முன்னாள் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரன், தம்மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டது.
அவருக்கு அக்டோபர் 3ஆம் தேதியன்று தண்டனை விதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதல் நாள் வழக்கு விசாரணை செப்டம்பர் 24ஆம் தேதி நடைபெற்றது. ஈஸ்வரனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் தன்மை குறைக்கப்பட்டது.
ஊழல் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலாக அரசு ஊழியர் பதவி வகித்தபோது விலை மதிப்புள்ள பொருள்களை அன்பளிப்பாகப் பெற்றுகொண்டதாக ஈஸ்வரன் மீது இவற்றில் நான்கு குற்றச்சாட்டுகள் பிரிவு 165ன் கீழ் சுமத்தப்பட்டன.
தண்டனைச் சட்டத்தின் பிரிவு 165, ஒரு பொதுச் சேவை ஊழியர், அவர் அதிகாரபூர்வ நிலையில் எவரிடமிருந்தும், விலைமதிப்புள்ள எதையும், இலவசமாக அல்லது போதிய கட்டணமின்றி ஏற்றுக்கொள்வது அல்லது பெறுவது குற்றமாகும்.
விசாரணைக்கு இடையூறு விளைவித்தது தொடர்பாகவும் ஈஸ்வரன் மீது ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
அமைச்சர் பதவி வகித்தபோது $400,000க்கும் அதிக மதிப்புள்ள பொருள்களை ஈஸ்வரன் அன்பளிப்பாகப் பெற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது.
பெருஞ்செல்வந்தர் ஓங் பெங் செங், லம் சாங் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டேவிட் லம் ஆகியோரிடமிருந்து ஈஸ்வரன் அன்பளிப்புகளைப் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
Denne historien er fra September 25, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra September 25, 2024-utgaven av Tamil Murasu.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
போர் பதற்றம் அதிகரிப்பு; படைகளை அனுப்பும் அமெரிக்கா
இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் இடையில் போர் வெடிக்கும் சூழல் அதிக ரித்துள்ளதால் மத்திய கிழக்கு வட்டாரத்தில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு மூலம் மாற்றம் கொண்டுவர பிரதமர் மோடி விருப்பம்: சுந்தர் பிச்சை
அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகளுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வட்டமேசை ஆலோசனை நடத்தியுள்ளார்.
பழனி பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக் கருத்து; இயக்குநர் மோகன் கைது
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்திற்காகப் பயன்படுத்தப்படும் நெய்யில், விலங்குக் கொழுப்பு, மீன் எண்ணெய் உள்ளிட்டவை கலக்கப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
பாகுபாட்டை எதிர்கொண்ட ஊழியர் எண்ணிக்கை குறைவு
நியாயமான வேலை நியமன நடைமுறைகள் குறித்த மனிதவள அமைச்சின் அறிக்கை
புது சக்தி தரும் வெளிநாட்டு இசை நிகழ்ச்சிகள்: ஆதி
‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதி நடிப்பில் அண்மையில் வெளியீடு கண்டுள்ள ‘கடைசி உலகப் போர்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாகத் தகவல்.
பக்கவாதம் குறித்து மேம்பட்ட விழிப்புணர்வு
பக்கவாத நோயின் பாதிப்புக்கு ஆளாகும் அபாயத்தைக் குறைக்கவும், அந்நோய்க்கான அறிகுறிகளைக் கண்டறியவும் பொதுமக்களுக்கு உதவும் வகையில் புது வாசகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
லெபனான்மீது இஸ்ரேல் தாக்குதல்: குறைந்தது 550 பேர் மாண்டனர்
லெபனான்மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 550 பேர் கொல்லப்பட்டதாக லெபனானின் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி விமான நிலையத்தில் 2027க்குள் இலகு ரயில் சேவை
இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம்
மாற்றம் இருக்கும், ஏமாற்றம் இருக்காது: மு.க.ஸ்டாலின்
எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஆதரவாளர்கள்
சுவா சூ காங் வீட்டில் தீ: மூதாட்டி மரணம், 150 குடியிருப்பாளர்கள் வெளியேற்றம்
சுவா சூ காங் வட்டாரத்தில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடு ஒன்றில் செப்டம்பர் 24ஆம் தேதி தீ மூண்டது.