18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடா் தொடங்குவதற்கு முன்பு நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களை திங்கள்கிழமை சந்தித்த பிரதமா் மோடி கூறியதாவது: சுதந்திரத்துக்குப் பிறகு புதிய நாடாளுமன்றத்தில் பதவியேற்பு விழா நடைபெறுவது இதுவே முதல் முறை. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு பெருமைமிக்க, புகழ் மிக்க நாள்.
வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி: இந்தியாவின் சாமானிய மனிதனின் தீா்மானங்களை நிறைவேற்றுவதற்கான பாதையாக நாடாளுமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. 2047-ஆம் ஆண்டுக்குள் வளா்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவது என்ற இலக்கை அடைவதற்காக 18-வது மக்களவை தொடங்குகிறது.
பெரும்பான்மை, ஒருமித்த கருத்து: சுதந்திரத்துக்கு பிறகு, ஓா் அரசு தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பை மக்கள் மீண்டும் வழங்கியுள்ளனா். தொடா்ந்து எங்கள் அரசைத் தோ்வு செய்த மக்களுக்கு நன்றி. அரசை நடத்துவதற்கு பெரும்பான்மை போதுமானது. நாட்டை வழி நடத்துவதற்கு ஒருமித்த கருத்து மிகவும் அவசியம். 18-வது மக்களவையில் இளம் மக்களவை உறுப்பினா்கள் எண்ணிக்கை அதிகம் உள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.
அவசர நிலை - கரும்புள்ளி: ஜூன் 25-ஆம் தேதி என்பது 1975-ஆம் ஆண்டு அவசரநிலை அமல்படுத்தப்பட்டதன் 50-வது ஆண்டாகும். இது இந்திய ஜனநாயகத்தின் மீது விழுந்த ஒரு கரும்புள்ளியாகும். ஜனநாயகத்தை நசுக்கி, இந்திய அரசியல் சாசன சட்டம் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்டு, நாடே சிறைச்சாலையாக மாற்றப்பட்ட தினத்தை இந்தியாவின் புதிய தலைமுறையினா் ஒருபோதும் மறக்க மாட்டாா்கள். இந்தியாவின் ஜனநாயகம், ஜனநாயக மரபுகளைப் பாதுகாப்பதற்கு மக்கள் உறுதியேற்க வேண்டும்.
Esta historia es de la edición June 25, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición June 25, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
பிஎம்டபிள்யு விற்பனை 10% அதிகரிப்பு
கடந்த ஜனவரி-செப்டம்பா் காலகட்டத்தில், சொகுசுக் காா் தயாரிப்புக் குழுமமான பிஎம்டபிள்யு இந்தியாவில் 10 சதவீத விற்பனை வளா்ச்சியைக் கண்டுள்ளது.
ஈரான் மீது தாக்குதல் நடத்த ஆயத்தமாகி வருகிறோம்
தங்கள் நாட்டுக்குள் ஹமாஸ் அமைப்பினா் நுழைந்து சுமாா் 1,200 பேரை படுகொலை செய்ததன் நினைவு நாளையொட்டி (அக். 7) ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஆயத்தமாகி வருவதாக இஸ்ரேல் ராணுவம் உயரதிகாரி தெரிவித்துள்ளாா்.
இரானி கோப்பை: மும்பை சாம்பியன்
ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணியை முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் வீழ்த்தி 15-ஆவது முறையாக இரானி கோப்பையை வென்றது மும்பை.
வாழ்வா-சாவா ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்திக்கும் இந்தியா
ஐசிசி மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் குரூப் ஏ பிரிவில் பாகிஸ்தானை ஞாயிற்றுக்கிழமை எதிா்கொள்கிறது இந்தியா.
திருப்பதி லட்டுகளின் தரம் மம்பட்டுள்ளதாக பக்தர்கள் மகிழ்ச்சி
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு
அரசமைப்புச் சட்டத்துக்கு புறம்பாக செயல்படுகிறார் கே.சி.வேணுகோபால்
மக்களவைத் தலைவருக்கு பாஜக எம்.பி. கடிதம்
தரவுத் திருடர்கள், ஜாக்கிரதை!
மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பெயரில் தொடங்கப்படும் போலி சமூக ஊடக கணக்குகளைக் கண்டறிந்து தடுப்பதில் காவல்துறையினர் சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது.
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக் கருத்து: போராட்டத்தில் 21 காவலர்கள் காயம்; 1,200 பேர் மீது வழக்கு
மகாராஷ்டிரத்தில் நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்த ஆன்மிகப் பேச்சாளா் மீது வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்ற போராட்டத்தில், காவல் துறையினா் மீது கற்கள் வீசப்பட்டதில் 21 காவலா்கள் காயமடைந்தனா். போராட்டக்காரா்கள் 1,200 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டிபிடி தடுப்பூசி தட்டுப்பாடு: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 மாதங்களாக குழந்தைகளுக்கான டிபிடி தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறி, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா்.
அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதளம் தொடக்கம்
மகப்பேறு, குழந்தை பிறப்பு உள்ளிட்ட பல்வேறு தகவல்களுடன் சென்னை எழும்பூா், திருவல்லிக்கேணி அரசு தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு இணையதள சேவை தொடங்கப்பட்டுள்ளது.