தகுதி உடையவர் மட்டுமே தேர்தலில் நிற்க முடியும் என்ற விதி நமது முன்னோரின் தெளிந்த சிந்தனையை வெளிப்படுத்துகிறது. தகுதி இழப்பு பற்றிய செய்திகள் இன்னும்கூட நாம் ஜனநாயகப் பாதையில் பயணிக்க வேண்டிய தொலைவு அதிகமிருக்கிறது என்பதையே வெளிப்படுத்துகிறது. உத்தரமேரூர் குடவோலை முறைக் கல்வெட்டுகள் என்பன தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், காஞ்சிபுரம் வட்டம், உத்தரமேரூர் கிராமம் வைகுந்தப் பெருமாள் கோயிலில், முதலாம் பராந்தக சோழனின் (907-955ஆம் ஆண்டு) 12-ஆம் ஆட்சி ஆண்டிலும், 14- ஆம் ஆட்சி ஆண்டிலும் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டுகள் ஆகும். சோழர்களின் நிர்வாகம் மக்களாட்சி கொள்கைகளின் அடிப்படையில் செயல்பட்டு வந்தது என்பதை இந்தக் கல்வெட்டுகள் நிறுவுகின்றன.
இந்தக் கல்வெட்டுகளின் காலத்தை மனதில் கொண்டு பார்த்தால் பதினோரு நூற்றாண்டுகளுக்கு முன்புதான் இத்தகைய கிராமிய உள்ளாட்சி அமைப்புகளின் சுயாட்சி முறை ஏற்பட்டிருக்கிறது என்று தோன்றுகிறது. ஆனால், ஏறத்தாழ இரண்டாயிரத்து அறுநூறு ஆண்டுகளுக்கு முன்பே ஏதென்ஸ் நகரில் பிரபுத்துவத்தை எதிர்கொள்ள "டெமோகிராடிக்கா' என்ற ஜனநாயக அமைப்பு செயல்பட்டதைப் பார்க்கிறோம்.
உத்தரமேரூரில் சொல்லியிருக்கும் குடவோலை முறையைப் போலவே ஏதென்ஸிலும் இரண்டு குடங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில் ஆதரவு நிலை, எதிர்நிலை என ரகசியமாகக் கற்களை இடுவதன் மூலம் கணிப்பு செய்யப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் கூடும் "அசெம்பிளி' என்ற ஆட்சி மன்றம் அமைத்து செயல்பட்டார்கள் என்பதில் இருந்தே உலகின் ஜனநாயக சித்தாந்தம் தொடங்குகிறது என்றும் சிலர் கருதுகிறார்கள்.
ஜனநாயகம் என்பது மனிதர்கள் அனைவரும் சமம் என்ற சமரச சிந்தனையின் வெளிப்பாடு. அனைவருக்கும் அனைத்து வளங்கள் மற்றும் அதிகாரத்தில் சமமான பங்கு உண்டு என்பதை நிலைநாட்டவே ஏற்பட்டது ஜனநாயகம். பாரத தேசத்தைப் பொருத்தவரை, அனைத்து ஜீவராசிகளும் இறைவனின் அம்சம் என்ற கோட்பாடும் சித்தாந்தமும் கொண்டது.
இந்த சிந்தனையே இந்த மண்ணில் ஜனநாயக நடைமுறையை சுலபமாக்கியிருந்தது என்பதுடன் இயல்பாக்கியிருந்தது. நமது தேசத்தின் ஜனநாயக சிந்தனை எங்கிருந்து தொடங்குகிறது என்பதை உத்தரமேரூர் கல்வெட்டிலிருந்தும் முன் நகர்ந்து பார்த்தோமானால் அது ரிக் வேதத்தில் கொண்டுபோய் நம்மை நிறுத்துகிறது.
Denne historien er fra May 08, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra May 08, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 37-ஆக உயர்வு
லெபனான் தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதியில் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 37-ஆக உயா்ந்தது.
எஃப்ஐஎச் ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் ஹர்மன்ப்ரீத் சிங்
பாரீஸ் ஒலிம்பிக்கில் இந்திய அணி மீண்டும் வெண்கலம் வெல்ல உதவிய கேப்டன் ஹர்மன்ப்ரீத் சிங் சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் (எஃப்ஐஎச்) ஆண்டின் சிறந்த வீரர்கள் தேர்வுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நிலையான வாழ்க்கை முறைக்கு உலகளாவிய மாற்றம்
நிலையான வாழ்க்கை முறைகளை உலக அளவில் ஏற்றுக் கொண்டால் பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பல சவால்களைச் சமாளிக்க முடியும்' என்று ஐ.நா.வின் உச்சி மாநாட்டில் இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.
சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமர்ந்திருந்தவர்கள் எங்களை அச்சுறுத்துகின்றனர்
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்திக்கு எதிரான ஆா்எஸ்எஸ்-பாஜகவின் வெறுப்பு பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘நாட்டின் சுதந்திரப் போராட்டத்தின்போது வீட்டில் அமா்ந்திருந்தவா்கள் தற்போது எங்களை அச்சுறுத்துகின்றனா்’ என்று விமா்சித்தாா்.
இந்திய பெருங்கடலில் போர்த்திறனை மேம்படுத்த கடற்படை முடிவு
இந்தோ-பசிபிக்பிராந்தியத்தின் புவிசார் அரசியல் மற்றும் இந்திய பெருங்கடலில் அதிகரித்து வரும் சீன ஊடுருவலின் பின்னணியில் அங்கு இந்தியாவின் போர்த் திறனை மேம்படுத்த கடற்படைதளபதிகள் முடிவெடுத்துள்ளனர்.
பிரதமர் மோடியைக் கண்டு பாகிஸ்தான் அஞ்சுகிறது
'பிரதமர் நரேந்திர மோடி மீது பாகிஸ்தானுக்கு உள்ள பயம் காரணமாக எல்லை பகுதிகளில் தற்போது அமைதி நிலவி வருகிறது' என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றார் பிரதமர் மோடி
'க்வாட்' உச்சிமாநாடு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவுக்கு சனிக்கிழமை சென்றார்.
3 ஆண்டுகளில் 2.7 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
கடந்த 3 ஆண்டுகளில் 238 தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் 2.07 லட்சம் பேருக்கு வேலை வழங் கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி. கணேசன் தெரிவித்தார்.
அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை
அதிமுகவில் இணைப்பு பேச்சுக்கே இடமில்லை என்று கட்சியின் பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க முன் வர வேண்டும்
மாணவர்கள் சொந்தமாக புதிய தொழில்நுட்பங்களை கண்டுபிடிக்கும் அளவுக்கு தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வலியுறுத்தினார்.