சென்னையில் வீடுகளில் சமைத்து சாப்பிடுவது குறைந்து, ஓட்டல்களில் சென்று சாப்பிடுவது நாகரிகமாக மாறிவருகிறது. ஒருசிலர் நேரம், காலம் பார்க்காமல் உணவுகளை வெளுத்து வாங்குகின்றனர். உணவு பிரியர்களை வாடிக்கையாளர்களாக வளைத்து போடுவதற்காக பெரிய ஓட்டல்களில் விதவிதமான உணவு வகைகளுடன் மெனு கார்டு வைத்துள்ளனர். அதைப் பார்த்து ஓட்டல்களுக்கு படையெடுக்கும் உணவு பிரியர்களும் உள்ளனர். ஓட்டல்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் சிறிய உணவகங்கள், சாலையோர உணவகங்களிலும் பலவித சைவ அல்லது அசைவ உணவுகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர். ஆனால் அந்த உணவு சமைக்கும் இடம் சுகாதரமாக இருக்கிறதா என்று கேட்டால் அது கேள்விக்குறி தான்.
தமிழகத்தில் 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட அசைவ மற்றும் இறைச்சி கடைகளில் பதப்படுத்தி வைப்பதற்கான வசதி இல்லை என ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் சைவ உணவகங்களில் பழைய காய்கறிகளை பயன்படுத்தி சாம்பார் தயாரித்து விநியோகம் செய்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள் உள்ளது. ஆனால் பழைய சென்னை மாவட்டத்தில் 107 வார்டுகள் மட்டுமே இருந்தது. மற்ற வார்டுகள் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்து உள்ளது. எனவே இந்த பகுதிகளில் கிட்டத்தட்ட 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உணவகங்கள், உணவு பாதுகாப்பு துறையால் அங்கீகரிக்கப்பட்டு இயங்கி வருகிறது. இதனைத் தவிர சிறிய உணவகங்கள் இயங்கி வருகிறது. இதில் பல உணவகங்களின் உணவுக் கூடம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு மோசமாக உள்ளது.
சில உணவகங்களில் முறையாக அனைத்தும் செய்தாலும், பாத்திரம் சுத்தமாக இருப்பதில்லை. இதனால் அந்த உணவு எளிதில் கெட்டுப்போகிறது. அத்துடன் வாங்கப்படும் இறைச்சி மற்றும் காய்கறிகள் சுகாதாரமற்ற குளிர்சாதன பெட்டியில் நீண்ட காலமாக வைத்து அதில் இருந்து உணவு தயாரித்து விற்பனை செய்கின்றனர். இவற்றை சாப்பிடுவதால் தான் பலருக்கு உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. மேலும் சில உணவகங்களில் வெளிமாநிலங்களில் இருந்து இறைச்சிகள் வரவழைக்கப்படுகிறது. அந்த இறைச்சியை, உணவுக் கூடத்தில் இருக்கும் துருப்பிடித்த உடைந்த குளிர்சாதன பெட்டியில் வைக்கின்றனர். இதனால் இறைச்சியின் மீது பாக்டீரியா பரவும் அபாயம் உள்ளது.
This story is from the October 03, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 03, 2024 edition of Dinakaran Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
தேசிய பயண அட்டையை பயன்படுத்தி மாநகர பேருந்துகளில் டிக்கெட் பெறும் வசதி : விரைவில் அறிமுகம்
மாநகர பேருந்துகளில் தேசிய பொது இயக்க அட்டையை பயன்படுத்தி டிக்கெட் பெறும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மாநகர் போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
40 சவரன் நகையை கண்டுபிடிக்க தொழிலதிபரிடம் ஜிபே மூலம் ₹20 ஆயிரம் எஸ்ஐ லஞ்சம் - உயர் அதிகாரிகள் விசாரணை
வீட்டில் மாயமான 40 சவரன் நகைகள் குறித்து புகார் அளித்த தொழிலதிபரிடம், திருட்டை கண்டுபிடிக்க ஜிபிஇ மூலம் 20 ஆயிரம் லஞ்சம் பெற்றது தொடர் பாக உதவி ஆய்வாளரிடம் போலீசார் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சவாரிக்கு வந்தபோது பேச்சு கொடுத்து விவரம் சேகரிப்பு ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் திருடிய ஓலா ஆட்டோ பெண் டிரைவர்
சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வலை
முதலமைச்சரின் கிராமசாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் ₹131 கோடி மதிப்பில் 225 சாலை பணிகள் நிறைவு
திருத்தனி கிராமசபை கூட்டத்தில் அமைச்சர் சா.மு.நாசர் பேச்சு
பொன்னேரியில் 774.75 கோடி நிதி ஒதுக்கியும் 10 ஆண்டுகளாக மந்தகதியில் நடக்கும் பாதாள சாக்கடை பணி - விரைந்து முடிக்க கோரிக்கை
பொன்னேரி நகராட்சியில், 10 ஆண்டுகளாக நடைபெறும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பரந்தூர் விமான நிலையம் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் : இயக்குனர் கவுதமன் பேட்டி
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் அறிவித்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
சவாரிக்கு வந்தபோது பேச்சு கொடுத்து விவரம் சேகரிப்பு ஆசிரியர் வீட்டில் நூதன முறையில் திருடிய ஓலா ஆட்டோ பெண் டிரைவர்
சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் வலை
துபாய்க்கு விமானத்தில் தப்ப முயற்சி தலைமறைவு குற்றவாளி சென்னையில் சிக்கினார்
மீனம்பாக்கம், கோவை மாவட்ட குற்றப் பிரிவு போலீசால் தேடப்பட்டு வந்த தலைமறைவு குற்றவாளி சென்னை விமானநிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
செங்கல்பட்டில் முதன்மை தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் - கலெக்டர் தகவல்
தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட உள்ள குரூப் 2, 2ஏ முதன்மைத் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் துவங்கப்படவுள்ளது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்போரூர் அருகே பரபரப்பு ஆலத்தூர் சிட்கோ தொழிற்பேட்டையில் தீவிபத்து
திருப்போரூர் அருகே ஆலத்தூர் தொழிற்பேட்டையில் டாம்ப்கால் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டதால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.