試す 金 - 無料
தேவை... சூழலுக்கேற்ற சீர்திருத்தம்!
Dinamani Cuddalore
|April 01, 2025
காவல் துறையில் பலர் அர்ப்பணிப்பு உணர்வோடு சட்டம் ஒழுங்கைப் பேணிக் காக்க தொடர்ந்து உழைக்கிறார்கள். அவர்களுக்கு சரியான கால இடைவெளிகளில் பதவி உயர்வு மற்றும் ஏனைய பணி சார்ந்த பயன்கள் மற்றும் அங்கீகாரம் உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும்.
சமூகத்தில் குற்றச் செயல்கள் புரிபவர்களை உரிய வகையில் அறிவுறுத்தியும் கண்டித்தும் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்தும் பொது அமைதியைப் பேண பெரிதும் துணை நிற்பவர்கள் காவல் துறையினர். துணிச்சலும், நேர்மையும், கருணையும் கொண்ட பலர் தமிழ்நாடு காவல் துறையில் இருக்கவே செய்கின்றனர். பேரிடர் நேரங்களிலும் பெருந்தொற்றுக் காலங்களிலும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கடமையாற்றியவர்கள் நம் காவல் துறையினர். இப்படியாகப் பல பெருமைகளைத் தன்னகத்தே கொண்ட தமிழ்நாடு காவல் துறைக்கு இது ஒரு நெருக்கடியான காலம்.
பள்ளி, கல்லூரிகளில் அதிகரித்து வரும் போதைப் பொருள்களின் நடமாட்டம், தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களைப் பயன்படுத்தி நிகழும் பொருளாதார மோசடிகள் உள்ளிட்ட கண்காணிப்புகளைக் கடந்த குற்றச்செயல்கள் பெருகிவருகின்றன. காவல் துறை மீதான நம்பகத்தன்மையை சீர்குலைக்கின்ற இத்தகைய நிகழ்வுகள் வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்தெறியப்பட வேண்டும்.
சமீபத்தில் கோயம்புத்தூரில் காவல் துறையின் தலைவர் ஒருவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இன்னும் ஒரு மாதத்துக்குள் பள்ளிகளில் போதைப்பொருள் இல்லை என்ற நிலையை உருவாக்குவோம் என்பதுதான் அந்த அறிக்கை. இது பெற்றோர்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி. சமூக அக்கறை கொண்டவர்களுக்கு இது மனதை உலுக்கும் செய்தி. கிராமப்புறங்களில் தொடங்கி பெருநகரங்கள் வரை போதைப் பொருள்கள் விற்பனை கொடிகட்டிப் பறக்கின்றது.
தமிழ்நாட்டில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக மட்டும் கடந்த 5 ஆண்டுகளில் ஏறத்தாழ 45 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 66 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கமான ஹெராயின், எல்எஸ்டி ஸ்டாம்ப், மெத்தம்பெட்டமின், கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் ஆகியவற்றோடு தற்போது அதிகம் தீங்கிழைக்கும் சிந்தட்டிக் என்ற வேதிப் போதைப் பொருள் புழக்கமும் அதிகரித்துவிட்டது. இதன் பரிமாற்றத்துக்கு சமூக ஊடகங்களும், கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்களும் சமூக விரோதச் செயலில் ஈடுபடுபவர்களால் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. அதனால் தற்போது தமிழ்நாடு அரசும் காவல் துறைத் தலைவரும் கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ள செய்திகளைக் காண்கிறோம்.
このストーリーは、Dinamani Cuddalore の April 01, 2025 版からのものです。
Magzter GOLD を購読すると、厳選された何千ものプレミアム記事や、10,000 以上の雑誌や新聞にアクセスできます。
すでに購読者ですか? サインイン
Dinamani Cuddalore からのその他のストーリー
Dinamani Cuddalore
வானொலியில் புரட்சி
\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.
1 mins
May 31, 2026
Dinamani Cuddalore
நம்பிக்கை நட்சத்திரம்
உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.
1 min
May 31, 2026
Dinamani Cuddalore
வியக்க வைக்கும் பள்ளி
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.
2 mins
May 31, 2026
Dinamani Cuddalore
சைக்கிள் ஓட்டுவோம்..!
குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'.
2 mins
May 31, 2026
Dinamani Cuddalore
இயக்குநர்களின் லைன் அப்!
லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...
2 mins
May 31, 2026
Dinamani Cuddalore
தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
1 min
May 30, 2026
Dinamani Cuddalore
இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்
ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.
1 min
May 29, 2026
Dinamani Cuddalore
சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் ஓய்வு பெற்றார்
சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான ஆர். சுரேஷ்குமார், வியாழக்கிழமையுடன் (மே 28) பணி ஓய்வு பெற்றார்.
1 min
May 29, 2026
Dinamani Cuddalore
பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...
தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.
1 mins
May 29, 2026
Dinamani Cuddalore
தவெகவில் இணைந்த அண்ணா தொழிற்சங்க செயலர்
வெல்லமண்டி நடராஜன், முன்னாள் டிஜிபி நடராஜும் இணைந்தனர்
1 mins
May 29, 2026
Translate
Change font size

