ஸ்ரீ குருவாயூரப்பனின் அருமை பெருமைக ளையெல்லாம் மலையாள மொழியில் ஒரு காவியமாகப் படைக்க வேண்டும் என்று விரும்பினார் பட்டத்ரி. அந்தக் காலத்தில் மிகவும் புகழடைந் திருந்தவரும், மகாபண்டிதரும், மலையாள மொழியின் தந்தையுமான 'துஞ்சத்து எழுத் தச்சன்' என்பவர் ஒரு வழிகாட்டினார். 'மச்சம் தொட்டு ஆரம்பிக்கச்சொல்' என்று பரிபாஷையில் ஒரு செய்தி அனுப்பினார்.
அவருக்கு அதன் பொருள் புரிந்துவிட்டது. ஸ்ரீமந் நாராயணனின் மச்சாவதாரத்தில் தொடங்கி,பகவானின் அவதார லீலை களைப் பாடவேண்டும் என்று உத்தரவு வந்துள்ளதை உணர்ந்து, குருவாயூருக்குச் சென்றார். குட்டிக் கிருஷ்ணனின் திருச்சந்ந தியில் அமர்ந்தார் கவிப்பிரவாகம் பெருக் கெடுத்தது. பகவான் வியாசர் இயற்றிய ஸ்ரீமத் பாகவதத்தின் 18000 - ஸ்லோகங் களும், 1034 - ஸ்லோகங்களாக உருமாறி நூறு தசகங்களாக மலர்ந்தன. இந்த பக்தி நூலை இவர் இயற்றினார் என்பதைவிட, ஸ்ரீகுருவாயூரப்பனே இவர் மூலம் தன் பெரு மைகளைப் பாடிக் கொண்டார் என்பதே பொருந்தும்.
பட்டத்ரி, பக்திப் பெருக்குடன் ஒவ் வோர் அடியையும் இனிமையாகப் பாடப் பாட, அதை ஸ்ரீ குருவாயூரப்பன் அவர் எதிரில் அமர்ந்து கவனமாகக் கேட்டு தலையை அசைத்து ஆமோதித்ததுதான் இந்தக் காவியத்தின் பெருமை. லீலைகள் பல புரிந்த குட்டி கிருஷ்ணனின் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கூறிவிட்டு, பட்டத்ரி, 'குரு வாயூரப்பா! இப்படித்தானா? கிருஷ்ணா இப்படித்தானா?' என்று சந்தேகத்தோடு கேட்டாராம். 'ஆமாம், சரிதான்' என்று ஸ்ரீகுருவாயூரப்பன் ஆமோதிப்பாராம்.
அதன் பிறகுதான் பட்டத்ரி அடுத்தவரிக்குச் செல்வாராம்.
நரசிம்ம அவதாரத்தைப் பற்றிச் சொல்ல வரும்போது, அவரை எப்படி வர்ணிப்பது என்று பட்டத்ரி யோசித்துக் கொண்டிருந்தா ராம். அப்போது வாதிமாடத்திலுள்ளதூண் ஒன்றிலிருந்து ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி தோன்றி, அங்குமிங்கும் நடந்து காட்டினாராம். கண் ணெதிரே தாம் கண்ட அற்புதக் காட்சியை பட்டத்ரி அப்படியே எழுதிவிட்டாராம்.
இப்படி பூர்ணாவதாரமாகக் கருதப் படும் ஸ்ரீ கிருஷ்ணாவதார லீலைகளை உள்ளம் உரு, மெய்சிலிர்க்க வர்ணித்துள்ளார்
Denne historien er fra 16-29-Feb 2024-utgaven av Aanmigam Palan.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent ? Logg på
Denne historien er fra 16-29-Feb 2024-utgaven av Aanmigam Palan.
Start din 7-dagers gratis prøveperiode på Magzter GOLD for å få tilgang til tusenvis av utvalgte premiumhistorier og 9000+ magasiner og aviser.
Allerede abonnent? Logg på
"ஸங்கல்ப ஸித்த சாயி”
அனுபூதியடைந்த மகான் ஒரு வரது முன்னிலையில் வசிப்பது சாதகன் ஒருவனுக்கு மிக விரைவான ஆன்மிக முன்னேற்றத்தைக் கொடுக்கும் என்பது பெரியோர் வாக்கு.
சிந்தாதேவி
ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணி மேகலையில் கூறப்பட்டுள்ள தெய்வம் சிந்தாதேவி ஆவாள்.
ஆகாசமூர்த்தி
இந்தியத் திருநாட்டின் பல்வேறு அரச மரபினரின் கலைப் படைப்புகளைத் தொகுத்து நோக்குவோ மாயின் காண்போரின் உள்ளத்தை ஈர்க்கும் தனிச்சிறப்பு ஆடல் வல்லான் திருமேனிகளுக்கே உரியவைகளாக இருப்பதைக் காணலாம்.
நமக்குள்ளேயே இருக்கும் ரகசியம்!
யோகயுக்தோ விசுத்தாத்மா ஜிதேந்த்ரிய ஸர்வபூத்த்மபூதாத்மா குர்வன்னபி நலிப்யதே (5:7)
12 வரிகளில் பாரதம் முழுவதும் பாராயணம் செய்த பலன்!
இந்து மதத்தின் மூல புருஷராக விளங்குப வர் வியாசபகவான்.
கசனின் குருபக்தி
மூவுலகையும் ஆள வேண்டும் என்ற எண்ணம் தேவர்களும், அசுரர்களும் இடையே போட்டி ஏற்பட்டு கொண்டே இருந்தன.
தேனையும் பாகையும் போலும் பனிமொழியே!
சென்ற இதழில், உமை யம்மையானவள் மலைமகள் அலை மகள் கலைமகள் மூன்று சக்தி களின் அம்சமாகவே கருதப்படுகிறாள்.
பிரச்னைகளை களைவாள் பிரத்யங்கிரா!
ஓரு கோயிலுக்கு மிக முக்கியமான ஒன்று, ஆகமம்.
அவதாரப் புருஷர் மத்வர்!
12.10.2024 - ஸ்ரீமத்வாச்சாரியார் ஜெயந்தி
காட்டுமன்னனாரை கண்டு சேவிப்போம் வாருங்கள்!
என் புத்தக சாலையில் ஏதோ ஒரு புத்தகத் தைத் தேடியபோது, எப் போதோ வாங்கிய “பொன்னியின் செல்வன்\" கிடைத்தது. படித்து வெகு நாள் ஆனதால் மறுபடியும் முதல் அத்தியாயத்தை வாசிக்கத் தொடங்கினேன். என்னை மறந் தேன்... இதோ அந்த வர்ணனை சில வரிகளில். வீர நாராயண ஏரிக்கரை, ஆடித் திங்கள் பதி னெட்டாம் நாள், முன் மாலை நேரத்தில், அலைகடல் போல் விரிந்து பரந்திருந்த வீர நாரா யண ஏரிக்கரை மீது ஒரு வாலிபவீரன் குதிரை ஏறிப்பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.