சேலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றினார். இந்தக் கூட்டத்தில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.
பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் பேசியது வருமாறு:
கே.அண்ணாமலை: தேசிய ஜனநாயக கூட்டணி மூன்றாவது முறையாக வெற்றி பெற்று பிரதமராக மோடி ஆட்சியில் அமருவார். இந்த முறை 400-க்கும் மேற்பட்ட தொகுதிகளை தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்ற வேண்டும். அப்போதுதான் நாட்டில் வறுமையை ஒழிக்க முடியும்; விவசாயிகள், மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட முடியும். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும்.
அன்புமணி ராமதாஸ்: மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக மோடி பதவியேற்பது உறுதி. அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. நாட்டின் நலன் கருதியும், தமிழகத்தின் நலன் கருதியும் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
தமிழகத்தில் 57 ஆண்டுகளாக திமுக, அதிமுக கட்சிகள் ஆட்சி புரிந்து வருகின்றன. மக்கள் அனைவரும் மாற்றம் வேண்டும் என்ற ஏக்கத்தில் உள்ளனர். அந்த ஏக்கத்தைப் போக்க, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக மகிழ்ச்சியுடன் இணைந்துள்ளது.
டி.டி.வி.தினகரன்: பிரதமர் மோடி மூன்றாவது முறையாகப் பிரதமராவார். அதற்காக தமிழகத்தில் அமமுக கடினமாக உழைக்கும். அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற, நாம் அனைவரும் இணைந்து ஒரு மாதம் கடுமையாக உழைக்க வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம்: மத்தியில் சிறப்பான நிர்வாகத்தை வழங்கி வருபவர் பிரதமர் மோடி. மாநில அரசுகளுக்கு தாராளமாக நிதி வழங்கியவர்.
முந்தைய காங்கிரஸ் ஆட்சிக் காலங்களில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி பெற மாநில அரசுகள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்க நேரிட்டது. ஆனால், தன்னுடைய ஆட்சிக் காலத்தில், ஒரே அரசாணையில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை தமிழகத்திற்கு பிரதமர் மோடி வழங்கினார். தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும்.
Esta historia es de la edición March 20, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 20, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.