பா.ஜ.க.வுடன் கூட்டணியா? எடப்பாடி பழனிசாமி திடீர் டெல்லி பயணம்!
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று திடீரென டெல்லிக்கு பயணம் ஆனார்.
அவர், பா.ஜ.க.வுடன் தொடர்புடைய முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுவார் என கூறப்படுகிறது. இன்று இந்த நிலையில் மாலை எஸ்.பி. வேலுமணியும் டெல்லிக்கு செல்கிறார்.
பாரதிய ஜனதா கட்சியுடன் அ.தி.மு.க. உறவில் இருந்தது. ஆனால், பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னர் பா.ஜ.க.வுடன் உள்ள உறவை அ.தி.மு.க. முறித்துக்கொண்டது.
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல்மட்டுமல்லாது, இனி எக்காலத்திலும் அக்கட்சியுடன் கூட்டணி கிடையாது என எடப்பாடி பழனிசாமியும், சில தலைவர்களும் தெரிவித்துவந்தார்கள்.
ஆனால், தற்போது அரசியல் சூழ்நிலை மாறிவிட்டது. நடிகர் விஜயும் கட்சித் தொடங்கிவிட்டார். அவர் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாம் என கருத்து எழுந்தது. ஆனால், விஜய் தனித்தே போட்டியிடுவார் என அவரது அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறிவிட்டார்.
ஆகவே, பலமான தி.மு.க. கூட்டணியை எதிர்க்க அ.தி.மு.க.வுக்கும் பலமான கூட்டணி தேவைப்படுகிறது. ஆனால், தற்போதைய நிலையில் அ.தி.மு.க.க்கு உடன்படும் கட்சிகள் இல்லை. எனவே, மீண்டும் பா.ஜ.க. அணியுடன் சேர அ.தி.மு.க. தலைவர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது.
Denne historien er fra March 25, 2025-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra March 25, 2025-utgaven av Malai Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
முதல்வர் ஸ்டாலினுக்கு எர்ணாவூர் நாராயணன் பாராட்டு!
திருச்சியில் 290 கோடி ரூபாய் மதிப்பில் அமைய உள்ள நூலகத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயர் சூட்டப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக எர்ணாவூர் நாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

பரஸ்பர வரி விதிப்பு நடவடிக்கை: இந்தியா மீதான 100 சதவீத வரி இன்று முதல் அமலுக்கு வருகிறது!
இந்தியாவிற்கு போட்டியாக பரஸ்பர வரி விதிக்கும் அமெரிக்காவின் நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வருகிறது.
மதுரவாயலில் 2 ஜே.சி.பி. எந்திரங்களின் பேட்டரிகள் திருட்டு!
மதுரவாயலில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே நிறுத்தப்பட்ட 2 ஜே.சி.பி. எந்திரங்களின் பேட்டரிகள் இரவில் திருடப்பட்டது.
காஷ்மீருக்குள் ஊடுருவிய 5 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் சுட்டுக் கொலை!
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவ படையினர் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் இந்திய நிலைகளை நோக்கி தாக்குதல் நடத்தினர்.
அண்ணாமலை வேண்டும்; அ.தி.மு.க. வேண்டாம்!
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் அண்ணாமலைக்கு ஆதரவாக ஒட்டப்பட்ட போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கச்சத்தீவை தாரை வார்த்த தி.மு.க.வே சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது! டி.டி.வி. தினகரன் அறிக்கை!!
கச்சத்தீவை தாரைவார்த்த திமுகவே, அதனை மீட்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது வேடிக்கையானது என்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா : 35 பெண்களுக்கு சூரிய மகள் விருது! துர்கா ஸ்டாலின், நடிகர்கள் பிரபு, சத்தியராஜ் வழங்கினர்!!
முதல்வரின் பிறந்த நாளை முன்னிட்டு சாதனை புரிந்த மகளிர் 35 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

பல்லாவரம் அருகே பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற கள்ளக்காதலன்!
பல்லாவரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை கல்லால் அடித்துக் கொன்ற தாம்பரம் மாநகராட்சி லாரி ஓட்டுநர், தானாகவே சென்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

திருப்போரூர் அருகே பைக் மீது கார் மோதி 3 பேர் பரிதாப சாவு!
திருப்போரூர் அருகே மோட்டார்சைக்கிள்மீது கார் மோதியது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியாகிவிட்டார்கள்.

கச்சத்தீவை மத்திய அரசுமீட்கவேண்டும்!
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!!