பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஏப். 8) தமிழகம் வருகை தருகிறார்.
சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் இயக்கம் உள்பட பல்வேறு புதிய திட்டங்களை சென்னையில் அவர் தொடங்கி வைக்கிறார்.
ஆந்திர மாநிலத்தில் அரசு நிகழ்ச்சிகளில் சனிக்கிழமை பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி, பிற்பகலில் சென்னை வருகிறார். விமான நிலையத்துக்கு 2.45 மணிக்கு வரும் பிரதமர் மோடி, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த விமான முனையக் கட்டடத்தின் முதல் பகுதியைத் திறந்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சி, பிற்பகல் 3 மணி முதல் 3.15 மணி வரை நடைபெறவுள்ளது.
புதிய முனையக் கட்டடத்தைத் திறப்பதன் மூலமாக, விமான நிலையத்தின் பயணிகள் சேவைத்திறன் ஆண்டுக்கு 2.3 கோடியிலிருந்து 3 கோடியாக உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய முனையத்தின் உட்புறத் தோற்றமானது, தமிழ்நாட்டின் பாரம்பரிய பெருமைகளைப் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் ரயில்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மாலை 4 மணியளவில், சென்னை-கோவை இடையிலான 'வந்தே பாரத்' அதிவிரைவு ரயிலை பிரதமர் மோடி கொடிய சைத்துத் தொடங்கி வைக்கிறார். ரூ.294 கோடி மதிப்பில் திருத்து றைப்பூண்டி - அகஸ்தியம்பள்ளி இடையே அகல ரயில் பாதைத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. மட்டுமல்லாது, இந்தத் தடத்தில் தாம்பரம் - செங்கோட்டை இடையிலான ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.
விவேகானந்தர் இல்லம்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, மீண்டும் ஐஎன்எஸ் அடையாறு கடற்படைத் தளத்துக்குத் திரும்பும் வழியில், கடற்கரைச் சாலையில் உள்ள விவேகானந்தர் இல்லத்துக்கு பிரதமர் செல்கிறார். அங்கு சுவாமி விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றைச் சித்தரிக்கும் மெய்நிகர் காட்சி உள்ளிட்ட அம்சங்களைப் பார்வையிட உள்ளார்.
Denne historien er fra April 08, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra April 08, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நட்பு நாடுகளின் அழைப்பை நிராகரித்தது இஸ்ரேல்
ஹிஸ்புல்லாக்களுடன் சண்டை நிறுத்தம்
சண்டிமல் சதம்: இலங்கை - 306/3
வீரர்களுடன் கலந்துரையாடல்
வங்கதேச டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
கான்பூரில் இன்று 2-ஆவது ஆட்டம் தொடக்கம்
மார்க்சிஸ்ட் தலைவர் எம்.எம்.லாரன்ஸ் உடலை ஏற்றுக்கொண்டது களமசேரி மருத்துவக் கல்லூரி
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸின் உடலை தானம் செய்வது குறித்து எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, அவரது உடலை கலமசேரி மருத்துவக் கல்லூரி ஏற்க முடிவு செய்து, உடற்கூறியல் துறைக்கு உடலை மாற்றியது.
எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி
கடந்த 10 ஆண்டுகளில் எதிா்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மோடி
ஹரியாணா பிரசாரத்தில் ராகுல்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் எழாது
‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் புதைக்கப்பட்டு விட்டது, அது மீண்டும் எழப்போவதில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை தொடர் ஆய்வு செய்ய வேண்டும்
தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிலுள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்
‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.