ஒற்றுமையின்மையாலே இந்த இனம் அடிமைப்பட்டது! தமிழர் இன உணர்ச்சியை என்றும் அணையாது காப்பது நமது கடமை
Viduthalai|June 22,2023
கலைஞர் சிலை திறப்பு விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரை
ஒற்றுமையின்மையாலே இந்த இனம் அடிமைப்பட்டது! தமிழர் இன உணர்ச்சியை என்றும் அணையாது காப்பது நமது கடமை

‘‘தமிழ் இனத்துக்குள்ளே இருந்த பொறாமை உணர்ச்சிதான் இந்த இனம் அடிமைப்படக் காரணமாக இருந்தது. தமிழன் என்ற இன உணர்ச்சியை மங்காது - மழுங்காது காத்துவருவது நமது கடமை'' என்று கலைஞர் சிலை திறப்பு விழாவில் தவத்திரு அடிகளார் பேசுகையில் குறிப்பிட்டார்.

சென்னை அண்ணா சாலையில் 21.9.1975 அன்று நடந்த கலைஞர் சிலைத்திறப்பு விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரையாற்றினார். அவருடைய உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

கலைஞர் உருவச்சிலையைத் திறந்து வைத்து அவர் ஆற்றிய உரையின் முற்பகுதி ஏற்கெனவே வெளி வந்துள்ளது. பிற்பகுதி இங்கே தரப்படுகிறது.

உலக இனத்தில் தமிழனைப் போல மிக நன்றாகச் சிந்தித்த இனம் - அவனைவிட வரலாற்றுச் சாதனைகளைச் செய்த இனம் உலகத்தில் வேறு இருக்க முடியாது

அடிமைப்பட்டது ஏன்?

இவ்வளவு புகழ்பூத்த ஒரு இனம், ஏன் தன்னுடைய எழுச்சியை இழந்தது. இடைக்காலத்தில் - எப்படி இது கொத்தடிமைப்பட்டது என்று கேட்டால் ஒரே ஒரு காரணம்; ஆயிரம் சிறப்புகள் அவனுக்குண்டு - அதற் குள்ளே ஒரே ஒரு இழிகுணமுண்டு - ஒரு தமிழன் வாழ, இன்னொரு தமிழன் பொறுத்துக் கொள்ள மாட்டான்!

ஆகவே, இன வழிப்பட்ட பகைமை இருக்கிறதே, அது தமிழனுக்கு மிக மிக அதிகம்.

எனவேதான் தமிழிலக்கியச் சுவடிகளைப் புரட்டி னால் அய்யா அவர்களுக்குக் கூடக்கோபம் வரும். சேரனை பாண்டியன் அடித்தான் - பாண்டியனை சோழன் அடித் தான், இதுதானே என்று பேசுவார்.

தமிழினத்தின் ஒருமைப்பாட்டை நாம் கட்டிக்காக்கத் தவறியதால் தான் நாடாண்ட தமிழினம், கிழக்காசிய நாடுகள் முழுவதும் பரவி வாழ்ந்த தமிழினம், அந்த நாடு களிலெல்லாம் தனது கலையை - கொற்றத்தை - வாழ்க்கை நெறிகளைப் பரப்பிய தமிழினம் வீழ்ந்துபட்டது என்று சொன்னால் அறிவினுடைய ஆற்றல் குறைவினால் அல்ல; ஆளுமைத்திறன் இல்லாததினாலும் அல்ல, அவர்களுக்குள்ளே ஏற்பட்ட பகை இருக்கிறதே, அது தான் காரணம்!

அதனால்தான் உலகப் பொதுமை பேசிய திருவள் ளுவர் கூட, ‘குடிசெயல்' என்று அதிகாரம் வைத்தார். ‘நீ பிறந்த குடியை ஆளாக்கு - நீ பிறந்த குடியை வளர்த்துவிடு - நீ பிறந்த குடிக்கு இடையூறாக நிற்காதே' என்றார்.

அப்படிச் சொல்கிறபோது சொன்னார், மூன்று கடமை களை பின்பற்றினால் தமிழினம் வளரும் என்று சொன்னார்.

Denne historien er fra June 22,2023-utgaven av Viduthalai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

Denne historien er fra June 22,2023-utgaven av Viduthalai.

Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.

FLERE HISTORIER FRA VIDUTHALAISe alt
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
Viduthalai

இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு

சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு

time-read
1 min  |
August 16,2023
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
Viduthalai

புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்

ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும்,  மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:

time-read
1 min  |
August 16,2023
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
Viduthalai

சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி

சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.

time-read
1 min  |
August 16,2023
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
Viduthalai

இந்தியாவில் 22 பேருக்கு கரோனா

இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.  இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.

time-read
1 min  |
August 16,2023
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
Viduthalai

தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்

தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.

time-read
1 min  |
August 16,2023
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
Viduthalai

திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்

திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.

time-read
1 min  |
August 16,2023
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
Viduthalai

திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்

திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.

time-read
1 min  |
August 14,2023
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
Viduthalai

பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை

மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

time-read
1 min  |
August 14,2023
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
Viduthalai

அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு

தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.

time-read
1 min  |
August 14,2023
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
Viduthalai

3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!

ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது  ஆத்தூர் கழக மாவட்டம்!

time-read
3 mins  |
August 14,2023