந்தது. அங்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கூட்டம் திரண்டதன் காரணமாக வெள்ளிக்கிழமை (டிச.29) காலை 5.10 மணியளவில் அவர் உடல் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு, தீவுத்திடலில் காலை 6 மணியளவில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப் பட்டது.
தீவுத்திடலில் மேடை அமைக்கப்பட்டு, அதன் மேல் சாய்வாக எல்லோருக்கும் தெரியும் வகையில் கண்ணாடிப் பேழையில் விஜயகாந்த் உடல் வைக்கப்பட்டது.
விஜயகாந்த் உடலுக்கு அருகில் அவர் மனைவி பிரேமலதா, மகன்கள் விஜய பிரபாகரன், சண்முகப் பாண்டியன், மைத்துனர் எல்.கே.சுதீஷ் ஆகியோர் இருந்தனர்.
தமிழகம் முழுவதும் திரண்டுவந்திருந்த பல்லாயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருந்த கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.
ஆளுநர் அஞ்சலி: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, விஜயகாந்த் உட லுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பிரேமலதாவுக்கும், மகன்களுக்கும் ஆறுதல் கூறினார்.
மத்திய அரசின் சார்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அஞ்சலி செலுத்தினார். பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, மூத்த நிர்வாகிகள் பொன்.ராதாகிருஷ்ணன், கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
Esta historia es de la edición December 30, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición December 30, 2023 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
சமூக நீதி இந்தியாவை உருவாக்க பாடுபட்டவர் சீதாராம் யெச்சூரி
முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
இலங்கை அதிபராகப் பதவியேற்றார் அநுர குமார திசாநாயக
இலங்கையின் புதிய அதிபராக ஜனதா விமுக்தி பெரமுன கட்சியின் தலைவர் அநுர குமாரதிசாநாயக திங்கள் கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
சாதனைப் பட்டியலில் இந்தியா
செஸ் ஒலிம் பியாட் போட்டி வரலாற்றில், ஒரே எடிஷனில் ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலுமே தங்கம் வென்ற 3-ஆவது நாடாகியிருக் கிறது இந்தியா.
தலித் விரோத கட்சி காங்கிரஸ்: அமித் ஷா குற்றச்சாட்டு
தலித் மக்களுக்கு எதிரான கட்சியாக காங்கிரஸ் செயல்பட்டு வருகிறது என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றம்சாட்டினாா்.
ஜம்மு-காஷ்மீரின் மாநில அந்தஸ்துக்கு வலியுறுத்தப்படும்: ராகுல் உறுதி
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிக்க மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி அழுத்தம் கொடுக்கும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
வெற்றி பெறுமா தமிழக வெற்றிக் கழகம்?
அரசியலில் புதிய வரவான நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம், தமிழ்நாட்டு அரசியல் களத்தில் எந்த அளவுக்கு பரிணமிக்கும் என்ற விவாதம் பரவலாகி உள்ளது.
பாரதியார் எனும் நித்தியசூரி !
மகாகவி பாரதி யாா்? நித்தம் நித்தம் செத்துக் கொண்டிருந்த தமிழனுக்குப் பாட்டுப் பாடி உயிா் கொடுத்தவா்; பண்டிதா்கள் மடியிலே கட்டி வைத்திருந்த தமிழைப் பாமரனும் உண்ணும்படி பந்தியிலே பரிமாறியவா்; கடந்த காலத்தின் தவம்; நிகழ்காலத்தின் வரம், நேற்றைய தமிழனின் ஒற்றையடிப் பாதை; இன்றைய மானிடரின் இராஜபாட்டை. பழமையின் எதிரி; புதுமையின் நீதிபதி மகாகவி பாரதியாா்.
தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்கள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
ஹெச்.பைலோரி கிருமியால் ஏற்படும் இரைப்பை புண்கள் கண்டறிய புதிய ஆய்வு
நோபல் விருதாளர் டாக்டர் பேரி ஜெ.மார்ஷல்
'தமிழகத்தில் 16 ஆண்டுகளில் 7,207 உறுப்புகள் தானம்'
தமிழகத்தில் கடந்த 16 ஆண்டுகளில் மூளைச் சாவு அடைந்த 1,998 பேரிடம் இருந்து 7,207 உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டு தகுதியானவா்களுக்கு பொருத்தி மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.