Prøve GULL - Gratis
கச்சத்தீவை மத்திய அரசுமீட்கவேண்டும்!
Malai Murasu
|April 02, 2025
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!!
-

தமிழக மீனவர்களின் உரிமைகளை நிலை நாட்ட கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி என்றும், அதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அத்துடன் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யவும், படகுகளை மீட்கவும் பிரதமர் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த கச்சத்தீவு, 1974-ஆம் ஆண்டு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது இந்திய பிரதமராக இந்திரா காந்தி இருந்தார். தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையில் தி.மு.க. ஆட்சி இருந்தது.
ஆனால் மாநில அரசுக்கு தெரியாமலேயே மத்திய அரசு இந்த தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டதாக கூறப்பட்டது. இருந்தாலும் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் தங்கி வலைகளை உலர்த்த அனுமதி உண்டு என்றும் கூறப்பட்டது.
ஆனால் இது நடைமுறையில் செயல்பாட்டுக்கு வரவில்லை. இலங்கையில் இனக்கலவரம் வெடித்த சமயத்தில் தமிழக மீனவர்கள் கச்சத்தீவு கடல் பக்கமே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்தன. இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் பல தமிழக மீனவர்களும் இறந்தனர்.
ஆகவே கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி என்று தமிழகத்தில் குரல் எழும்பத் தொடங்கியது. இதுதொடர்பாக சட்டசபையிலும் ஏற்கனவே பலமுறை தீர்மானங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கச்சத்தீவை மீட்க மத்திய அரசு 4-ம் பக்கம் பார்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அரசின் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் ஆற்றிய உரையின விவரம் வருமாறு:
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர்பேரழிவாக இது அமைந்திருக்கிறது. அங்கு எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது.
Denne historien er fra April 02, 2025-utgaven av Malai Murasu.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Malai Murasu

Malai Murasu
ஏமன் நாட்டில் செவிலியர் நிமிஷாவின் மரண தண்டனை ரத்தா?
ஏமனில் மரணதண்டனை விதிக்கப்பட்ட கேரள பெண் செவிலியரை காப்பாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
2 mins
July 29, 2025
Malai Murasu
தமிழகத்தில் இந்த ஆண்டு 1.50 லட்சம் இடங்களில் விநாயகர் சிலை பிரதிஷ்டை!!
இந்து முன்னணி அறிவிப்பு !!
1 min
July 29, 2025

Malai Murasu
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில் தெப்பக் குளத்தில் எப்போதும் நீர் இருக்கும் வகையில் சிறப்பு ஏற்பாடு!
அமைச்சர் பி.கே. சேகர்பாபு அறிவிப்பு !!
1 min
July 29, 2025

Malai Murasu
பாகிஸ்தானுக்கு ஆதரவாக ப.சிதம்பரம் பேசுகிறார்: பகல்ஹாமில் தாக்குதல் நடத்திய 3 தீவிரவாதிகளையும் கொன்று விட்டோம்!
காங்கிரசைப் போல் மோடி அரசு வேடிக்கை பார்க்காது:
2 mins
July 29, 2025
Malai Murasu
ஐ.டி. ஊழியர் கொலை: சப்-இன்ஸ்பெக்டர் தம்பதி சஸ்பெண்ட்!
உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்!!
1 min
July 29, 2025
Malai Murasu
ரூ. 2,151 கோடி கல்வி நிதி மறுப்பு: மத்திய அரசின் செயலுக்கு ஓ.பி.எஸ். கண்டனம்!
கூட்டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது என அறிக்கை!!
1 min
July 29, 2025

Malai Murasu
காதல் விவகாரத்தில் சண்டை-நீதிமன்ற ஊழியர் குத்திக்கொலை!
திருவாரூரில் 2 பேர் கைது!!
1 min
July 29, 2025

Malai Murasu
அண்ணாநகரில் சம்பவம்: பைக் மீது கார் மோதி கல்லூரி மாணவர் சாவு!
இன்னொரு மாணவர் படுகாயம்; திட்டமிட்ட கொலை என குற்றச்சாட்டு !!
1 mins
July 29, 2025

Malai Murasu
இல்ல கடைகள், சிறு வணிகர்களை அடியோடு ஒழிக்க சதியா?
கிராம ஊராட்சிகளில் வணிக உரிமம் கட்டாயமா?
1 min
July 29, 2025
Malai Murasu
புரசைவாக்கம் கங்காத்தி விஸ்வநாதர் கோவிலில் மீண்டும் மஞ்சள்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி!
சென்னை புரசைவாக்கத்தில் உள்ளகங் காதீஸ்வரர்கோவிலில் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min
July 29, 2025