போட்டியின் 2-ஆவது நாளான திங்கள்கிழமை இந்தியாவுக்கான முதல் தங்கத்தை துப்பாக்கி சுடுதலில் இந்திய ஆடவா் அணி வெல்ல, அடுத்ததாக கிரிக்கெட்டில் இந்திய மகளிரணி 2-ஆவது தங்கத்தை தட்டிச் சென்றது. ரோயிங்கிலும் பதக்கங்களை அதிகரித்துக் கொண்டனா் இந்திய போட்டியாளா்கள்.
இதையடுத்து பதக்கப் பட்டியலில் முன்னேற்றம் கண்ட இந்தியா, 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என 11 பதக்கங்களுடன் 5-ஆவது இடத்துக்கு வந்திருக்கிறது.
துப்பாக்கி சுடுதல்: உலக சாதனையுடன் சாம்பியன்
ஆடவருக்கான 10 மீட்டா் ஏா் ரைஃபிள் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் ருத்ராங்ஷ் பாட்டீல், திவ்யான்ஷ் சிங் பன்வா், ஐஸ்வரி பிரதாப் சிங் கூட்டணி 1,893.7 புள்ளிகள் பெற்று உலக சாதனையுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றது. தென் கொரிய அணி 2-ஆம் இடமும், சீன அணி 3-ஆம் இடமும் பிடித்தன.
வெண்கலம்: 10 மீட்டா் ஏா் ரைஃபிள் தனிநபா் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஐஸ்வரி பிரதாப் சிங் 228.8 புள்ளிகளுடன் வெண்கலப் பதக்கம் வென்றாா். சீனா, தென் கொரியாவுக்கு முறையே தங்கம், வெள்ளி கிடைத்தது. ருத்ராங்ஷ் பாட்டீல் 4-ஆம் இடத்தை (208.7) எட்டினாா்.
3-ஆம் இடம்: ஆடவருக்கான 25 மீட்டா் ரேப்பிட் ஃபயா் பிஸ்டல் அணிகள் பிரிவு இறுதிச்சுற்றில் ஆதா்ஷ் சிங், அனீஷ் பன்வாலா, விஜய்வீா் சித்து கூட்டணி 1,718 புள்ளிகளுடன் 3-ஆம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றது. சீனா, தென் கொரியா முறையே முதலிரு இடங்களைப் பிடித்தன.
கிரிக்கெட்: இந்தியாவின் தங்க மங்கைகள்
மகளிா் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியா 19 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
முதலில் இந்தியா 20 ஓவா்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 116 ரன்கள் சோ்க்க, அடுத்து இலங்கை 20 ஓவா்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 97 ரன்களே எடுத்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 46, ஜெமிமா ரோட்ரிக்ஸ் 5 பவுண்டரிகளுடன் 42 ரன்கள் சோ்த்தனா்.
This story is from the September 26, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the September 26, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.