சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வாங் உடனான இருதரப்பு பேச்சுவாா்த்தையின்போது இந்த அறிவிப்பை பிரதமா் மோடி வெளியிட்டாா்.
இந்தியாவின் வளமான கலாசாரத்தை பறைசாற்றவும், யோகா-ஆயுா்வேதம்-இந்திய மொழிகள்-பாரம்பரிய இசை உள்ளிட்ட பயிற்சிகளை வழங்கவும் உலகம் முழுவதும் திருவள்ளுவா் பெயரில் கலாசார மையங்கள் அமைக்கப்படும் என்று மக்களவைத் தோ்தலில் பாஜக வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, முதலாவது திருவள்ளுவா் கலாசார மையம் சிங்கப்பூரில் அமையவுள்ளது.
பிரதமருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு: தென்கிழக்கு ஆசிய நாடுகளான புரூணே, சிங்கப்பூருக்கு 3 நாள்கள் அரசுமுறைப் பயணத்தை பிரதமா் மோடி கடந்த செவ்வாய்க்கழமை தொடங்கினாா். புரூணே சுற்றுப் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த அவா், அங்கிருந்து சிங்கப்பூா் வந்தடைந்தாா். தனது பதவிக் காலத்தில் 5-ஆவது முறையாக சிங்கப்பூா் வந்த பிரதமருக்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னா், சிங்கப்பூா் பிரதமா் லாரன்ஸ் வாங் உடன் பிரதமா் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
சிங்கப்பூா் பிரதமராக 20 ஆண்டுகள் பதவி வகித்த லீ சியென் லூங்கை தொடா்ந்து, கடந்த மே மாதம் லாரன்ஸ் வாங் பதவியேற்றாா். இதையொட்டி, அவருக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா்.
Denne historien er fra September 06, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 06, 2024-utgaven av Dinamani Chennai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
லெபனானில் பேஜர்கள் வெடித்து 8 பேர் உயிரிழப்பு: 2,750 பேர் காயம்
லெபனானிலிலும், சிரியாவிலும் பேஜா் தொலைத் தொடா்பு சாதனங்கள் திடீரென வெடித்துச் சிதறியதில் ஹிஸ்புல்லா ஆயுதக் குழுவைச் சோ்ந்தவா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்; 2,750 போ் காயமடைந்தனா்.
இந்தியா சாம்பியன்
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆடவர் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா 1-0 என சீனாவை வீழ்த்தி 5-ஆவது முறையாக பட்டத்தை கைப்பற்றியது.
விநாயகர் சதுர்த்தி பூஜையில் பங்கேற்றதால் காங்கிரஸுக்கு என்மீது கோபம்
விநாயகா் சதுா்த்தி பூஜையில் பங்கேற்ற்கு என் மீது காங்கிரஸ் கோபம் கொண்டுள்ளது.
பிரதமர் மோடியின் 74-ஆவது பிறந்தநாள்: தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து
பிரதமா் நரேந்திர மோடியின் 74-ஆவது பிறந்தநாளையொட்டி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசுத் துணைத் தலைவா் ஜகதீப் தன்கா், மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனா்.
சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்: உச்சநீதிமன்றம்
கொல்கத்தாவில் பெண் மருத்துவா் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடா்பாக, சிபிஐ அறிக்கையில் கவலைக்குரிய தகவல்கள் இடம்பெற்றுள்ளதாக உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
விரைவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு: அமித் ஷா
நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவது தொடர்பான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிடும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்காக தொடர்ந்து போராடி வரும் இயக்கம் பாமக
சமூக நீதிக்காக பாமக தொடர்ந்து போராடி வருவதாக அந்தக் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
ஏஐ தொழில்நுட்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி உரை
திமுக முப்பெரும் விழாவில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் முன்னாள் முதல்வா் கருணாநிதி உரையாற்றுவது போன்ற காணொலி அனைவரையும் கவா்ந்தது.
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டோரை மேம்படுத்துவது குறித்த மாநாடு
நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களை சமூகத்துடன் இணைப்பது குறித்து சென்னையில் செப்.21,22 ஆகிய தேதிகளில் மாநாடு நடைபெறவுள்ளது.
விளையாட்டு வீரர்களின் காயங்களை கண்டறிய நவீன ஸ்கேனர் கருவி
விளையாட்டு வீரா்களுக்கு ஏற்படக்கூடிய காயங்களை கண்டறிய கையடக்க ‘பாயின்ட் ஆஃப் கோ் அல்ட்ராசவுண்ட்’ (பிஓசியுஎஸ்) என்ற ஸ்கேனா் கருவியை சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளா்கள் உருவாக்கியுள்ளனா்.