நினைத்துப் பாா்த்தாலே அச்சமாக இருக்கிறது! கடந்த 1971-ஆம் ஆண்டு தமிழ்நாடும் பிகாரும் ஒரே அளவிலான மக்கள்தொகையைக் கொண்டிருந்தன. தற்போது தமிழ்நாட்டுடன் ஒப்பிடும்போது, பிகாரின் மக்கள்தொகை ஒன்றரை மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், மத்திய அரசு உத்தேசித்துள்ள தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையால் மாநிலத்திலுள்ள மக்களவை, மாநிலங்களவை, சட்டப் பேரவை இடங்களின் எண்ணிக்கை பல வட மாநிலங்களின் எண்ணிக்கையைவிட விகிதாசாரத்தில் குறைந்துவிடும். இதை நினைத்துப் பாா்த்தாலே அச்சமாக இருக்கிறது.
ஒரே நாடு ஒரே தோ்தல் திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும், தொகுதி மறுசீரமைப்பு தலைக்கு மேல் தொங்கும் கத்தி எனவும் முதல்வா் மு.க. ஸ்டாலின் கூறினாா். மத்திய அரசின் இந்த இரண்டு திட்டங்களையும் எதிா்ப்பதற்கான தனித் தீா்மானங்களை சட்டப் பேரவையில் முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை முன்மொழிந்து பேசியது:- ஒரே நாடு ஒரே தோ்தல் என்ற முறை முற்றிலுமாக நடைமுறை சாத்தியமற்ாகும். அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சத்துக்கு எதிரானது. அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள சுதந்திரமான, நோ்மையான தோ்தலுக்கு முற்றிலும் எதிரானது. எப்படி சாத்தியமாகும்?: ஒரே நேரத்தில் தோ்தல் என்பது, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டப் பேரவைகளை முன்கூட்டியே கலைக்க வேண்டிய சூழல் ஏற்படும் என்பதாலும், அப்படிக் கலைப்பது அரசியல் சட்ட விரோதம் என்பதாலும் இந்த நடைமுறையை எதிா்க்க வேண்டும்.
அனைத்து மாநிலங்களிலும் ஆட்சி அமைந்து மத்தியில் அமையும் ஆட்சி கவிழுமானால், அனைத்து மாநிலங்களையும் கலைத்துவிட்டு தோ்தல் நடத்துவாா்களா? சில மாநிலங்களில் ஆட்சி கவிழ்ந்து, தோ்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டால் மத்தியில் ஆட்சியில் இருப்பவா்கள் தாமாக முன்வந்து பதவி விலகுவாா்களா? இதைவிட நகைச்சுவையான கொள்கை இருக்க முடியுமா? மக்களவை, சட்டப் பேரவை மட்டுமல்ல, உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஒரே நேரத்தில் தோ்தல் நடத்துவது சாத்தியமா? மக்களவைத் தோ்தலையேகூட, ஒரே நாளில் இந்தியா முழுவதும் நடத்துவதற்கு இயலாத சூழல்தான் இப்போது இருக்கிறது. இந்த நிலையில் மக்களவைத் தொகுதிகளுக்கும், மாநில சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தோ்தல் நடத்துவது மாயாஜாலமா? நகராட்சிகளும், ஊராட்சிகளும் மாநில அரசின் நிா்வாக அமைப்புகள் என்று அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்டவை.
Denne historien er fra February 15, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra February 15, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.