அவர் ஏற்கனவே அறிமுகமானவர் தான். பரிசோதனையை முடித்து, முதலுதவி சிகிச்சையளித்து பின் நீர்ச்சத்து குறைபாடு இருந்ததால் நரம்பு வழியாக ட்ரிப்ஸ் ஏற்றத் துவங்கினேன்.
அடுத்து வந்த நோயாளி முப்பிடாதியின் உறவினர்.
‘என்ன? எங்க அத்தை இங்கே படுத்திருக்காங்க? ஒத்தையிலேயா வந்தாங்க? இப்படி ஒருநாளும் அசந்து படுக்க மாட்டாங்களே!' என்றவர் அத்தையின் பிள்ளைகளுக்குத் தகவல் சொன்னார். அவர்கள் வருவதற்குள் அத்தையின் பெருமைகளை பற்றிக் கதை கதையாகச் சொன்னார்.
முப்பிடாதி நான்காவது தலைமுறை பார்த்துவிட்டவர். சமீபமாக அவரது பேத்திக்குக் குழந்தை பிறந்திருக்கிறது. பேத்தியின் குழந்தை உட்பட அனைவருக்கும் பக்குவம் பார்ப்பது முப்பிடாதி பாட்டி தானாம். எல்லா வேலையும் எங்க அத்தையை செய்ய வச்சிட்டு அவங்க மக, மகன் எல்லாம் சொகுசா இருக்காங்க என்று அங்கலாய்ப்புடன் பேசினார் அவரது உறவுப் பெண்.
பின் உறவினர்கள் வந்ததும் அவர்களிடமும் கடிந்து ஓரிரு வார்த்தைகள் கூறிவிட்டு கிளம்பினார். அவர்களும் புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார்கள், மறுத்துப் பேசவில்லை.
அடுத்தடுத்த நாட்களும் சிகிச்சைக்கு வர வேண்டியது இருந்தது முப்பிடாதி பாட்டிக்கு.
அப்போது கொஞ்சமாகத் தேறி நன்றாகப் பேசும் நிலையில் இருந்தார்.உடன் வந்த மகனும் மருமகளும், ரெஸ்ட் எடுங்கன்னா கேட்க மாட்டேங்கிறாங்க. இழுத்துப் போட்டு எல்லா வேலையும் பார்க்கிறாங்க... என்றனர்.
"அப்படியே பழகிப் போச்சு. எனக்குக் கல்யாணம் ஆகிக் கொஞ்ச நாள்ல மாமியார் தவறிட்டாங்க. நான் தான் மூத்த மருமகள். எனக்கு ஏழு நாத்தனார், இரண்டு கொழுந்தன். அவ்வளவு பேருக்கும் வரன் பாத்து, கட்டி வச்சேன். மாத்தி மாத்தி ஒவ்வொருத்தரா பேறுகாலத்துக்கு தாய் வீடுன்னு எங்க வீட்டுக்குத் தான் வருவாங்க. இதுக்கு இடையில எனக்கும் நாலு பிள்ளைங்க.
Esta historia es de la edición October 09, 2024 de Kanmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor ? Conectar
Esta historia es de la edición October 09, 2024 de Kanmani.
Comience su prueba gratuita de Magzter GOLD de 7 días para acceder a miles de historias premium seleccionadas y a más de 9,000 revistas y periódicos.
Ya eres suscriptor? Conectar
குழந்தைகளை பாதிக்கும் கலப்பட உணவு!
டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது உலக உணவு கட்டுப்பாட்டாளர் உச்சி மாநாட்டிற்காக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டார். அதில் வெளியான தகவல் ஒன்று அதிர்ச்சிகரமானது.
என்னோட வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது!
தமிழில் பீல்டு அவுட் ஆன நிலையில்... தெலுங்கு, கன்னட படம் என தன் இருப்பை மாற்றிய பிரியா மணி, தற்போது இந்தியில் வெற்றிகரமாக பயணிக்கும் நடிகை. திரைத்துறையில் 22 ஆண்டுகளாக கோலாச்சும் பிரியாமணியுடன் ஒரு அழகான உரையாடல்.
அருகில் வசிக்கும் தேவதைகள்!
