தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் நினைவு நாள் சிறப்புக் கட்டுரை மே 24
இதற்கு காரணம், ஐயா அவர்கள், இளமையில் இருந்து இறுதி வரை ஒரு முழுமையான பத்திரிகையாளராக இருந்தார்கள் என்பதே! அரசியல், தொழில், பதவி பொறுப்புகள் எதுவுமே அவரைப் 'பத்திரிகையாளர்' என்ற பாதையில் இருந்து திருப்பிவிட முடிந்தது இல்லை.
'எங்களது பொருட்களின் விற்பனையைக் கூட்டுகின்ற வகையில் விளம்பரம் தருவதற்குச் சிறந்த கருத்துப்படத்தை யார் வரைந்து அனுப்புகின்றார்களோ, அவருக்குப் பரிசு வழங்கப்படும்' என்று கொல்கத்தாவில் வாசனாதி திரவியங்கள் விற்கின்ற ஒரு தொழிற்சாலை ஏடுகளில் அறிவித்திருந்தது.
15 வயதான ஆதித்தனார் ஒரு கருத்துப்படத்தை வரைந்தார். இந்தியா முழுமையும் நடத்தப்பட்ட அந்தப் போட்டியில் பரிசை வென்றார்.
இத்தகைய ஆற்றலைப் பெற்ற ஐயா அவர்கள், பாளையங்கோட்டை தூய யோவான் கல்லூரியில் பயின்று, தமது 22 ஆம் வயதில் பார் அட்லா படிப்பதற்காக இங்கிலாந்து நாட்டின் லண்டன் மாநகருக்குச் செல்லுகின்றார்.
வெளிநாட்டுக்கு படிக்க செல்லும் யாரும் மதுப் பழக்கத்தில் இருந்து தப்புவதில்லை. ஆனால் ஐயா ஆதித்தனார் அவர்கள் தன் வாழ்க்கையில் மதுவை தொட்டதே இல்லை.
எவ்வளவு உயர்ந்த வகை வெளிநாட்டு மதுவாக இருந்தாலும் அதை 'சாராயம்’ என்று முகச்சுழிப்புடன் குறிப்பிடுவார். அவ்வளவு வெறுப்பு!
"வாலிப வயதில் ஒருவன் பெண்களின் பின்னால் சுற்றித்திரிந்தால், வயது ஆக ஆக மனப்பக்குவம் பெற்று அவன் மாறிவிடுவான். ஆனால் மதுப் பழக்கம் நாளாக நாளாக அதிகமாகுமே தவிர குறையாது! வாழ்க்கையே அதனால் பாழாகிவிடும். மேல் நாட்டவர் அப்படி இல்லை, சாப்பிடும்போது நாம் ஊறுகாயைப் பயன்படுத்துவதைபோல மதுவை அவர்கள் அளவோடு பயன்படுத்துகிறார்கள்" என்று ஐயா அவர்கள் கூறுவது உண்டு.
அடுத்து சிங்கப்பூருக்குச் செல்கிறார், கோவிந்தம்மாள் அவர்களை தம் வாழ்க்கைத்துணையாக ஏற்றுக் கொள்கின்றார்.
அங்கே சாரங்கபாணி தொடங்கிய தமிழ் முரசு ஏட்டுக்குத் தோள் கொடுக்கிறார். அதன்பிறகு தாமே ஒரு பத்திரிகை தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தில்... அதற்கான முதலீட்டுக்காக, வழக்கறிஞர் தொழிலில் முழு மூச்சோடு ஈடுபட்டுத் தம் திறமையால் பணம் திரட்டினார்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
குழந்தைகளை பாதிக்கும் கலப்பட உணவு!
டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது உலக உணவு கட்டுப்பாட்டாளர் உச்சி மாநாட்டிற்காக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டார். அதில் வெளியான தகவல் ஒன்று அதிர்ச்சிகரமானது.
என்னோட வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது!
தமிழில் பீல்டு அவுட் ஆன நிலையில்... தெலுங்கு, கன்னட படம் என தன் இருப்பை மாற்றிய பிரியா மணி, தற்போது இந்தியில் வெற்றிகரமாக பயணிக்கும் நடிகை. திரைத்துறையில் 22 ஆண்டுகளாக கோலாச்சும் பிரியாமணியுடன் ஒரு அழகான உரையாடல்.
அருகில் வசிக்கும் தேவதைகள்!
