மகிழ்ச்சியோடு செயல்படுகிறோம்!
இதுகுறித்து தலைமைக் கழக அமைப்பாளர் ஆத்தூர் அ.சுரேஷ் அவர்களிடம் கேட்ட பொழுது, பொதுக்குழுவில் ஆசிரியர் அவர்கள் அறிவித்த திட்டங்களுக்கு ஏற்ப, இயக்கப் பிரச்சாரங்களை வீரியத்துடன் முடுக்கிவிடுவது என்பதில் தீர்மானமாக இருந்தோம்! அவ்வகையில் ஆத்தூர், தம்மம்பட்டி, தளவாசல், நரசிங்கபுரம், பெத்தநாயக்கன் பாளையம் ஆகிய 5 ஊர்களில் பொதுக் கூட்டங்களை நடத்தி னோம்!
அதேபோன்று புத்தூர், தென்னங்குடி பாளையம், முள்ளுவாடி, இலுப்பந்தம், வீரங்கனூர், செந்தாரப்பட்டி, நாக்கியம்பட்டி, புத்திரக்கவுண்டன் பாளையம், உமை யாள்புரம், தும்பல் ஆகிய 10 ஊர்களில் தெருமுனைக் கூட்டங்களை நடத்தினோம்! இவற்றில் இரா.பெரியார்செல்வன், ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சே.மெ.மதிவதனி, இராம.அன்பழகன், பா.மணியம்மை, மாங்காடு மணியரசன் ஆகியோர் பங்கேற்று உரை யாற்றினார்!
இந்தப் பிரச்சாரங்களின் மூலம் பல தோழர்கள் எங்களுக்குப் புதிதாகக் கிடைத்தார்கள். மொத்தம் 15 கூட்டங்களை முடித்த பிறகு, இப்போது இந்தப் பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை நடத்துகிறோம். கூட்டங்கள் என்கிற போது அங்கு பெரியவர்கள் வருவார்கள். அவர்கள் ஏற்கெனவே பல கருத்துக ளுடன் இருப்பார்கள். அது ஒரு அனுபவம்! அதேநேரம் பயிற்சி வகுப்பு எனும் போது, மாணவர்கள் புதியவர்கள். ஆசிரியர் அவர்கள் அடிக்கடி கூறுவதைப் போல, எழுதப்படாத சிலேட்டு! நாம் அவர்களிடம் சுயமரி யாதை, பகுத்தறிவுக் கருத்துகளை எடுத்துக் கூறும் போது, அவர்கள் மனதில் அது பளிச்சென்று பதிந்து விடுகிறது. அவ்வகையில் இந்தப் பயிற்சி வகுப்புகள் கூடுதல் மனநிறைவைத் தருகின்றன!
பயிற்சி வகுப்புகளுக்கான ஏற்பாடுகளைப் பொறுத்தவரை திட்டமிட்டு 15 நாட்கள் வேலை செய் தோம். பெத்தநாயக்கன் பாளையம் என்பது நடுத்தர மான ஒரு ஊர். இங்கு 154 மாணவர்கள் பங்கேற்றதே பெரும் நெகிழ்ச்சியாக இருக்கிறது! மண்டபம், உணவு, ஏனைய ஏற்பாடுகளைச் சரியாக மதிப்பிட்டு, பள்ளிக் கூடங்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களின் வீடுகள் என நேரடியாகச் சென்று கேட்டுக் கொண்டதன் மூலம் இவ்வளவு பெரிய வெற்றி எங்களுக்குக் கிடைத்து உள்ளது", எனத் தலைமைக் கழகக் காப்பாளர் அ.சுரேஷ் தெரிவித்தார்.
நன்கொடை வசூலும், நூல்கள் விற்பனையும்!
