இதோ இப்போது ‘ஜிகர்தண்டா டபுள் X’ கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட பீரியாடிக் படமாக உருவாகி தீபாவளி சிறப்பாக வெளியீட்டிற்குக் காத்திருக்கிறது.
‘‘என்னை ஒரு நடிகனாக நானே பார்த்திராத கோணத்தில் பார்த்தவர் கார்த்திக் சுப்புராஜ்...’’ பல நினைவுகள் ஒருசேர ஆரம்பித்தார் எஸ்.ஜே.சூர்யா.
‘ஜிகர்தண்டா டபுள் X’..?
இந்தப் பெயருக்கு ஒரே கதைதான்! சினிமா படமெடுக்கத் துடிக்கும் ஓர் இயக்குநர், அவர் ரிஸ்க் எடுத்து ஒரு படம் எடுக்க வேண்டிய சூழலில் எப்படி தன்னையே பணயம் வைக்கிறார் என்பதுதான் பொதுக்கதை.
இந்த ‘ஜிகர்தண்டா டபுள் X’ கதைல அந்த இயக்குநர் நான்தான். இயக்குநர் மட்டுமல்ல... நான் பழம்பெரும் இயக்குநர் சத்யஜித்ரே சாருடைய அஸிஸ்டெண்ட். ஒரு ரியலிஸ்டிக் படமெடுக்கறதுக்காக, கொடூரமான ரவுடியிடம் மாட்டிக்கறேன். அதன்பிறகு என்ன நடக்குதுங்கறதுதான் கதை. அந்தப் படத்திலே சித்தார்த் ஹீரோ, பாபி சிம்ஹா வில்லன் என நடிச்சிருப்பாங்க. இந்தக் கதையில் நானும் லாரன்ஸ் மாஸ்டரும் ஹீரோக்கள்தான். ரெண்டு பேருமே வில்லன்கள்தான். அதாவது ரெண்டு பேருக்குள்ளும் இருக்கும் கிரே ஷேட் ஒவ்வொரு கட்டத்திலே வெளிப்படும்.
உங்க கேரக்டர் பத்தி சொல்லுங்க..?
ஓர் இயக்குநரே இயக்குநரா நடிச்சிருக்கறதால, எனக்கு சில விஷயங்கள் ரொம்ப சுலபமாக இருந்துச்சு. குறிப்பா கேமரா பிடிக்கும் விதம், கையாளும் விதம் எல்லாமே திரையிலே பார்க்கும்போது உங்களுக்கே அந்த ரியாலிட்டி புரியும். நிச்சயமா வேறு ஒரு மொழியிலோ, அல்லது நாட்டிலோ என்னுடைய கேரக்டரைப் பார்க்கும் போது அதிலே தப்பு கண்டுபிடிக்கவே முடியாது. எனக்கு மனசுக்கு நெருக்கமா இருந்துச்சு. நான் கேமரா பிடிச்சிருக்கறதை இன்னொரு கேமரா கேப்ச்சர் செய்கிற மொமெண்ட்... இப்ப நினைச்சாலும் எமோஷனலாகிடுவேன்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!