யுர்வேதம் மனிதனின் ஆயுளை 100 ஆண்டுகள் என்கிறது. அவ்வளவு ஆண்டுகள் வாழ்ந்தவர்களைத் தேடினால், ஸ்ரீரங்கத்தில் 120 ஆண்டுகள் வாழ்ந்த வைணவச் செம்மலான ஸ்ரீராமானுஜாச் சாரியாரின் திவ்ய சரீரம் இன்றும் பாதுகாக்கப்பட்டு வருவது மட்டும் நமக்குத் தெரிகிறது. மனிதர்கள் பல காலம் இருப்பது துர்லபம். ஆனால், மாமனிதர்களால் தொடங்கப் பெற்ற, அருளாளர்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அமைப்புகள், மடங்கள் பல நூற்றாண்டுகளாக மக்கள் சேவையில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கின்றன.
கை, கால்கள் அசைவது தெரிகிறது. ஆனால், இதயம் துடிப்பதை வெகு சிலரே அவதானிப்பர். அதுபோன்று, சென்னையில் 127 ஆண்டுகள் தொய்வின்றித் தொடர்ச்சியாக ஆன்மிக, சமய, மருத்துவ, கல்வி, பண்பாடு, புத்தக வெளியீடு, இளைஞர் முன்னேற்றம், பெண்கள் முன்னேற்றம், சுய தொழில் வளர்ப்பு மற்றும் பேரிடர் காலங்களில் மக்களுக்கு உணவையும் துணிகளையும் துணிவையும் வழங்கிச் சேவையாற்றி வருகிறது சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம்.
இந்த மடத்தைத் தொடங்கியவர் சுவாமி ராமகிருஷ்ணானந்தர். அவர் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணரின் 16 செல்வங்களாக வந்தமைந்த சீடர்களுள் ஒருவர். சுவாமி விவேகானந்தரால் தென்னகத்துக்கு அனுப்பப்பட்டு ராமகிருஷ்ண இயக்கத்தை நிறுவியவர். சுவாமிகள் ஆரம்பித்த எதுவும் சிறிதாகத் தொடங்கும்; சீர்மையாக மலரும்; தொய்வில்லாமல் நடைபெறும்; தொடர்ந்து மக்களுக்கு பயன் தரும்.
சென்னை, ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் சேவைகளுள் முக்கியமான ஒன்றான தர்ம வைத்தியசாலை தனது நூற்றாண்டை இன்று கொண்டாடுகிறது. ஒரு ரூபாய்க்கு ஒரு கோப்பை தேநீர் கூடக் கிடைக்காத இந்தக் காலத்தில், இந்த மருந்தகத்தில் வரும் நோயாளிகள் ஒரு ரூபாய் கொடுத்தாலே போதும்; மருத்துவர்களின் நேரடி ஆலோசனை பெற்று இலவசமாக மருந்துகளும் வாங்கிச் செல்லலாம்.
Esta historia es de la edición March 22, 2025 de Dinamani Cuddalore.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 22, 2025 de Dinamani Cuddalore.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
கல்வித் துறை ஆர்எஸ்எஸ்வசம் சென்றால் இந்தியாவை அழித்துவிடுவார்கள்
மாணவர்கள் மத்தியில் ராகுல் பேச்சு
நேபாளம்: குறைக்கப்படும் திருமண வயது வரம்பு
நேபாளத்தில் திருமணத்துக்கான வயது வரம்பை 20-லிருந்து 18-ஆகக் குறைக்க அந்த நாட்டு அரசு ஆயத்தமாகி வருகிறது.
இஸ்லாமியர்களின் அரசியல் உரிமைகளை நிலைநிறுத்தும் காவல் அரண் திமுக
முதல்வர் மு.க.ஸ்டாலின்
வேல் யாத்திரைக்கு அனுமதி கோரிய மேல்முறையீட்டு மனு தள்ளுபடி
திருப்பரங்குன்றம் மலை சர்ச்சை விவகாரத்தில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி பாரத் இந்து முன்னணி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
நிதிச் செயலராக அஜய் சேத் நியமனம்
மூத்த ஐஏஎஸ் அதிகாரி அஜய் சேத் நிதிச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
திருப்பரங்குன்றம் கோயிலில் ரோப்கார் வசதி
அமைச்சர் பி.கே.சேகர்பாபு உறுதி
நாராயணசாமியின் பேச்சை பொருள்படுத்த வேண்டாம்
புதுவை முதல்வர் என்.ரங்கசாமி
தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு: எம்எல்ஏக்கள் கோரிக்கை
புதுச்சேரியில் தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பேரவைக் கூட்டத்தில் எம்எல்ஏக்கள் வலியுறுத்தினர்.
பிழையில்லாத வாக்காளர் பட்டியலை உறுதி செய்ய வேண்டும்
பிழையில்லாத வாக்காளர் பட்டியலைத் தயாரித்து தேர்தலுக்கு முன்பாக வெளியிட வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.
திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் பொதுவானது
மதுரை திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் பொதுவானது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.