அன்றைய தினம் ஒரே நாளில் இரண்டு முதிய பெண்மணிகளுக்கு சிகிச்சை அளிக்க நேர்ந்தது. இருவரிடையே சில ஒற்றுமைகள், சில வேற்றுமைகள். முதலில் வந்தவர் முப்பிடாதி. அவருக்கு லேசான காய்ச்சல், சர்க்கரை அளவும் அதிகமாக இருந்தது. அசதியா இருந்துச்சு, அப்படியே மெல்ல நடந்து வந்துட்டேன் என்று தனியாக வந்தவர் அப்படியே படுத்து விட்டார்.
அந்நிய மொழி இந்தி அவசியமில்லை!
இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை பேரழிவுக்குள் தள்ளும் விதமாக இந்தி திணிப்பில் மிக மூர்க்கமாக இருக்கிறது. இந்தி பிரச்சினை இன்று நேற்றல்ல... வெகு காலமாகவே தமிழ்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டின் மக்களுடன் சேர்த்து அரசியல் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜெயலலிதா அரசியலில் காலடி எடுத்து வைத்த காலகட்டத்தில்... இந்தி, தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத விசயம் என தேவி வார இதழுக்கு அளித்த ப்ளாஷ் பேக் பேட்டி:-
அரசு உயர் அதிகாரிகளை உருவாக்கும் பழங்குடியின கிராமம்!
ஒரு கிராமம் முழுக்க அரசு அதிகாரிகள் அதிகமாக இருந்தால் அது வியப்பான விஷயம்தானே. அப்படி ஒரு கிராமம் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. தார் மாவட்டத்தில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பதியால் என்ற கிராமம் அதிகாரியோன் காகாவ் அல்லது நிர்வாகிகளின் கிராமம் என்று பிரபலமாக அறியப்படுகிறது.
நடிகை காதம்பரியும் காவல் அதிகாரிகளும்?
சினிமா நடிகைகளுக்கு இந்த சமூகம் பாதுகாப்பாக உள்ளதா? என்ற கேள்விக்கு இப்போதும் மவுனமே பதிலாக கிடைக்கிறது. சினிமாவைத் தாண்டி அரசியல் மட்டத்திலும் நடிகைகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளே சிறையில் வைத்து தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக ஒரு நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பி ஆந்திர மாநில அரசியலில் சூட்டைக் கிளப்பியுள்ளார்.
காதால் நெருஞ்சி!
அருண்சார்' என்று அழைத்தாள் ஆதிரை. “சொல்லுங்க ஆதிரை மேடம்” என்று அவள் பக்கம் திரும்பினான் அருண்குமார்.
கொல்கத்தாவின் அடையாளம்... பிரியாவிடை பெறும் டிராம் வண்டிகள்!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா என்றால் நினைவுக்கு வருவது அதன் வரலாற்று அடையாளங்கள் மற்றும் கட்டிடக்கலை அற்புதங்கள். அதில் முக்கியமாக அந்த நகரின் பெருமை டிராம் வண்டிகள் எனலாம். நம்ம ஊரில் குதிரை வண்டி, மாட்டு வண்டி, கூண்டு வண்டி எப்படி புகழ் பெற்றதோ அப்படி இந்த டிராமுக்கும் தனி சிறப்பு உண்டு.
என்னோட எல்லை எனக்கு தெரியும்
தமிழில் அறிமுகமாகி பல வருடங்கள் ஓடி விட்டாலும் 'நிகிலா விமலுக்கு வாழை படத்தின் பூங்கொடி டீச்சர்' கேரக்டர்தான் தனி அடையாளத்தை கொடுத்துள்ளது. நடன ஆசிரியரின் மகளான நிகிலாவுக்கு பரதம், குச்சுப்புடி பாரம்பரியக் கலைகள் அனைத்தும் அத்துப்படி. தமிழ், மலையாள சினிமாவில் பரபரப்பாக இருக்கும் நிகிலாவுடன் ஒரு அழகான சிட்சாட்.
திருப்பதி லட்டு....உருவான வரலாறு!
திருப்பதி லட்டு தான் இப்போது தேசிய அளவில் ஹாட் டாபிக். பாரம்பரியமிக்க பிரசாதத்தின் மீது இப்போது அரசியல் சாயம் பூசி கலப்படத்தின் லிஸ்டில் சேர்த்து விட்டார்கள். திருப்பதி லட்டில் தரம் குறைந்த நெய்யை பயன்படுத்தி இருக்கிறார்கள்.