வில்லங்க சேட்டைகள்?
வாட்ஸ்-அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் வாழ்வின் அங்கமாக மாறி விட்டன.
புகழ் எனும் போதைக்கு அடிமையான இன்றைய தலைமுறையினர் எதையாவது செய்து பிரபலமாகி விட வேண்டும் என்று துடிக்கிறார்கள். முன்பெல்லாம் கோடம்பாக்கம் ஏரியாவில், வட பழனி ஏ.வி.எம். ஸ்டூடியோ வாசலில் பட வாய்ப்புக்காக காத்திருந்தவர்கள், இப்போது ரீல்ஸ் போட்டு சப்ஸ்கிரைபர்களை சேர்த்து அதன் மூலமே பிரபலமாகி பட வாய்ப்புகளை பெற்று விடுகின்றனர்.
இன்றைய இன்ஸ்டா ரீல்ஸ்'க்கு முன்னோடியாக இருந்தது டப் ஸ்மாஷ் தான். சீனாவின் டிக்டாக் செயலி இந்தியாவில் தடை செய்யப்பட்ட பிறகு தான், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் என்ற புதிய ஆப்ஷன் சேர்க்கப்பட்டது.
அதுவரை புகைப்படங்களை ஷேர் செய்ய மட்டுமே பயன்படுத்தி வந்த இன்ஸ்டா, ரீல்ஸ் சேர்க்கப்பட்ட பிறகு பிரபலமாகி விட்டது. தினசரி ரீல்ஸ் வீடியோக்களை பதிவேற்றம் செய்தே பலர் சோஷியல் மீடியா இன்புளுயன்சர் ஆகி அதன் மூலம் வருமானமும் பார்க்க ஆரம்பத்து விட்டனர்.
நடனம், நகைச்சுவை, மாடலிங் என பல கேட்டகரியில் வீடியோ போட்டு பாப்புலர் ஆகின்றனர். இது போன்ற ரீல்ஸ் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர்கள் இப்போது சின்னத்திரை, வெள்ளித்திரைகளை கலக்கிக் கொண்டிருக்கின்றனர்.
பிரபலமான நடிகர்கள் கூட இப்போதெல்லாம் தங்கள் படங்களின் புரமோஷனுக்காக சோஷியல் மீடியா இன்புளுயன்சர்கள் உதவியை நாடுகின்றனர். அதே சமயம், வித்தியாசமான ரீல்ஸ் செய்கிறேன் என தங்கள் வாழ்க்கையை அழித்துக் கொண்டவர்களும் பலர் உண்டு.
ஆம்... சோஷியல் மீடியாவில் புகழ் தேடி வாய்ப்புகளை அடைந்தவர்கள், வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் என நான்கு கேட்டகரியில் பிரித்துக் கொள்ளலாம்.
முதல் கேட்டகரியில், இன்ஸ்டா பிரபலமாக இருந்து திரையுலகில் தடம் பதித்த மிருணாளினி ரவி, வர்ஷா பொல்லம்மா போன்றவர்களை சொல்லலாம்.
பாண்டிச்சேரியில் வசிக்கும் தமிழ் குடும்பத்தில் பிறந் மிருணாளினி ரவி, பெங்களூர் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தவர்.
கல்லூரி படிப்பை முடித்துவிட்டு ஐ.பி.எம் நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரிந்தவர் பிறகு மாடலிங்கில் கவனம் ஈர்க்கப்பட்டு தன் வேலையை ராஜினாமா செய்தார்.
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the {{IssueName}} edition of {{MagazineName}}.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
குழந்தைகளை பாதிக்கும் கலப்பட உணவு!
டெல்லியில் நடைபெற்ற இரண்டாவது உலக உணவு கட்டுப்பாட்டாளர் உச்சி மாநாட்டிற்காக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரியேசஸ் ஒரு வீடியோ செய்தியை வெளியிட்டார். அதில் வெளியான தகவல் ஒன்று அதிர்ச்சிகரமானது.
என்னோட வாழ்க்கை ரொம்ப சிம்பிளானது!
தமிழில் பீல்டு அவுட் ஆன நிலையில்... தெலுங்கு, கன்னட படம் என தன் இருப்பை மாற்றிய பிரியா மணி, தற்போது இந்தியில் வெற்றிகரமாக பயணிக்கும் நடிகை. திரைத்துறையில் 22 ஆண்டுகளாக கோலாச்சும் பிரியாமணியுடன் ஒரு அழகான உரையாடல்.
அருகில் வசிக்கும் தேவதைகள்!
