தலைமன்னார் டூ தனுஷ்கோடி வரையிலான கடல் தூரத்தை நீந்திக் கடக்கும் சாதனை அவ்வப்போது சில தீரர்களால் செய்யப்படுகிறது. சுமார் 30 கிமீ தூரமுள்ள அந்தத் தொலைவை நீந்திக் கடப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. அதற்கு நிறைய பயிற்சியும், விடாமுயற்சியும், தன்னம்பிக்கையும் அவசியம்.
அதனால் இது நார்மலாக இருக்கிற வெகுசிலரால் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது.
ஆனால், ஆட்டிசம் குறைபாடு உள்ள ஒரு சிறுவன் இந்தச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறான் என்றால் ஆச்சரியமாக இருக்கிறதல்லவா?
இதுமட்டுமல்ல. சமீபத்தில் மகாபலிபுரம் டூ சென்னை கண்ணகி சிலை வரை சுமார் 50 கிமீ கடல் தூரத்தையும் அந்தச் சிறுவன் நீந்தி மற்றொரு சாதனையையும் செய்து பலரையும் வியக்க வைத்திருக்கிறார்.
தற்போது இந்த இரண்டு சாதனைகளும் ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும், இந்திய புக் ஆஃப் ரெக்கார்ட்ஸிலும் இடம்பிடித்துள்ளன.
இந்தச் சாதனைகளை சத்தமில்லாமல் நிகழ்த்தியிருக்கும் அந்தத் தீரனின் பெயர் ஹரேஷ் பரத்மோகன். சென்னை திருவான்மியூரில் இருக்கிறது அவரது வீடு. நம்மை உற்சாகமாக வரவேற்ற ஹரேஷின் அம்மா நிர்மலா தேவி, ‘தம்பி, அங்கிளுக்கு வணக்கம் சொல்லுங்க’ என ஹரேஷிடம் சொல்ல, ஒரு மெல்லிய புன்னகையுடன் கைகொடுத்தார் ஹரேஷ்.
‘‘அவனுக்குப் பதினாறு வயசாகுது. பிறக்கிறப்ப எல்லா குழந்தையும் போல நார்மலாகத்தான் இருந்தான். எட்டு மாசத்துல நடக்கிறது. முகம் பார்த்து சிரிக்கிறதுனு எல்லாமே இருந்தது. ஒரு வயசு ஆனதும் அவன்கிட்ட மாற்றங்கள் தெரிஞ்சது. ஒண்ணே கால் வயசுல பேச்சு வரல. அப்ப நாங்க மருத்துவரிடம் காட்டினோம். மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து ஒண்ணாக இருந்தால் கொஞ்சம் பேச்சுல வளர்ச்சி இருக்கும்னு சொன்னார்.
சரினு க்ரீச்ல கொண்டுபோய் சேர்த்தோம். அங்க நிறைய பிள்ளைகளிடம் சேர்ந்து பேச கத்துப்பான்னு நினைச்சோம். என் கணவர் பரத்மோகன் வெளிநாட்டுல வேலை செய்றார். ஒன்றரை மாசத்துக்கு ஒருமுறை விடுமுறைக்கு வருவார். நானும் வேலைக்கு போறேன். அதனால், க்ரீச் சிறந்ததுனு சேர்த்தோம். அப்ப அவன் நடத்தையில் சிறு சிறு மாற்றங்கள் தெரிஞ்சது. துறுதுறுவென இருந்தான். அதேநேரம், மற்ற குழந்தைகளிடம் சேர்ந்து விளையாடாமல் அவன் இஷ்டத்துக்கு இருந்தான்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
உலகின் பெரிய வீடு குஜராத்தில் இருக்கிறது!
உலகிலேயே மிகப்பெரிய வீடு என்று சொன்னவுடனே அம்பானியின் வீடாக இருக்கும் அல்லது எலான் மஸ்க்கின் வீடாகத்தான் இருக்கும் என்று உறுதியாக நம்புவோம்.
இந்தியாவின் முதல் சைபர் ஃபேன்டஸி ஹாரர்!
\"இந்தப் படம் முடியும்போது, உங்களுக்கு பக்கத்திலே இருக்க வங்க கிட்ட மொபைல் கொடுக்கவே தயங்குவீங்க...\" துவக்கத்திலேயே சற்று பயம் கொடுக்கிறார் அறிமுக இயக்குநர் பி. பிரவீன்குமார்.
பி.டி.உஷாவாக மாளவிகா மோகனன்?
அப்படித்தான் தன் விருப்பத்தை பகிர்ந்திருக்கிறார் மாளவிகா மோகனன்.
AC கும்மாங்குத்து!
அண்ஷனல் எனர்ஜி நெட்வொர்க்கில் 'இன்டர் ஏஜென்சி' (IEA) என்ற உலகளாவிய அமைப்பு, ஏசி தொடர்பான ஓர் ஆய்வை வெளியிட்டுள்ளது.
வாழ்கை ஓரு சினிமா
காலையில் ஹாஸ்பிட்டல் கிளம்பும் போதே நந்து வந்து கட்டிக்கொண்காணேச டான். 6.30 மணிக்கு தூக்கம் கூட சரியாகக் களையவில்லை. ஆனால், கண்ணைத் தேய்த்துக்கொண்டே, “அப்பா, இன்று ஈவினிங்...\" நிமிர்ந்து முகத்தைப் பார்த்தான்.
சோஷியல் மீடியா மீது வழக்கு!
கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் மீது வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் வெளியிடப்படவில்லை. அவரது வயது 24.
ஏன் இப்படியே படம் எடுக்கறீங்க?
எல்லாம் மாறிடுச்சு, படம் எடுத்துக்கிட்டே \"எல்லாம் மாறிடுச்சு, மாரி செல்வராஜ் என்கிற மனுஷன் யார்?\" இப்படியான கேள்விகளுக்கு பதில் தான் இந்த 'வாழை'...
பதிவான உங்கள் மீதான வழக்கை டிஜிட்டலாக அழிக்க முடியாவிட்டால் என்ன ஆகும்..?
நம் போன் நம்பர், வீட்டு முகவரி, பிறந்த தேதி, படித்த படிப்பு பற்றிய விபரங்களை ஒருவர் சல்லீசாக ஆன் லைன் தளங்களில் கண்டுபிடித்துவிடலாம்.
எம்-பாக்ஸ் வைரஸ் ஆபத்தா?
ரங்கம்மை என்ற எம்-பாக்ஸ் (Monkeypox) நோய்த் தொற்றை குறித்துதான் உலக நாடுகள் அனைத்தும் அலறுகின்றன.
'ஹிண்டன்பர்க்...அதானி...செபி...
பங்குச் சந்தை, பரிவர்த்தனை, வர்த்தகம் என்றாலே அங்கு ஊழல் களும், ஏமாற்று வேலைகளும், பரபரப்புகளும் இருக்கும் என்பது எழுதப்படாத விதிபோல!