டிஜிட்டல் பேமெண்ட்...
யுபிஐ எனப்படும் 'யுனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ்' என்பது நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) உருவாக்கிய பணப் பரிவர்த்தனை முறை. இது ஸ்மார்ட் 'ஃபோன்களைப் பயன்படுத்தி வங்கிக் கணக்கு களுக்கு இடையே உடனடியாக பணத்தை மாற்ற உதவுகிறது. இதன்மூலம் பல வங்கிக் கணக்குகளை ஒரே மொபைல் ஃபோனில் இணைக்க முடிவதால் தடையின்றி பணம் செலுத்த முடிகிறது. அதாவது அடிப்படையில் யுபிஐ நம் பணத்தை செலவழிக்கத் தூண்டும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு பரிவர்த்தனை முறை.
வங்கிக்கு நேரில் சென்று பணம் எடுக்கவேண்டியதில்லை, கொடுப்போருக்கு நேரில் சென்று கொடுக்க வேண்டியதில்லை. உடல்ரீதியான உழைப்பு மிச்சப்படுவதோடு, காசோலை போன்றவை தேவையில்லை.
அது மட்டுமல்ல, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ஒரு தனிப்பட்ட மெய்நிகர் கட்டண முகவரி (விபிஏ) மற்றும் தனிப்பட்ட அடையாள எண் (பின்) இருப்பதால் பணம் பாதுகாப்பாக இருப்பது உறுதி செய்யப்படுகிறது. கையில், வீட்டில் வைத்திருப்பதால் ஏற்படும் திருட்டு பயம் நீங்குகிறது. எனவே, யுபிஐ முறைக்கு எளிதாக அனைவரும் மாறிவிடுகின்றனர்.
யுபிஐ யில் ஒரு ரூபாய் முதல் லட்சங்கள் வரை எளிதாக பணப் பரிவர்த்தனை செய்ய முடிகிறது என்பதால் எந்தக் காரியத்துக்கும் கைபேசியை நோக்கி கை நீண்டு விடுகிறது.
யுபிஐ வந்த பிறகு கையில் காசு இருப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க... வங்கிக் கணக்கிலும் காசு இருக்க விடுவதில்லை என்பது நிதர்சனமாகிவருகிறது. இதை சமீபத்திய ஓர் ஆய்வு தெளிவுபடுத்தியுள்ளது.
டெல்லி இந்திரபிரஸ்தா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேசன் டெக்னாலஜி (ஐஐஐடி) மேற்கொண்ட ஓர் ஆய்வில், யுபிஐ பணப் பரிவர்த்தனைக்கு பிறகு ஏறத்தாழ 74 சதவிகிதம் மக்கள் தேவைக்கு அதிகமாக செலவிடுவது தெரிய வந்துள்ளது.
கிட்டதட்ட 815 மக்கள் நாள்தோறும் யுபிஐ பரிவர்த்தனை முறையை பயன்படுத்துவதாக ஐஐஐடி ஆய்வில் தெரியவருகிறது. அவர்கள் ஒவ்வொருவரும் சராசரியாக 200 ரூபாயாவது ஒரு நாளைக்கு யுபிஐ மூலம் செலவழிக்கின்றனர் என்று ஆய்வு தெரிவிக்கிறது.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
குழந்தைகளை பாதிக்கும் கலப்பட உணவு!
டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது உலக உணவு கட்டுப்பாட்டாளர் உச்சி மாநாட்டிற்காக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டார். அதில் வெளியான தகவல் ஒன்று அதிர்ச்சிகரமானது.
என்னோட வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது!
தமிழில் பீல்டு அவுட் ஆன நிலையில்... தெலுங்கு, கன்னட படம் என தன் இருப்பை மாற்றிய பிரியா மணி, தற்போது இந்தியில் வெற்றிகரமாக பயணிக்கும் நடிகை. திரைத்துறையில் 22 ஆண்டுகளாக கோலாச்சும் பிரியாமணியுடன் ஒரு அழகான உரையாடல்.
அருகில் வசிக்கும் தேவதைகள்!