அன்றைய தினம் ஒரே நாளில் இரண்டு முதிய பெண்மணிகளுக்கு சிகிச்சை அளிக்க நேர்ந்தது. இருவரிடையே சில ஒற்றுமைகள், சில வேற்றுமைகள். முதலில் வந்தவர் முப்பிடாதி. அவருக்கு லேசான காய்ச்சல், சர்க்கரை அளவும் அதிகமாக இருந்தது. அசதியா இருந்துச்சு, அப்படியே மெல்ல நடந்து வந்துட்டேன் என்று தனியாக வந்தவர் அப்படியே படுத்து விட்டார்.
அந்நிய மொழி இந்தி அவசியமில்லை!
இந்திய ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டை பேரழிவுக்குள் தள்ளும் விதமாக இந்தி திணிப்பில் மிக மூர்க்கமாக இருக்கிறது. இந்தி பிரச்சினை இன்று நேற்றல்ல... வெகு காலமாகவே தமிழ்நாட்டை அச்சுறுத்தி வருகிறது. இதற்கு தமிழ்நாட்டின் மக்களுடன் சேர்த்து அரசியல் கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஜெயலலிதா அரசியலில் காலடி எடுத்து வைத்த காலகட்டத்தில்... இந்தி, தமிழ்நாட்டுக்கு தேவையில்லாத விசயம் என தேவி வார இதழுக்கு அளித்த ப்ளாஷ் பேக் பேட்டி:-
அரசு உயர் அதிகாரிகளை உருவாக்கும் பழங்குடியின கிராமம்!
ஒரு கிராமம் முழுக்க அரசு அதிகாரிகள் அதிகமாக இருந்தால் அது வியப்பான விஷயம்தானே. அப்படி ஒரு கிராமம் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. தார் மாவட்டத்தில் பழங்குடியினர் ஆதிக்கம் செலுத்தும் பதியால் என்ற கிராமம் அதிகாரியோன் காகாவ் அல்லது நிர்வாகிகளின் கிராமம் என்று பிரபலமாக அறியப்படுகிறது.
நடிகை காதம்பரியும் காவல் அதிகாரிகளும்?
சினிமா நடிகைகளுக்கு இந்த சமூகம் பாதுகாப்பாக உள்ளதா? என்ற கேள்விக்கு இப்போதும் மவுனமே பதிலாக கிடைக்கிறது. சினிமாவைத் தாண்டி அரசியல் மட்டத்திலும் நடிகைகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இந்நிலையில், மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளே சிறையில் வைத்து தனக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாக ஒரு நடிகை பரபரப்பு குற்றச்சாட்டை எழுப்பி ஆந்திர மாநில அரசியலில் சூட்டைக் கிளப்பியுள்ளார்.
காதால் நெருஞ்சி!
அருண்சார்' என்று அழைத்தாள் ஆதிரை. “சொல்லுங்க ஆதிரை மேடம்” என்று அவள் பக்கம் திரும்பினான் அருண்குமார்.
கொல்கத்தாவின் அடையாளம்... பிரியாவிடை பெறும் டிராம் வண்டிகள்!
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா என்றால் நினைவுக்கு வருவது அதன் வரலாற்று அடையாளங்கள் மற்றும் கட்டிடக்கலை அற்புதங்கள். அதில் முக்கியமாக அந்த நகரின் பெருமை டிராம் வண்டிகள் எனலாம். நம்ம ஊரில் குதிரை வண்டி, மாட்டு வண்டி, கூண்டு வண்டி எப்படி புகழ் பெற்றதோ அப்படி இந்த டிராமுக்கும் தனி சிறப்பு உண்டு.
என்னோட எல்லை எனக்கு தெரியும்
தமிழில் அறிமுகமாகி பல வருடங்கள் ஓடி விட்டாலும் 'நிகிலா விமலுக்கு வாழை படத்தின் பூங்கொடி டீச்சர்' கேரக்டர்தான் தனி அடையாளத்தை கொடுத்துள்ளது. நடன ஆசிரியரின் மகளான நிகிலாவுக்கு பரதம், குச்சுப்புடி பாரம்பரியக் கலைகள் அனைத்தும் அத்துப்படி. தமிழ், மலையாள சினிமாவில் பரபரப்பாக இருக்கும் நிகிலாவுடன் ஒரு அழகான சிட்சாட்.
திருப்பதி லட்டு....உருவான வரலாறு!
திருப்பதி லட்டு தான் இப்போது தேசிய அளவில் ஹாட் டாபிக். பாரம்பரியமிக்க பிரசாதத்தின் மீது இப்போது அரசியல் சாயம் பூசி கலப்படத்தின் லிஸ்டில் சேர்த்து விட்டார்கள். திருப்பதி லட்டில் தரம் குறைந்த நெய்யை பயன்படுத்தி இருக்கிறார்கள்.