Facebook Pixel முற்பகல் செய்யின்... | Dinamani Cuddalore - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

முற்பகல் செய்யின்...

Dinamani Cuddalore

|

March 17, 2025

வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் கூடும் இடங்கள், ராணுவ வீரர்கள் போன்றோரைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதை உலகெங்கும் காண்கிறோம். ஆனால், பாகிஸ்தானில் ஒரு ரயிலையே பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குவெட்டா நகரில் இருந்து கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள பெஷாவர் நகருக்கு சுமார் 400 பயணிகளுடன் 9 பெட்டிகள் கொண்ட ஜாஃபர் விரைவு ரயில் கடந்த மார்ச் 11-இல் புறப்பட்டது.

பெரோ குன்ரி என்ற இடத்துக்கு அருகே இந்த ரயில் சென்ற தண்டவாளத்தைக் குண்டு வைத்து தகர்த்த பலூசிஸ்தான் விடுதலை ராணுவம் (பிஎல்ஏ) என்ற பயங்கரவாத அமைப்பினர், அந்த ரயிலுக்குள் ஏறி அதைக் கடத்தினர். பயணிகளை மீட்க பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் எடுத்த நடவடிக்கையில் 33 பயங்கரவாதிகள், 4 ராணுவ வீரர்கள், 21 பயணிகள் என 58 பேர் உயிரிழந்தனர்; 300-க்கும் மேற்பட்ட பயணிகள் மீட்கப்பட்டனர் என அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், அவர்களில் 214 பயணிகளைக் கொன்றுவிட்டதாக பிஎல்ஏ அமைப்பு அறிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் சம்பவத்தின் சுவடு மறைவதற்குள், கைபர் பக்துன்குவா மாகாணத்தில் டேங்க் மாவட்டத்தில் ராணுவ நிலையின் மீது தற்கொலைப் படைத் தாக்குதலில் ஈடுபட்டவர் உள்பட தெஹ்ரீக் ஏ தலிபான் அமைப்பினர் 10 பேர் வியாழக்கிழமை (மார்ச் 13) கொல்லப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தானில் இதுபோன்ற பயங்கரவாதத் தாக்குதல்கள் நடத்தப்படுவது புதிது அல்ல. இருப்பினும் அண்மைக்காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன. 2023-ஆம் ஆண்டில் பயங்கரவாதத் தாக்குதல்களில் 748 பேர் உயிரிழந்தனர் என்றால், இந்த எண்ணிக்கை 2024-இல் 1,081-ஆக அதிகரித்துள்ளது.

MEER VERHALEN VAN Dinamani Cuddalore

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

வானொலியில் புரட்சி

\"ஒலிபரப்புப் பின்னணியுள்ள எனக்கு விருது வழங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது\" என்கிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வானொலி ஒலிபரப்பாளர் ஆர். ஸ்ரீதர்.

time to read

1 mins

May 31, 2026

Dinamani Cuddalore

நம்பிக்கை நட்சத்திரம்

உள்ளரங்க விளையாட்டுகளில் அறிவுக் கூர்மையைப் பயன்படுத்தி ஆடுவதில் முதன்மை பெற்று விளங்குகிறது செஸ் (சதுரங்கம்). இதில் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாகத் திகழ்கிறார் மதுரையைச் சேர்ந்த சிறுமி ஆரண்யா.

time to read

1 min

May 31, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

வியக்க வைக்கும் பள்ளி

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் அடிப்படை வசதிகள் அறவே இல்லாத பள்ளி, மாணவர்கள் இல்லாத வகுப்பறைகள், கழிவறைக்குக்கூட வெளியே சென்றுவந்த ஆசிரியர்கள், தேர்ச்சி விழுக்காடு குறைவு, மாணவ - மாணவியரை தேடித் தேடிச் சேர்த்தது என்றிருந்த நிலைமை அறவே மாறிவிட்டது.

time to read

2 mins

May 31, 2026

Dinamani Cuddalore

சைக்கிள் ஓட்டுவோம்..!

குறைந்த தூரத்துக்குச் சென்று வருவதில் சிறந்த, எளிமையான போக்குவரத்துச் சாதனம்தான் 'மிதிவண்டிகள்' என்று அழைக்கப்படும் 'சைக்கிள்கள்'.

time to read

2 mins

May 31, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

இயக்குநர்களின் லைன் அப்!

லோ கேஷ் கனகராஜ், பா. ரஞ்சித், எஸ். ஜே. சூர்யா ஆகிய இயக்குநர் களின் அடுத்தடுத்த லைன் அப்களை இங்கே பார்க்கலாம் ...

time to read

2 mins

May 31, 2026

Dinamani Cuddalore

தமிழகத்துக்கு பிரத்யேக விளையாட்டுக் கொள்கை

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

time to read

1 min

May 30, 2026

Dinamani Cuddalore

இன்று ‘குவாலிபையர் 2’: குஜராத் - ராஜஸ்தான் மோதல்

ஐபிஎல் போட்டியின் ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் வெள்ளிக்கிழமை (மே 29) மோதுகின்றன.

time to read

1 min

May 29, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் ஓய்வு பெற்றார்

சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டாவது மூத்த நீதிபதியான ஆர். சுரேஷ்குமார், வியாழக்கிழமையுடன் (மே 28) பணி ஓய்வு பெற்றார்.

time to read

1 min

May 29, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா...

தென்பெண்ணையாற்றின் தெற்கே வரலாற்றுப் பின்னணியுடன் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத ஸ்ரீ கிருபாபுரீஸ்வரர் திருக்கோயில்.

time to read

1 mins

May 29, 2026

Dinamani Cuddalore

Dinamani Cuddalore

தவெகவில் இணைந்த அண்ணா தொழிற்சங்க செயலர்

வெல்லமண்டி நடராஜன், முன்னாள் டிஜிபி நடராஜும் இணைந்தனர்

time to read

1 mins

May 29, 2026

Translate

Share

-
+

Change font size