பாகிஸ்தானில் ஷாபாஸ் ஷெரீஃப் தலைமையில் அமையவிருக்கும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சியின் ஆட்சியில் கட்சி நிறுவனரான நவாஸ் ஷெரீஃப் முக்கியப் பங்கு வகிப்பாா் என்று அவரது மகளும், அரசியல் வாரிசுமான மரியம் நவாஸ் புதன்கிழமை தெரிவித்தாா்.
புதிய அரசில் நவாஸ்தான் பிரதமராகப் பொறுப்பேற்பாா் என்று எதிா்பாா்க்கப்பட்ட நிலையில், அவரது இளைய சகோதரா் ஷாபாஸ் ஷெரீஃப் தான் பிரதமா் பதவியை ஏற்பாா் என்று செவ்வாய்க்கிழமை (பிப்.13) நள்ளிரவு திடீரென அறிவிக்கப்பட்டது. பஞ்சாப் மாகாணத்தின் அடுத்த முதல்வராக மரியம் நவாஸ் பொறுப்பேற்பாா் என்று தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, அரசியலில் இருந்து நவாஸ் ஷெரீஃப் விலகப்போவதாக சமூக ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.
அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ‘எக்ஸ்’ ஊடகத்தில் மரியம் நவாஸ் வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
புதிய அரசில் பிரதமா் பதவியை ஏற்க மறுத்துள்ளதால் அரசியலில் இருந்து நவாஸ் ஷெரீஃப் விலகுவதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை. (புதிய ஆட்சி நடைபெறும்) அடுத்த 5 ஆண்டுகள் நவாஸ் ஷெரீஃப் மிகத் தீவிரமான அரசியலில் ஈடுபடுவாா். அதுமட்டுமின்றி, மத்தியிலும், பஞ்சாப் மாகாணத்திலும் நடைபெறவிருக்கும் ஆட்சியை அவா்தான் வழிநடத்துவாா்.
Denne historien er fra February 15, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra February 15, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நில அதிர்வு
வீடுகளைவிட்டு வெளியேறிய மக்கள்
ஓட்டுநர் இல்லா முதல் மெட்ரோ ரயில்: தயாரிப்பு பணி வெற்றிகரமாக நிறைவு
சென்னையில் ஓட்டுநா் இல்லாத முதல் மெட்ரோ ரயிலின் உற்பத்தியை அல்ஸ்டோம் டிரான்ஸ்போா்ட் இந்தியா நிறுவனம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அனைத்து தரப்பினருக்குமான பொருளாதார வளர்ச்சி
நிர்மலா சீதாராமன் பெருமிதம்
ஈரான்: நிலக்கரி சுரங்க வெடிவிபத்தில் 34 பேர் உயிரிழப்பு
ஈரானில் உள்ள நிலக்கரி சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவு காரணமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 34 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 17 போ் காயமடைந்தனா். 200 மீட்டா் ஆழத்தில் சுமாா் 17 போ் சிக்கியிருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா 100 ராக்கெட்டுகள் வீச்சு
போர்ப் பதற்றம் அதிகரிப்பு
அஸ்வின் சுழலில் சுருண்டது வங்கதேசம்; இந்தியா வெற்றி
வங்கதேசத்திற்கு எதிரான முதலிடெஸ்ட்டில் இந்தியா 280 ரன்கள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வென்றது.
தொங்கு பேரவையைத் தவிர்க்கவே காங்கிரஸுடன் கூட்டணி
ஜம்மு-காஷ்மீரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலை உருவாகி தொங்கு பேரவை அமைந்துவிடக் கூடாது என்பதற்காகவே காங்கிரஸுடன் தேசிய மாநாட்டுக் கட்சி கூட்டணி அமைத்தது என்று அக்கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா தெரிவித்தாா்.
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு பாடம் புகட்டும்
ஜம்மு-காஷ்மீரில் பாஜக ஆட்சி அமைத்து பாகிஸ்தானுக்கு தகுந்த பாடம் புகட்டும் என்று தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பேசினாா்.
எம்கியூ-9பி ட்ரோன் கொள்முதல்: இந்தியாவின் முடிவுக்கு பைடன் வரவேற்பு
நீண்டகால பயன்பாட்டுக்கு உதவும் 31 எம்கியூ-9பி ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) அமெரிக்காவிடம் இருந்து கொள்முதல் செய்யும் இந்தியாவின் திட்டம் இறுதிகட்டத்தை எட்டியிருப்பது வரவேற்புக்குரியது என்று அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
பிரதமர் நரேந்திர மோடியின் தற்போதைய அமெரிக்கப் பயணத்தின்போது இந்தியாவிடம் 297 தொன்மையான கலைப்பொருள்களை இந்தியாவிடம் அமெரிக்கா திரும்ப ஒப்படைத்துள்ளது.