இதையடுத்து, புதிய முதல்வராகத் தேர்வு செய்யப்பட்ட கல்வி அமைச்சர் அதிஷி ஆட்சிய மைக்க துணைநிலை ஆளுநரிடம் உரிமைகோரினார்.
முன்னதாக, செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்ஸேனாவை மாலை 4.30 மணியளவில் ராஜ் நிவாஸில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், அமைச்சரவை சகாக்களுடன் அரவிந்த் கேஜரிவால் சந்தித்தார்.
துணைநிலை ஆளுநரிடம் ராஜிநாமா கடிதத்தை கேஜரிவால் வழங்கினார். இதையடுத்து, புதிய முதல்வராக அதிஷி பதவியேற்க ஏதுவாக அவரை கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராகத் தேர்வு செய்துள்ளதாகவும் துணைநிலை ஆளுநரிடம் கேஜரிவால் தெரிவித்தார்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அதிஷியும், மூத்த அமைச்சர் கோபால் ராயும் விவரித்தனர். அதிஷி கூறுகையில், 'எனது தலைமையில் புதிய அரசு அமைக்க துணைநிலை ஆளுநரிடம் உரிமை கோரியுள்ளோம். தில்லி மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் நான் கடமையாற்றுவேன்' என்றார்.
அமைச்சர் கோபால் ராய் கூறுகையில், 'புதிய முதல்வராக அதிஷியை பதவியேற்க அழைக்கும்படி துணைநிலை ஆளுநரை கேட்டுக் கொண்டோம். அவரை கட்சியின் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்வு செய்த முடிவை அவரிடம் தெரிவித்தோம். அதிஷி பதவியேற்கும் நாளை தீர்மானித்து விரைவாக தெரிவித்தால் இரண்டு கோடி தில்லி மக்களின் பணிகளை தொடர்ந்து செயல்படுத்த இயலும் என்று துணைநிலை ஆளுநரிடம் தெரிவித்தோம்' என்றார்.
Esta historia es de la edición September 18, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición September 18, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
லெபனானில் பேஜர்கள் வெடித்து 8 பேர் உயிரிழப்பு: 2,750 பேர் காயம்
லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்; 2,750 போ் காயமடைந்தனா்.
இந்தியா சாம்பியன்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா 1-0 என சீனாவை வீழ்த்தி 5-ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.
விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸுக்கு என்மீது கோபம்
விநாயகா் சதுா்த்தி பூஜையில் பங்கேற்ற்கு என் மீது காங்கிரஸ் கோபம் கொண்டுள்ளது.
பிரதமர் மோடியின் 74-ஆவது பிறந்தநாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
பிரதமா் நரேந்திர மோடியின் 74-ஆவது பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்: உச்சநீதிமன்றம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அமித் ஷா
நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கம் பாமக
சமூக நீதிக்காக பாமக தொடர்ந்து போராடி வருவதாக அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உரை
திமுக முப்பெரும் விழாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வா் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காணொலி அனைவரையும் கவா்ந்தது.
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோரை மேம்படுத்துவது குறித்த மாநாடு
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சமூகத்துடன் இணைப்பது குறித்து சென்னையில் செப்.21,22 ஆகிய தேதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது.
விளையாட்டு வீரர்களின் காயங்களை கண்டறிய நவீன ஸ்கேனர் கருவி
விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களை கண்டறிய கையடக்க ‘பாயின்ட் ஆஃப் கோ் அல்ட்ராசவுண்ட்’ (பிஓசியுஎஸ்) என்ற ஸ்கேனா் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.