வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிட திமுக இளைஞரணியினருக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் திமுக இளைஞரணி செயலாளரும் சருமான உதயநிதி வேண்டுகோள் விடுத்தார்.
திமுக இளைஞரணி இரண்டாவது மாநில மாநாடு சேலம், பெத்தநாயக்கன்பாளையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
சேலத்தில் நடத்தப்படும் திமுக இளைஞரணி மாநாட்டை இந்தியாவே திரும்பிப் பார்க்கிறது. இளைஞரணி செயலாளராக2019இல் நான் பொறுப்பேற்று நான்கரை ஆண்டுகள் முடிந்துள்ளது. எனது வாழ்நாளில் ஜன. 21-ஆம் தேதியை மறக்கவே முடியாது.
நீட் தேர்வு ரத்து: மாணவர்களின் மருத்துவக்கல்வி கனவை கலைக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய உண்ணாவிரதம் நடத்தினோம். நீட் தேர்வை ரத்து செய்யவலியுறுத்தி, 50 லட்சம் கையொப்பம் பெறுவதற்காக நடத்தப்பட்ட இயக்கத்தில் இதுவரை 85 லட்சம் பேரிடம் கையொப்பம் பெற்றுள்ளோம். இளைஞரணி சார்பில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம். மருத்துவக் கல்வி மட்டுமல்லாது அனைத்துக் கல்விக்கும் நுழைவுத் தேர்வு நடத்த புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
உரிமை பறிப்பு: மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் விதமாக பல்வேறு துறைகளை மத்திய அரசு பறித்து வைத்துள்ளது. மாநில எடப் அரசின் வசம் மீண்டும் அத்துறைகளை வழங்க வேண்டும். எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான முந்தைய அதிமுக ஆட்சியில்தான் மாநில உரிமைகளை, மத்திய அரசு பறித்துக் கொண்டது.
Esta historia es de la edición January 22, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición January 22, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.