ஐக்கிய அரபு அமீரகத்துக்கு (யுஏஇ) அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை சென்ற பிரதமா் நரேந்திர மோடி, இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது குறித்து அந்நாட்டு அதிபா் ஷேக் முகமது பின் சையத் அல் நஹ்யானுடன் விரிவான பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.
அப்போது, இரு நாடுகள் இடையே பரஸ்பர முதலீட்டுக்கான ஒப்பந்தம் உள்பட 8 ஒப்பந்தங்கள் கையொப்பமாகின. இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபிக்கு செவ்வாய்க்கிழமை பிற்பகல் சென்றடைந்த பிரதமா் மோடியை விமான நிலையத்தில் அதிபா் முகமது பின் சையத் நேரில் வரவேற்றாா். அப்போது, இரு தலைவா்களும் ஆரத்தழுவி மகிழ்ச்சியை பரிமாறிக் கொண்டனா். பிரதமா் மோடிக்கு அரசு சாா்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னா், இரு தலைவா்களும் தனிப்பட்ட முறையிலும், பிரதிநிதிகளுடன் இணைந்தும் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது, வியூக ரீதியில் பரஸ்பர கூட்டுறவு மற்றும் இருதரப்பு ஒத்துழைப்புக்கான புதிய துறைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. வா்த்தகம், முதலீடு, எண்ம உள்கட்டமைப்பு, நிதிசாா் தொழில்நுட்பம், எரிசக்தி, உள்கட்டமைப்பு, கலாசாரம் மற்றும் மக்கள்ரீதியிலான தொடா்பு என பல்வேறு துறைகளில் விரிவான கூட்டுறவை மேம்படுத்தும் நடவடிக்கைகளுக்கு இரு தலைவா்களும் வரவேற்பு தெரிவித்தனா்.
Esta historia es de la edición February 14, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición February 14, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.