Denne historien er fra August 14,2023 -utgaven av Viduthalai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra August 14,2023 -utgaven av Viduthalai.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
இந்தியாவை பிடித்த பிணிகள்: ட்விட்டரில் முதலமைச்சர் பதிவு
சுதந்திர நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவு
புதிய சட்ட மசோதாக்கள்: நீதிபதிகளுக்கே ஆபத்து! - கபில்சிபல்
ஒன்றிய அரசின் சட்டத்துறை மேனாள் அமைச்சரும், மூத்த வழக்குரைஞருமான கபில் சிபல் டில்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போது கூறியிருப்பதாவது:
சிறுதானிய உடனடி உணவு மாவு தயாரிக்கும் பயிற்சி
சென்னை கிண்டியில் உள்ள ஒன்றிய அரசின் எம்எஸ்எம்இ தொழில்நுட்ப மேம்பாட்டு மய்யம் சார்பில், சிறுதானிய உடனடி உணவு மாவுகள் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்தியாவில் 22 பேருக்கு கரோனா
இந்தியாவில் 24 மணி நேரத்தில் புதிதாக 22 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கரோனா பாதிப்பு 50-க்கு கீழ் பதிவாகி வருகிறது.
தமிழ்நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளை தடுக்க தனியாக உளவுப் பிரிவு: திருமாவளவன் வலியுறுத்தல்
தமிழ் நாட்டில் ஜாதி, மதவாத வன்முறைகளைத் தடுக்க தனியாக உளவுப்பிரிவை தொடங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டத்தில் சுழன்றடிக்கும் பகுத்தறிவுச் சூறாவளி தெருமுனைப் பிரச்சாரம்
திருவாரூர் மாவட்டத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் 4ஆவது நாளாக 3.8.2023 மாலை 6 மணி அளவில் திருவாரூர் கீழவீதியில் பாவலர் க.முனியாண்டி, புலவர் சு.ஆறுமுகம் ஆகியோரின் கொள்கைப் பாடல்களுடன் தொடங்கியது.
திண்டிவனத்தில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டம்
திண்டிவனம் திராவிடர் கழகத்தின் சார்பில் வைக்கம் நூற்றாண்டு விழா, கலைஞர் நூற்றாண்டு விழா பச்சைத் தமிழர் காமராசர் 121 ஆவது பிறந்தநாள் விழா மணிப்பூர் பெண்கள் பாலியல் வன்முறையை கண்டித்து திண்டிவனம் நகரத்தில் நான்கு இடங்களில் தெருமுனைக்கூட்டம் நகர தலை வர் உ.பச்சையப்பன் தலைமையில் நடை பெற்றது.
பொறுப்பில்லாமல் நடந்துகொண்டார் மோடி :திருச்சி சிவா வேதனை
மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி பொறுப்புடன் பதில் அளிக்கவில்லை என்று திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா குற்றம் சாட்டினார். இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அங்கன்வாடி மய்யத்தின் அனைத்து வசதிகளையும் உறுதி செய்க; தலைமைச் செயலாளர் உத்தரவு
தமிழ்நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மய்யங்களை ஆய்வு செய்து, அடிப்படை வசதிகள் உள்ளனவா என்பதனை உறுதி செய்து உரிய மேல் நடவடிக்கை எடுக்க அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா கடிதம் அனுப்பியுள்ளார்.
3 மாதங்களில் ஒரு பெரியாரியல் 5 பொதுக்கூட்டம்-10 தெருமுனைக் கூட்டம் பயிற்சிப் பட்டறை - அசத்தும் ஆத்தூர் கழக மாவட்டம்!
ஈரோடு பொதுக்குழு முடிந்து (13.05.2023) நேற்றுடன் (13.08.2023) மூன்று மாதங்கள் முடிந்துள்ளன! இந்தக் கால கட்டத்தில் மட்டும் 5 பொதுக் கூட்டங்கள், 10 தெருமுனைக் கூட்டங்கள், ஒரு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை முடித்து, அசத்திவிட்டது ஆத்தூர் கழக மாவட்டம்!