அன்றைய தினம் ஒரே நாளில் இரண்டு முதிய பெண்மணிகளுக்கு சிகிச்சை அளிக்க நேர்ந்தது. இருவரிடையே சில ஒற்றுமைகள், சில வேற்றுமைகள். முதலில் வந்தவர் முப்பிடாதி. அவருக்கு லேசான காய்ச்சல், சர்க்கரை அளவும் அதிகமாக இருந்தது. அசதியா இருந்துச்சு, அப்படியே மெல்ல நடந்து வந்துட்டேன் என்று தனியாக வந்தவர் அப்படியே படுத்து விட்டார்.
அந்நிய மொழி இந்தி அவசியமில்லை!
இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை பேரழிவுக்குள் தள்ளும் விதமாக இந்தி திணிப்பில் மிக மூர்க்கமாக இருக்கிறது. இந்தி பிரச்சினை இன்று நேற்றல்ல... வெகு காலமாகவே தமிழ்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டின் மக்களுடன் சேர்த்து அரசியல் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜெயலலிதா அரசியலில் காலடி எடுத்து வைத்த காலகட்டத்தில்... இந்தி, தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத விசயம் என தேவி வார இதழுக்கு அளித்த ப்ளாஷ் பேக் பேட்டி:-
அரசு உயர் அதிகாரிகளை உருவாக்கும் பழங்குடியின கிராமம்!
ஒரு கிராமம் முழுக்க அரசு அதிகாரிகள் அதிகமாக இருந்தால் அது வியப்பான விஷயம்தானே. அப்படி ஒரு கிராமம் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. தார் மாவட்டத்தில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பதியால் என்ற கிராமம் அதிகாரியோன் காகாவ் அல்லது நிர்வாகிகளின் கிராமம் என்று பிரபலமாக அறியப்படுகிறது.
நடிகை காதம்பரியும் காவல் அதிகாரிகளும்?
சினிமா நடிகைகளுக்கு இந்த சமூகம் பாதுகாப்பாக உள்ளதா? என்ற கேள்விக்கு இப்போதும் மவுனமே பதிலாக கிடைக்கிறது. சினிமாவைத் தாண்டி அரசியல் மட்டத்திலும் நடிகைகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளே சிறையில் வைத்து தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக ஒரு நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பி ஆந்திர மாநில அரசியலில் சூட்டைக் கிளப்பியுள்ளார்.
காதால் நெருஞ்சி!
அருண்சார்' என்று அழைத்தாள் ஆதிரை. “சொல்லுங்க ஆதிரை மேடம்” என்று அவள் பக்கம் திரும்பினான் அருண்குமார்.
கொல்கத்தாவின் அடையாளம்... பிரியாவிடை பெறும் டிராம் வண்டிகள்!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா என்றால் நினைவுக்கு வருவது அதன் வரலாற்று அடையாளங்கள் மற்றும் கட்டிடக்கலை அற்புதங்கள். அதில் முக்கியமாக அந்த நகரின் பெருமை டிராம் வண்டிகள் எனலாம். நம்ம ஊரில் குதிரை வண்டி, மாட்டு வண்டி, கூண்டு வண்டி எப்படி புகழ் பெற்றதோ அப்படி இந்த டிராமுக்கும் தனி சிறப்பு உண்டு.
என்னோட எல்லை எனக்கு தெரியும்
தமிழில் அறிமுகமாகி பல வருடங்கள் ஓடி விட்டாலும் 'நிகிலா விமலுக்கு வாழை படத்தின் பூங்கொடி டீச்சர்' கேரக்டர்தான் தனி அடையாளத்தை கொடுத்துள்ளது. நடன ஆசிரியரின் மகளான நிகிலாவுக்கு பரதம், குச்சுப்புடி பாரம்பரியக் கலைகள் அனைத்தும் அத்துப்படி. தமிழ், மலையாள சினிமாவில் பரபரப்பாக இருக்கும் நிகிலாவுடன் ஒரு அழகான சிட்சாட்.
திருப்பதி லட்டு....உருவான வரலாறு!
திருப்பதி லட்டு தான் இப்போது தேசிய அளவில் ஹாட் டாபிக். பாரம்பரியமிக்க பிரசாதத்தின் மீது இப்போது அரசியல் சாயம் பூசி கலப்படத்தின் லிஸ்டில் சேர்த்து விட்டார்கள். திருப்பதி லட்டில் தரம் குறைந்த நெய்யை பயன்படுத்தி இருக்கிறார்கள்.