மணிப்பூரில் அண்மையில் நிகழ்ந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ் ஐடி) விசாரணை கோரி, பழங்குடியின அமைப்பு சார்பில் உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கை, தலைமை டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, நீதிபதி ஜெ.பி.பர் அடங்கிய திவாலா ஆகியோர் அமர்வு திங்கள்கிழமை விசாரிக்கவுள்ளது.
பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூரில், 53 சதவீதம் உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களுக்கு பழங்குடியின அந்தஸ்து கோரி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஹிந்துக்களாவர்.
அதேநேரம், மாநில மக்கள்தொகையில் 40 சதவீதம் உள்ள நாகா, குகி உள்ளிட்ட பழங்குடியினர், மைதேயி சமூகத்தினரின் கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பழங்குடியினர்களில் பெரும்பாலானோர் கிறிஸ்தவமதத்தைப் பின்பற்றுகின்றனர்.
இந்தச் சூழலில், இரு சமூகங்களுக்கும் இடையே கடந்த புதன்கிழமை பெரும் கலவரம் மூண்டது. வீடுகள், கடைகள், வழிபாட்டுத் தலங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையை ஒடுக்க ராணுவத்தினர், அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் படையினர், துணை ராணுவத்தினர் என சுமார் 10,000 பேர் குவிக்கப்பட்டனர். மாநிலம் முழுவதும் கைப்பேசி இணையச் சேவை முடக்கப்பட்டது.
பலத்த பாதுகாப்புக்கு இடையே மாநிலத்தில் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது. கலவரத்தில் 54 பேர் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Denne historien er fra May 08, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra May 08, 2023-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நட்பு நாடுகளின் அழைப்பை நிராகரித்தது இஸ்ரேல்
ஹிஸ்புல்லாக்களுடன் சண்டை நிறுத்தம்
சண்டிமல் சதம்: இலங்கை - 306/3
வீரர்களுடன் கலந்துரையாடல்
வங்கதேச டெஸ்ட் தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
கான்பூரில் இன்று 2-ஆவது ஆட்டம் தொடக்கம்
மார்க்சிஸ்ட் தலைவர் எம்.எம்.லாரன்ஸ் உடலை ஏற்றுக்கொண்டது களமசேரி மருத்துவக் கல்லூரி
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவா் எம்.எம்.லாரன்ஸின் உடலை தானம் செய்வது குறித்து எழுந்த சா்ச்சையைத் தொடா்ந்து, அவரது உடலை கலமசேரி மருத்துவக் கல்லூரி ஏற்க முடிவு செய்து, உடற்கூறியல் துறைக்கு உடலை மாற்றியது.
எதிர்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வி
கடந்த 10 ஆண்டுகளில் எதிா்க்கட்சியாகவும் காங்கிரஸ் தோல்வியடைந்துவிட்டது என்று பிரதமா் நரேந்திர மோடி விமா்சித்தாா்.
வேலைவாய்ப்பு உருவாக்கத்தை முடிவுக்கு கொண்டுவந்த மோடி
ஹரியாணா பிரசாரத்தில் ராகுல்
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் மீண்டும் எழாது
‘ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் புதைக்கப்பட்டு விட்டது, அது மீண்டும் எழப்போவதில்லை’ என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா்.
அரசு மருத்துவமனை உள்ளிட்ட முக்கிய கட்டடங்களை தொடர் ஆய்வு செய்ய வேண்டும்
தமிழகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிலுள்ள மருத்துவமனை மற்றும் பிற முக்கிய கட்டடங்களை அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு உத்தரவிட்டாா்.
குடும்ப வன்முறை சட்டம் அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்
‘குடும்ப வன்முறையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க உருவாக்கப்பட்டுள்ள ‘குடும்ப வன்முறைச் சட்டம் 2005’, மதங்களைக் கடந்து அனைத்துப் பெண்களுக்கும் பொருந்தும்’ என்று உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும்
தொழில்நுட்ப மேம்பாடு ஏழைகளுக்கு பலனளிக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தினாா்.