
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, ஸ்டார்லைனர் விண்கலம் பழுதாகி சர்வதேச விண்வெளி மையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கித் தவித்த விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் டிராகன் விண்கலம் மூலம் இன்று பத்திரமாக பூமிக்கு திரும்பினர். புளோரிடா கடல் பகுதியில் சுனிதா வில்லியம்ஸ் வந்த விண்கலம் பாதுகாப்பாக இறங்கியது. இதன் மூலம் சுனிதா வில்லியம்ஸ் நீண்ட காலம் விண்வெளியில் வசித்த பெண்மணி என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாகக் கூறியுள்ள நாசா, அடுத்த சில மாதங்கள் அவர் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா சார்பில், போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ் (வயது 58) மற்றும் புட்ச் வில்மோர் (வயது 61) இருவரும் கடந்த ஆண்டு ஜூன் 5ஆம் தேதி சர்வதேச மையத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். ஸ்டார்லைனர் விண்கலம் கடந்த ஜூன் 7ஆம் தேதி பூமியில் இருந்து 400 கி.மீ உயரத்தில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தை சென்றடைந்தது.
அங்கு ஆய்வுப்பணிகளை முடித்து விட்டு ஒரு வாரத்தில் பூமிக்கு திரும்ப வேண்டிய சுனிதா, வில்மோர் இருவரும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, விண்வெளியிலேயே சிக்கிக் கொண்டனர். விண்கலத்தில் லியம் வாயு கசிவு மற்றும் உந்துவிசை கருவியில் ஏற்பட்ட கோளாறால் இருவரும் பூமிக்கு திரும்புவதில் சிக்கல் உண்டானது. இதனால் 8 நாள் பயணம் 8 மாதமாக நீட்டிக்கப்பட்டது.
நீண்ட போராட்டத்திற்கு பிறகும் போயிங் நிறுவனத்தால் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறுகளை சரி செய்ய முடியவில்லை. இதனால் கடந்த 9 மாத காலமாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் விண்வெளி மையத்தில் தவித்து வந்தனர்.
இதையடுத்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் க்ரூ விண்கலம் மூலம் சுனிதா, வில்மோர் இருவரையும் பூமிக்கு அழைத்து வர நாசா ஏற்பாடுகளை செய்தது. அதற்கு முன்பாக சிலமுறை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பயணம் தடைபட்டு தாமதமானது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In

சேப்பாக்கத்தில் ஐ.பி.எல். போட்டி: சென்னை - மும்பை அணிகள் இன்று மோதல்!
தொடரில் 2வது நாளான இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தனது பரம எதிரியான மும்பை இந்தி யன்ஸ் அணியை எதிர் கொண்டு விளையாட உள்ளது. பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தி யில் பெரும் பார்ப்பை உருவாக்கியுள் எதிர் ளது.

சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த விஜய் வசந்த் எம்.பி.! கூட்டுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தியதற்கு வாழ்த்து தெரிவித்தார்!!
நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை தொடர்பான முதல் கூட்டுக்குழு கூட்டத்தை வெற்றிகரமாக நடத்த முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரை விஜய் வசந்த் எம்.பி. சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதியில் நேரில் சந்தித்து தனது நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

அஜித்துக்கு மகனாக மாறிய 'வலிமை' வில்லன் நடிகர் !
அஜித் நடிப்பில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி', வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
விஐபி பிரேக் தரிசனம் ரத்து: திருப்பதியில் மார்ச் 25 முதல் தரிசன முறையில் மாற்றம்!
திருப்பதியில் மார்ச் 25 முதல் தரிசன முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். முதல் போட்டியில் விராட் கோலி, சால்ட் அதிரடியில் பெங்களூர் அணி அசத்தல் வெற்றி !
கொல்கத்தா சொந்த மண்ணில் தோல்வி !!

ரூ.550 கோடியில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய பாலம் ஏப்ரல் 2-ஆவது வாரம் திறப்பு!
சுமார் ரூ.550 கோடியில் கட்டப்பட்டுள்ள பாம்பன் புதிய பாலம் ஏப்ரல் மாதம் 2-ஆவது வாரம் திறக்கப்படும் என்று தெற்கு ரெயில்வே கூடுதல் பொது மேலாளர் கவுசல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்—ஆசிரியர்கள் உ ண்ணாவிரத போராட்டம்! மாவட்ட தலை நகரங்களில் ன்று நடந்தது!!
ஜாக்டோ-ஜியோ சார்பில், 10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உண்ணாவிரதப் போராட்டம் இன்று நடந்தது.
மூன்றரை ஆண்டில் 25 தற்கொலை: சூதாட்ட நிறுவனங்கள் தான் திமுக அரசுக்கு முக்கியமா?
ஆன் லைன் சூதாட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளில் 25ஆம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

மதுரையில் நள்ளிரவில் பயங்கரம்: ட ரவுடி ஓடஓட விரட்டி வெட்டிக் கொலை! பழிக்குப் பழியாக நடந்த சம்பவம்!!
மதுரையில் நள்ளிரவில் ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். பழிக்குப் பழியாக இந்த சம்பவம் நடந்தது.
மூன்றரை ஆண்டில் 25 தற்கொலை: சூதாட்ட நிறுவனங்கள் தான் திமுக அரசுக்கு முக்கியமா?
ஆன் லைன் சூதாட்டத்தில் ஒன்றரை ஆண்டுகளில் 25ஆம் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.