Poging GOUD - Vrij
கச்சத்தீவை மத்திய அரசுமீட்கவேண்டும்!
Malai Murasu
|April 02, 2025
சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்!!
-

தமிழக மீனவர்களின் உரிமைகளை நிலை நாட்ட கச்சத்தீவை மீட்பதே ஒரே வழி என்றும், அதற்காக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக சட்டசபையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அத்துடன் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்யவும், படகுகளை மீட்கவும் பிரதமர் வலியுறுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இந்தியாவுக்கு சொந்தமாக இருந்த கச்சத்தீவு, 1974-ஆம் ஆண்டு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது. அப்போது இந்திய பிரதமராக இந்திரா காந்தி இருந்தார். தமிழ்நாட்டில் கருணாநிதி தலைமையில் தி.மு.க. ஆட்சி இருந்தது.
ஆனால் மாநில அரசுக்கு தெரியாமலேயே மத்திய அரசு இந்த தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டதாக கூறப்பட்டது. இருந்தாலும் கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் தங்கி வலைகளை உலர்த்த அனுமதி உண்டு என்றும் கூறப்பட்டது.
ஆனால் இது நடைமுறையில் செயல்பாட்டுக்கு வரவில்லை. இலங்கையில் இனக்கலவரம் வெடித்த சமயத்தில் தமிழக மீனவர்கள் கச்சத்தீவு கடல் பக்கமே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை அடிக்கடி தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்தன. இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில் பல தமிழக மீனவர்களும் இறந்தனர்.
ஆகவே கச்சத்தீவை மீட்பதுதான் ஒரே வழி என்று தமிழகத்தில் குரல் எழும்பத் தொடங்கியது. இதுதொடர்பாக சட்டசபையிலும் ஏற்கனவே பலமுறை தீர்மானங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன.
இந்த நிலையில் கச்சத்தீவை மீட்க மத்திய அரசு 4-ம் பக்கம் பார்க்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அரசின் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். அப்போது அவர் ஆற்றிய உரையின விவரம் வருமாறு:
தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வருவதை கனத்த இதயத்தோடு இந்த மாமன்றத்தில் நான் பதிவு செய்யக் கடமைப்பட்டிருக்கிறேன். முற்றுப்புள்ளி வைக்க முடியாத தொடர்பேரழிவாக இது அமைந்திருக்கிறது. அங்கு எத்தனை அரசியல் நிலைமைகள் மாறினாலும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது மட்டும் இன்னும் மாறாமல் இருக்கிறது.
Dit verhaal komt uit de April 02, 2025-editie van Malai Murasu.
Abonneer u op Magzter GOLD voor toegang tot duizenden zorgvuldig samengestelde premiumverhalen en meer dan 9000 tijdschriften en kranten.
Bent u al abonnee? Aanmelden
MEER VERHALEN VAN Malai Murasu

Malai Murasu
திருவொற்றியூரில் அ.தி.மு.க. சார்பில் 1000 பேருக்கு உதவி! சி. பொன்னையன் வழங்கினார்!!
திருவொற்றியூர், ஜூலை. 28 அ.தி.மு.க.சார்பில் 1000 பேருக்கு நலத்திட்ட உதவி களை முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் வழங்கினார்.
1 min
July 28, 2025

Malai Murasu
அ.தி.மு.க.வைச் சேர்ந்த இன்பதுரை, தனபால் இன்று எம்.பி.க்களாக பதவி ஏற்பு!
மாநிலங்களவை உறுப்பினர்களாக அ.தி.மு.க. வைச் சேர்ந்த ஐ. எஸ். இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் இன்று பதவியேற்றுக் கொண்டார்கள்.
1 min
July 28, 2025
Malai Murasu
யானைகவுனி பகுதியில் வாடகை காரில் தவறவிட்ட ரூ.5 லட்சம் வைர நகைகள் மீட்பு! உரிமையாளரிடம் ஒப்படைத்த கார் ஓட்டுநருக்கு பாராட்டு!!
சென்னை பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் சுஜாதா. இவர் மாம்பலத்தில் உள்ள ஜி.ஆர்.டி தங்க நகை கடையில் வைர நகைகளை மாற்றுவதற்காக, ரேபிடோ செயலியில் கார்புக் செய்து வரும் போது, காரில் நகைகளை தவறவிட்டுள்ளார்.
1 min
July 28, 2025
Malai Murasu
ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம்!
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூர திருவிழாவில் நேற்றுகாலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
1 min
July 28, 2025
Malai Murasu
தமிழ்நாட்டில் சொத்துவரி வருவாய் 14.5 சதவீதம் அதிகரிப்பு!
ரூ.43 ஆயிரம் கோடியாக உயர்வு !!
1 min
July 28, 2025

Malai Murasu
பாராளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் இன்றும் ஆர்ப்பாட்டம்!
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு எதிர்ப்பு!!
1 min
July 28, 2025

Malai Murasu
பிரதமர் மோடி கைவிட்டதால் ஏமாற்றம்: தனிக் கட்சி தொடங்க ஓ.பி.எஸ். ஆயத்தம் தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு!!
தேர்தலில் விஜய் கட்சியுடன் கூட்டணி சேர வாய்ப்பு !!
1 mins
July 28, 2025
Malai Murasu
சேலம் அருகே நள்ளிரவில் துணிகரம்: தம்பதியை கட்டிப்போட்டு 15 பவுன் நகை கொள்ளை! காரில் தப்பிய மர்ம கும்பலுக்கு வலை!!
சேலம் அருகே நள்ளிரவில் தம்பதியை கட்டிப் போட்டு 15 பவுன் நகை, பணம் ஆகியவற்றை மர்ம கும்பல் கொள்ளை அடித்து சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
1 min
July 28, 2025
Malai Murasu
‘ஆபரேசன் சிந்தூர்’ விவாதம் தாமதம்: பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி!
பீகார் வாக்காளர் திருத்தம் பற்றியும் விவாதிக்க! வலியுறுத்தியதால் 2 அவைகளும் ஒத்திவைப்பு!!
1 mins
July 28, 2025
Malai Murasu
பொறியியல் கல்லூரிகளில் போலி பேராசிரியர்களை தடுக்க 'ஆதார்' கட்டாயம்!
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் பிற தொழில்முறை கல்விநிறுவனங்களில் பணிபுரியும் சுமார் 6.5 லட்சம் ஆசிரியர்களுக்கு, ஆதார் மூலம் சரிபார்க்கப்பட்ட தனித்துவமான அடையாள அட்டைகளை வழங்க அகில இந்திய தொழில்நுட்பக்கல்விக்குழு (ஏஐசிடிஇ) ஒரு முக்கிய திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
1 min
July 28, 2025