தகவல்கள் அதனால், தமிழகத்திற்குப் புதிய கவர்னர் எந்த சூழலிலும் நியமிக்கப்படலாம் என்கிற அரசியல் பரபரப்பு உருவாகியிருக்கிறது.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமை யிலான தி.மு.க. அரசு 2021-ல் பதவியேற்றதும் அந்த ஆட்சிக்கு கடிவாளம் போட முடிவு செய்தது ஒன்றிய அரசு. இதற்காக ஒன்றிய உள்துறையில் நீண்ட ஆலோசனை நடந்தது. இதனைத் தொடர்ந்து, நாகலாந்தின் கவர்னராக இருக்கும் ஆர்.என்.ரவியின் பெயரை முன்மொழிந்தார் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத்தோவல். பிரதமர் மோடியும், அமைச்சர் அமித்ஷாவும் அதனை பரிசீலித்தனர்.
அதனடிப்படையில் 2021, செப்டம்பர் 18-ந் தேதி தமிழகத்தின் கவர்னராக குடியரசு தலைவ ரால் நியமிக்கப்பட்டார் ஆர்.என்.ரவி. அரசிய லமைப்பு சட்டத்தின்படி, ஒரு மாநிலத்தின் கவர் னரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள். அதேசமயம், பதவிக்காலம் முடிவதற்கு முன்பாகவே கூட கவர்னர் மீது அதிருப்தி உருவானால், எப்போது வேண்டுமானாலும் அவரை ஒன்றிய அரசு திரும்பப் பெறமுடியும் என்கிறது அரசியலமைப் புச் சட்டம். அதாவது, குடியரசுத் தலைவர் விரும்புகிற காலம்வரையில்தான் பதவியில் கவர்னர் நீடிக்கமுடியும்.
அந்த வகையில், 5 ஆண்டு காலம் முடிந்த பிறகு அவரது பதவிக்காலம் தானாகவே முடிவுக்கு வந்துவிடும் என்று சட்டம் சொல்ல வில்லை. ஆக, ஒன்றிய அரசு விரும்பும் வரையில் கவர்னர் பதவியில் இருக்கலாம். மேலும், ஒரு மாநிலத்தின் கவர்னராக நியமிக்கப்பட்டு குறுகிய காலத்திலேயே அவர் வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டால், முந்தைய மாநிலத்தில் பணி புரிந்த காலத்தை கணக்கிடும் கணக்கெல்லாம் சட்டத்தில் சொல்லப்படவில்லை. இப்படிப் பட்ட சட்டவிதிகளின் பின்னணியில்தான் ஒரு மாநிலத்தின் கவர்னர் நியமிக்கப்படுகிறார். அந்த வகையில், 2021 செப்டம்பரில் தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டார்.
This story is from the October 23-25, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 23-25, 2024 edition of Nakkheeran.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
விஜய்யின் மாநாட்டு மூவ்!
ஹலோ தலைவரே, இதுவரை தேர்தலில் நின்றிராத பிரியங்கா காந்தி, முதல்முறையாக கேரளாவில் களமிறங்குகிறார்.\"
டிப்பர் லாரி டெண்டரில் ஊழல்!
கடலூரில், டிப்பர் லாரி கொள்முதல் டெண்டரில் குறைந்த விலைப் புள்ளிதாரரை விடுத்து, அதிக விலைப்புள்ளி குறிப்பு பட்ட நிறுவனத்திற்கு டெண்டர் வழங்கியதில் ஊழல் நடந்துள்ளது ஆதாரப்பூர்வமாக அம்பலமாகியுள்ளது.
புதுக்கோட்டை! போலீசா வேட்டை! கால் உடையும் ரவுடிகள்!
கடந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க ரவுடிகள் வேட்டையைத் தொடங்கிய போலீஸ், சில என்கவுன்டர்களையும் செய்தது ரவுடிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மாவலி பதில்கள்
நடிகர் ரஜினிகாந்த் சமீபகாலமாக காவல்துறை சார்ந்த கதைக் களங்களையே தேர்வு செய்வது பற்றி? யாருக்குத் தெரியும், ரஜினிகாந்த் காவல்துறை சார்ந்த கதைகளைத் தேர்வு செய்கிறாரா, இல்லை இயக்குநர்கள் காவல்துறை கதைகளாகச் சொல்கிறார்களா? மொத்தத்தில் விருந்து காரசாரமாக இருந்தால் ரசித்துச் சாப்பிட்டுப் போகவேண்டியதுதான். 'கூலி'யில் லோகேஷ் கனகராஜ் என்ன கேரக்டர் கொடுக்கிறார் என பார்க்கலாம்!
போர்க் களம்
ஜெயலலிதா பற்றி 'எம்.ஜி.ஆர். யார்? நூலில் ஆர்.எம்.வீரப்பன் எழுதியது தொடர்கிறது...
முறைகேடு! கேள்வி கேட்டவருக்கு கொலை மிரட்டல்!
மதுரை மாவட்ட அலுவலகத்தின்024 காவல் கண்காணிப்பாளர் துர்காதேவி என்பவர், தனது கணவர் நவனி மற்றும் குழந்தைகளுடன் கண்ணீர்மல்க மதுரை மாவட்ட எஸ்.பி.யிடம், “என் கணவரின் உயிருக்கு ஆபத்து! காப்பாத்துங்க சார்!” என்று புகார் கொடுக்க, \"விசாரித்து தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம்” என்று உறுதியளித்தார் எஸ்.பி.
ஆடினது குத்தமா?
ஒரேயொரு டான்ஸ்! தமன்னாவை அமலாக்கத்துறை விசாரணை வரை கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறது.
வெளியேறும் கவர்னர்? மோடி-அமித்ஷா நெருக்கடி!
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் சர்ச்சையில் சிக்கிய தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாக அதிரடி கிடைத்துள்ளன.
அமைச்சர் Vs எம்.பி.முற்றும் மோதல்!
தி.மு.க. கூட்டணியிலிருக்கும் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தைத் தீவிரமாகக் கையிலெடுத்தபோதே கூட்டணியிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகுகிறதோ என்ற ஐயப்பாடு எழுந்தது.
சைபர் குற்றவாளிகளின் புதிய அவதாரம்! உஷார் மக்களே!
முன்பெல்லாம் நமது செல்போனுக்கோ, தொலைபேசிக்கோ அழைத்து துல்லியமான வடஇந்திய சாயலுடனான தமிழில், 'உங்க ஏ.டி.எம்.கார்டுமேல இருக்கும் பதினாறு நம்பர் சொல்லுங்கோ' என ஆரம்பிப்பார்கள். இதற்கே ஆயிரக்கணக்கான பேர் ஏமாந்தபோதும், பலரும் சுதாரித்துக்கொண்டு இவர்களிடமிருந்து நழுவிவிடுவோம்.