திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு புதிதாக மாற்றுப் பாதை அமைப்பது குறித்து கொடைக்கானலிலிருந்து சுமாா் 12 கி.மீ. தொலைவில் வில்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கோவில்பட்டி, புலியூா் சாலைகளை அமைச்சா் எ.வ. வேலு புதன்கிழமை பாா்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினாா்.
பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் முக்கியமான சுற்றுலாத் தலமான கொடைக்கானலுக்கு வார இறுதி நாள்களிலும், சீசன் காலங்களிலும் தமிழகம் உள்பட பல மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். இதுபோன்ற நாள்களில் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கொடைக்கானலுக்கு வருகின்றன.
கொடைக்கானல் செல்வதற்கான வத்தலகுண்டு-கொடைக்கானல் மலைச் சாலையானது 58 கி.மீ. நீளமும், 7 மீ. அகலமும் உடையது.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமங்களில் விளையும் பழங்கள், காய்கறிகள், வாசனைப் பொருள்கள் தினந்தோறும் திண்டுக்கல், மதுரை, ஒட்டன்சத்திரம் சந்தைகளுக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் மூலம் எடுத்துச் செல்லப்படுகின்றன. மேலும், கொடைக்கானலில் சா்வதேச பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகம், நட்சத்திர விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
Esta historia es de la edición October 10, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 10, 2024 de Dinamani Chennai.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar

போபால் நச்சுக் கழிவு அகற்றம்: ம.பி. உயர்நீதிமன்ற உத்தரவில் தலையிட உச்சநீதிமன்றம் மறுப்பு
மத்திய பிரதேச மாநிலம், போபாலில் கடந்த 1984-இல் விஷவாயு கசிந்த ஆலையில் இருக்கும் நச்சு கழிவுகளை தார் மாவட்டம் பீதம்பூர் பகுதிக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பான முறையில் எரித்து அழிப்பதற்கு மாநில உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் தலையிட உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்தது.

எஸ்ஏ பொறியியல் கல்லூரியின் 23-ஆவது பட்டமளிப்பு விழா
சென்னை பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள எஸ்ஏ பொறியியல் கல்லூரியின் 23-ஆவது பட்டமளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
216 தொழிற்பழகுநர்களுக்கான உதவித் தொகையை மத்திய அரசு வழங்கவில்லை
மின்வாரியம்

தேர்தலில் வெற்றி பெற போலி வாக்காளர்களைப் பயன்படுத்தும் பாஜக
மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

டாடா ப்ளேயுடன் ஏர்டெல் டிடிஹெச்-ஐ இணைக்க பேச்சு
இழப்பைச் சந்தித்துவரும் தனது தொலைக்காட்சி சேவைப் பிரிவான ஏர்டெல் டிடிஹெச்-ஐ டாடா குழுமத்தின் டிடிஹெச் சேவைப் பிரிவான டாடா ப்ளேயுடன் இணைப்பது குறித்து பார்தி ஏர்டெல் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
ஊரகத் திறனாய்வுத் தேர்வு விடைக்குறிப்பு: மார்ச் 5-க்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம்
ஊரகத் திறனாய்வுத் தேர்வுக்கான விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ள நிலையில், அது குறித்து மார்ச் 5-க்குள் ஆட்சேபணை தெரிவிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது.

தமிழக மின்வாரியம் கோரிய ரூ.3,200 கோடிக்கு ஒப்புதல் வழங்க வேண்டும்
அமைச்சர் செந்தில் பாலாஜி வலியுறுத்தல்
தமிழகத்தில் ரூ.33,467 கோடிக்கு ரயில்வே திட்டப் பணிகள்
தமிழ்நாட்டில் ரூ.33,467 கோடிக்கு ரயில்வே திட்டப் பணிகள் நடைபெறுகின்றன என்று மத்திய ரயில்வே மற்றும் நீர் வளத் துறை இணை அமைச்சர் வி. சோமண்ணா கூறினார்.

விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல்
சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
மகாராஷ்டிரத்திலிருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயம் பறிமுதல்: 8 பேர் கைது
மகாராஷ்டிரத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டு, 8 பேர் கைது செய்யப்பட்டனர்.