முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 4 புதிய அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த எளிமையான விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திட்டமிடல் மற்றும் வளர்ச்சித்துறை ஆகிய கூடுதல் பொறுப்புகள் வழங்கப்பட்டு துணை முதல்வராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து தலைமைச் செயலகத்தில் நேற்று அவர் தனது பணிகளை தொடங்கினார்.
தமிழகத்தில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக வெற்றி பெற்று, ஆட்சி அமைத்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட 35 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். திமுக அரசு பொறுப்பேற்கும்போதே உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டு பேசப்பட்டது. ஆனால் அப்போது அவருக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கப்படவில்லை.
இதைத்தொடர்ந்து கடந்த 2022ம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை பொறுப்பு வழங்கப்பட்டது. இப் பதவியை ஏற்றுக் கொண்ட உதயநிதி ஸ்டாலின், தனது துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து அகில இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை நடத்தி தமிழகத்தை சர்வதேச அரங்கில் திரும்பிப் பார்க்க வைத்தார். இதையடுத்து அவருடைய செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைந்த சக அமைச்சர்களும், கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் அவருக்கு துணை முதல்வர் பதவியை வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பினர். கட்சிக் கூட்டங்களிலும், அரசு நிகழ்ச்சிகளிலும் பேசிய அமைச்சர்கள் வெளிப்படையாகவே தங்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர்.
நடந்து முடிந்த நாடாளுமன்றத் ேதர்தல், இடைத்தேர்தல் ஆகிய அனைத்து தேர்தல் வெற்றிகளுக்கும் உதயநிதி ஸ்டாலின் முக்கிய பங்காற்றி வந்தார். இதனால் அவருக்கு அமைச்சரவையில் பதவி உயர்வு வழங்கப்பட்டு துணை முதல்வராக்கப்படுவார் என்று பேச்சு எழுந்தது.
この記事は Dinakaran Chennai の September 30, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Dinakaran Chennai の September 30, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
மழைநீர் கால்வாய் பணியால் கடும் நெரிசல்
கும்மிடிப்பூண்டி, அக். 2: கும்மிடிப்பூண்டி பேரூராட்சி பஜார் பகுதிக்கு ஆத்துப் பாக்கம், மாதர்பாக்கம், வலுதலம்பேடு, புதூர், ரெட்டம்பேடு, ஆரம்பாக்கம், மங்காவரம், பொன்னேரி, தேவம்பேடு, பட்டுப்புள்ளி, அப்பாவரம், மேலகழனி, நத்தம், தேர்வழி, அயநெல்லூர், பெத்தி குப்பம், சுண்ணாம்புகுளம், மெதிபாளையம், ஓபசமுத்திரம் உள்ளிட்ட 150 கிராமங்களைச் சேர்ந்த கிராமப்புற மக்கள் தங்கள் தேவைக்கு கார், லாரி, இருசக்கர வாகனங்கள் மூலம் தினந்தோறும் வந்து செல்கின்றனர்.
சேதமடைந்து காணப்படும் விஏஓ அலுவலக கட்டிடம்
கிருஷ்ணாகுப்பம் கிராமத்தில் சேதமடைந்து முட்புதர்கள் சூழ்ந்து காணப்படும் விஏஓ அலுவலக கட்டிடத்தை இடித்து அகற்றிவிட்டு, புதிதாக கட்டித்தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சாலையில் பள்ளம் தோண்டியதால் 16 மணிநேரம் போக்குவரத்து நிறுத்தம்
மணலியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளுக்காக மணலி பகுதி முழுவதும் சிறிய, பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன.
வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, சான்றிதழ்கள்
மாவட்ட அளவிலான 'தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை' விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு பரிசு வழங்கும் விழா திருவள்ளூரில் நடந்தது. இந்த விழாவிற்கு கலெக்டர் த.பிரபு தலைமை தாங்கினார்.
புதிய டிரான்ஸ்பார்மர்கள்
செங்குன்றம் அடுத்த பாடிய நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மொண்டியம்மன் நகர், நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட காந்தி நகர், ஆட்டம் தாங்கள் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது. இதனால், அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும்
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்று பொன்னேரி நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெண்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி
பழவேற் காடு மீனவப் பகுதியில் வசிக்கும் பெண்களுக்கு சுய தொழில் மூலம் வாழ்க் கையில் முன்னேறுவதற்கு சுய தொழில் பயிற்சிகள் இந்தியன் வங்கி சார்பில் அளிக்கப்பட்டு வருகிறது.
ஆந்திராவிலிருந்து குட்கா கடத்திய வாலிபர் கைது
திரு வள்ளூர் மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு தடுக்கும் வகையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெட்ரோ ரயில்களில் 92.77 லட்சம் பேர் பயணம்
செப்டம்பர் மாதத்தில் 92,77,697 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப்பாதை அமைக்காததால் பயணிகள் கடும் அவதி
ஆவடி ரயில் நிலையத்தில் சுரங்கப் பாதை அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் ஆபத்தான முறையில் தண்டவாளத்தைக் கடந்து செல்கின்றனர்.