தமிழ்நாட்டில் பெண்களின் "உயர்கல்வியை உறுதி செய்வதற்கென தொடங்கப்பட்ட புதுமைப் பெண் திட்டமானது மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளதையடுத்து, 2024-2025 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், பெண்களின் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட 'மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் புதுமைப்பெண் திட்டம்' பெண்களின் உயர்கல்வியில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், அரசு பள்ளிகளில் பயின்ற, ஏழை எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கிடவும், அரசுப் பள்ளி மாணவர்களின் உயர்கல்வி சேர்க்கையை உயர்த்திடவும், 'தமிழ்ப் புதல்வன்' எனும் ஒரு மாபெரும் திட்டம் வரும் நிதியாண்டில் இருந்து அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோயம்புத்தூர் மாவட்டம், கோயம்புத்தூர் அரசு கலைக்கல்லூரியில், தமிழ்நாட்டு மாணவர்கள் தரணியை வென்றிட, 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும் மற்றும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று, உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 உதவித்தொகை வழங்கும் மகத்தான திட்டமான "தமிழ்ப் புதல்வன்" திட்டத்தை 09.08.2024 அன்று துவக்கி வைத்தார். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் ஆயிரம் ரூபாய் நிதி உதவி என்பது மிகச்சிறந்த உதவித்தொகையாகும். மாணவர்களுக்கு எதிர்கால வாழ்விற்கான முதலீடாக இருக்க வேண்டும் என்று இத்திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி உள்ளார்.
அதனைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வள் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 1000 பெறும் மாணவர்களுக்கு பற்று அட்டைகளை மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் திரு. எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி, நாடாளுமன்ற உறுப்பினர் மணி ஆகியோர் முன்னி பாப்பிரெட்டிப்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் வழங்கினார்.
この記事は Maalai Express の August 29, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です ? サインイン
この記事は Maalai Express の August 29, 2024 版に掲載されています。
7 日間の Magzter GOLD 無料トライアルを開始して、何千もの厳選されたプレミアム ストーリー、9,000 以上の雑誌や新聞にアクセスしてください。
すでに購読者です? サインイン
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் பயனடைந்தவர்களிடம் ஆட்சியர் கலந்துரையாடல்
கோயம்புத்தூர் மாவட்டம், காரமடை ஊராட்சி ஒன்றியம், பெள்ளாதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்லம் திட்டம் மற்றும் ஊரக வீடுகள் பழுதுநீக்கும் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் பயன்பெற்ற பயனாளிகளின் வீடுகளை நிறைந்தது மனம் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி, செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பயனாளிகளிடம் இத்திட்டத்தின் பயன் குறித்து கலந்துரையாடினார்.
காரைக்காலில் 60 மோட்டார் சைக்கிள் பறிமுதல்
காரைக்காலில் 18 வயதுக்கு உட்பட்ட 60 மாணவர்கள், மோட்டார் சைக்கிள் இயக்கியதால், மாவட்ட போக்குவரத்து துறை 60 மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, பெற்றோர்களை அழைத்து எச்சரிக்கை விடுத்ததோடு, ரூ.55 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மாநில பொருளாதாரத்தை விரிவுபடுத்தும் நோக்கில் பஞ்சாலைகளில் கவர்னர் ஆய்வு
புதுவையிலுள்ள பஞ்சாலைகள் மற்றும் விமான நிலையத்தை கவர்னர் கைலாஷ் நாதன் ஆய்வு செய்தார்.
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கிய சுப்ரீம் கோர்ட்
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் அமலாக்கத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
நாடுமுழுவதும் சமீப நாட்களாக ரெயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன.
அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.54,600-க்கு விற்பனையானது.
மத்திய அரசின் முடிவால் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத சூழல்: அமைச்சர் அன்பில் மகேஷ்
நாமக்கல்லில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
அரியானா தேர்தல்: சுயேச்சையாக களமிறங்கும் இந்தியாவின் கோடீஸ்வர பெண்
நாட்டின் கோடீஸ்வர பெண்கள் பட்டியலில் ரூ.3.31 லட்சம் கோடியுடன் முதலிடத்தில் இருப்பவர் சாவித்ரி ஜிண்டால். ஒ.பி. ஜிண்டால் குழும தலைவரான இவரது மகன் நவீன் ஜிண்டால் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார்.
ரூ.100 கோடி முதலீடு செய்யும் வகையில் ஆர்ஜிபிஎஸ்ஐ நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
இந்தியாவில் மாணவர்களின் கற்றலை மாற்றியமைக்கும் லீட் குழுமத்தின் ‘டெக்புக்' அறிமுகம்
இந்தியாவின் மிகப் பெரிய ஸ்கூல் எட்டெக் நிறுவனம் லீட்குரூப். இந்நிறுவனமானது, பாரம்பரிய பாடநூல் சார்ந்த கற்றலை மாற்றியமைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட டெக்புக் எனும் அறிவார்ந்த புத்தகத்தை அறிமுகப் படுத்துவதாக அறிவித்துள்ளது.