சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கலனில் இருந்து வெற்றிகரமாக வெளியேறி நிலவில் தரையிறங்கிய ரோவர் கலன், தரையிறங்கிய சுற்றுப் பகுதியில் ஆய்வுப் பணிகளைத் தொடங்கியது.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக செலுத்தப்பட்ட சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் கலன் புதன்கிழமை (ஆக. 23) மாலை 6.04 மணிக்கு மென்தரையிறக்கத்தின் மூலம் நிலவின் தரைப் பகுதியில் வெற்றிகரமாக இறங்கியது.
அதன் பிறகு 3.30 மணி நேரம் கழித்து, ரோவர் ஆய்வுக் கலன் தரையிறங்குவது உறுதி செய்யப் பட்டது. ரோவர் தரையிறங்குவதற்கு முன், விக்ரம் லேண்டர் தரையிறங்கியபோது, நிலவின் தரைப் பகுதியில் எழுந்த புழுதி அடங்கி, தெளிவான பார்வைச்சூழல் ஏற்படுவதற்காக இவ்வளவு நேரம் காத்திருக்க நேர்ந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
புழுதி அனைத்தும் அடங்கிய பிறகு, பெங்களூரு, பைலாலுவில் உள்ள இந்திய ஆழ்விண்வெளி மையத்தில் இருந்து அளிக்கப் பட்ட சமிக்ஞைகளின் அடிப்படையில், விக்ரம் லேண்டர் கலனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டிருந்த சரிவுத்தளம் புதன்கிழமை இரவு 9.30 மணி அளவில் திறக்கப்பட் டது. அதன்பிறகு, சரிவுத்தளத்தின் வாயிலாக 6 சக்கரங்கள் கொண்ட 26 கிலோ எடையுள்ள 'பிரக்யான்' ரோவர் கலன் மெதுவாக ஊர்ந்து சென்று நள்ளிரவு 12.30 மணி அள வில் தரையிறங்கியது.
அதன்பிறகு பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் பரஸ்ப ரம் படம் எடுத்துக்கொண்டு, அதை பூமியில் உள்ள தரைக் கட்டுப் பாட்டு மையத்துக்கு அனுப்பி வைத்தன.
This story is from the August 25, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the August 25, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.