அன்றைய தினம் ஒரே நாளில் இரண்டு முதிய பெண்மணிகளுக்கு சிகிச்சை அளிக்க நேர்ந்தது. இருவரிடையே சில ஒற்றுமைகள், சில வேற்றுமைகள். முதலில் வந்தவர் முப்பிடாதி. அவருக்கு லேசான காய்ச்சல், சர்க்கரை அளவும் அதிகமாக இருந்தது. அசதியா இருந்துச்சு, அப்படியே மெல்ல நடந்து வந்துட்டேன் என்று தனியாக வந்தவர் அப்படியே படுத்து விட்டார்.
அந்நிய மொழி இந்தி அவசியமில்லை!
இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை பேரழிவுக்குள் தள்ளும் விதமாக இந்தி திணிப்பில் மிக மூர்க்கமாக இருக்கிறது. இந்தி பிரச்சினை இன்று நேற்றல்ல... வெகு காலமாகவே தமிழ்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டின் மக்களுடன் சேர்த்து அரசியல் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜெயலலிதா அரசியலில் காலடி எடுத்து வைத்த காலகட்டத்தில்... இந்தி, தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத விசயம் என தேவி வார இதழுக்கு அளித்த ப்ளாஷ் பேக் பேட்டி:-
அரசு உயர் அதிகாரிகளை உருவாக்கும் பழங்குடியின கிராமம்!
ஒரு கிராமம் முழுக்க அரசு அதிகாரிகள் அதிகமாக இருந்தால் அது வியப்பான விஷயம்தானே. அப்படி ஒரு கிராமம் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. தார் மாவட்டத்தில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பதியால் என்ற கிராமம் அதிகாரியோன் காகாவ் அல்லது நிர்வாகிகளின் கிராமம் என்று பிரபலமாக அறியப்படுகிறது.
நடிகை காதம்பரியும் காவல் அதிகாரிகளும்?
சினிமா நடிகைகளுக்கு இந்த சமூகம் பாதுகாப்பாக உள்ளதா? என்ற கேள்விக்கு இப்போதும் மவுனமே பதிலாக கிடைக்கிறது. சினிமாவைத் தாண்டி அரசியல் மட்டத்திலும் நடிகைகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளே சிறையில் வைத்து தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக ஒரு நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பி ஆந்திர மாநில அரசியலில் சூட்டைக் கிளப்பியுள்ளார்.
காதால் நெருஞ்சி!
அருண்சார்' என்று அழைத்தாள் ஆதிரை. “சொல்லுங்க ஆதிரை மேடம்” என்று அவள் பக்கம் திரும்பினான் அருண்குமார்.
கொல்கத்தாவின் அடையாளம்... பிரியாவிடை பெறும் டிராம் வண்டிகள்!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா என்றால் நினைவுக்கு வருவது அதன் வரலாற்று அடையாளங்கள் மற்றும் கட்டிடக்கலை அற்புதங்கள். அதில் முக்கியமாக அந்த நகரின் பெருமை டிராம் வண்டிகள் எனலாம். நம்ம ஊரில் குதிரை வண்டி, மாட்டு வண்டி, கூண்டு வண்டி எப்படி புகழ் பெற்றதோ அப்படி இந்த டிராமுக்கும் தனி சிறப்பு உண்டு.
என்னோட எல்லை எனக்கு தெரியும்
தமிழில் அறிமுகமாகி பல வருடங்கள் ஓடி விட்டாலும் 'நிகிலா விமலுக்கு வாழை படத்தின் பூங்கொடி டீச்சர்' கேரக்டர்தான் தனி அடையாளத்தை கொடுத்துள்ளது. நடன ஆசிரியரின் மகளான நிகிலாவுக்கு பரதம், குச்சுப்புடி பாரம்பரியக் கலைகள் அனைத்தும் அத்துப்படி. தமிழ், மலையாள சினிமாவில் பரபரப்பாக இருக்கும் நிகிலாவுடன் ஒரு அழகான சிட்சாட்.
திருப்பதி லட்டு....உருவான வரலாறு!
திருப்பதி லட்டு தான் இப்போது தேசிய அளவில் ஹாட் டாபிக். பாரம்பரியமிக்க பிரசாதத்தின் மீது இப்போது அரசியல் சாயம் பூசி கலப்படத்தின் லிஸ்டில் சேர்த்து விட்டார்கள். திருப்பதி லட்டில் தரம் குறைந்த நெய்யை பயன்படுத்தி இருக்கிறார்கள்.