சென்னையை கலக்கிய ப வடமாநில கொள்ளையன் இன்று சுட்டுக் கொலை!

சென்னையில் நேற்று ஒரே நாளில் 8 பெண்களிடம் தங்கச் சங்கிலிகள் பறிக்கப்பட்டன. இது தொடர்பாக வட மாநில கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டார்கள். அதில் 2 பேர் சென்னை விமான நிலையத்தில் சிக்கினர். ஒருவர் ரெயிலில் தப்பிய போது ஆந்திரத்தில் சிக்கினார். இவர்களில் முக்கிய நபர் இன்று காலை இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்டு தப்பிக்க முயன்ற போது போலீசாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
சென்னையில் நேற்று ஒரு மணிநேரத்தில் அடுத்தடுத்து 8 இடங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடந்தன. அதாவது மோட்டார் சைக்கிளில் வந்த 2 ஆசாமிகள், தனியாக சென்ற பெண்களிடம் தங்கச் சங்கிலிகளை பறித்தனர்.
இந்த கொள்ளைச் சம்பவம் சைதாப்பேட்டை, வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்தது. 2 நபர்களும் முகம் தெரியாதபடி முகமூடி அணிந்திருந்தனர்.
ஒரே நேரத்தில் 8 இடங்களில் தங்கச் செயின் பறிப்பு சம்பவங்கள் அரங்கேறி இருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் அப் பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
இதில் இந்த 8 இடங்களில் கைவரிசை காட்டியது வடமாநிலத்தை சேர்ந்த 2 நபர்கள் என்பது தெரியவந்தது. இதற்குமுன்பாக பொங்கல் தினத்தின்போதும் அவர்கள் பல்வேறு இடங்களில் நகைப்பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
Esta historia es de la edición March 26, 2025 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición March 26, 2025 de Malai Murasu.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
முதல்வர் ஸ்டாலினுக்கு எர்ணாவூர் நாராயணன் பாராட்டு!
திருச்சியில் 290 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயர் சூட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக எர்ணாவூர் நாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை: இந்தியா மீதான 100 சதவீத வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது!
இந்தியாவிற்கு போட்டியாக பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மதுரவாயலில் 2 ஜே.சி.பி. எந்திரங்களின் பேட்டரிகள் திருட்டு!
மதுரவாயலில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே நிறுத்தப்பட்ட 2 ஜே.சி.பி. எந்திரங்களின் பேட்டரிகள் இரவில் திருடப்பட்டது.
காஷ்மீருக்குள் ஊடுருவிய 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொலை!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் இந்திய நிலைகளை நோக்கி தாக்குதல் நடத்தினர்.
அண்ணாமலை வேண்டும்; அ.தி.மு.க. வேண்டாம்!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அண்ணாமலைக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கச்சத்தீவை தாரை வார்த்த தி.மு.க.வே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது! டி.டி.வி. தினகரன் அறிக்கை!!
கச்சத்தீவை தாரைவார்த்த திமுகவே, அதனை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா : 35 பெண்களுக்கு சூரிய மகள் விருது! துர்கா ஸ்டாலின், நடிகர்கள் பிரபு, சத்தியராஜ் வழங்கினர்!!
முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு சாதனை புரிந்த மகளிர் 35 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பல்லாவரம் அருகே பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற கள்ளக்காதலன்!
பல்லாவரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற தாம்பரம் மாநகராட்சி லாரி ஓட்டுநர், தானாகவே சென்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

திருப்போரூர் அருகே பைக் மீது கார் மோதி 3 பேர் பரிதாப சாவு!
திருப்போரூர் அருகே மோட்டார்சைக்கிள்மீது கார் மோதியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகிவிட்டார்கள்.

கச்சத்தீவை மத்திய அரசுமீட்கவேண்டும்!
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!!