ஒரே பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் அளிக்க மறுப்பு தெரிவித்து 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு ஒருமனதாக செவ்வாய்க்கிழமை தீா்ப்பு வழங்கியது.
இதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டுவருவது குறித்து முடிவு எடுப்பது நாடாளுமன்றத்திடம்தான் உள்ளது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
எனினும், ஒரே பாலின ஈா்ப்பாளா்களுக்கு சம உரிமை அளித்து, சமூதாயத்தில் உள்ள பாகுபாடுகளைக் களைய வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனா்.
திருமண அங்கீகாரம்: ஓரினச் சோ்க்கை குற்றமற்றது என கடந்த 2018-இல் உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்தது. இதையடுத்து, ‘ஒரே பாலினத்தவா்களின் திருமணங்களை சிறப்புத் திருமணச் சட்டப்படி அங்கீகரிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், ‘திருமண அங்கீகாரம் கிடைக்காததால் குழந்தைகளைத் தத்தெடுக்கவும், ரேஷன் அட்டை வாங்கவும், வங்கிக் கணக்குகளைத் தொடங்கவும், பள்ளிகளில் குழந்தைகளுக்குப் பெற்றோராகப் பதிவு செய்யவும், காப்பீடு பெறவும், சொந்தமாக வீடுகளை வாங்கவும் ஒரே பாலினத்தவா்களால் முடியவில்லை. பாலினத்தைக் காரணம்காட்டி சமூகத்தில் பாகுபாடு காட்டப்படுவதைத் தடுக்க வேண்டும்’ என்றும் கோரப்பட்டிருந்தது.
சட்ட அங்கீகாரம் கிடையாது: இந்த மனுக்கள் மீதான விசாரணையை 10 நாள்கள் நடத்திய உச்சநீதிமன்றம் கடந்த மே 11-ஆம் தேதி தீா்ப்பை ஒத்திவைத்தது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷண் கெளல், எஸ். ரவீந்திர பட், ஹிமா கோலி, பி.எஸ். நரசிம்மா ஆகியோா் அடங்கிய அரசியல் சாசன அமா்வு செவ்வாய்க்கிழமை தீா்ப்பை வழங்கியது.
அதில், பெண் நீதிபதி ஹிமா கோலியைத் தவிர நான்கு நீதிபதிகளும் தனித் தனியாக தீா்ப்பை எழுதியிருந்தனா்.
This story is from the October 18, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Sign In
This story is from the October 18, 2023 edition of Dinamani Chennai.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Sign In
சிங்கப்பூர்: முன்னாள் அமைச்சர் ஈஸ்வரன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணம்
தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த சிங்கப்பூர் முன்னாள் அமைச்சர் எஸ். ஈஸ்வரன் மீது சுமத்தப்பட்டிருந்த சில முறைகேடு குற்றச்சாட்டுகளை அந்த நாட்டு உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உறுதி செய்தது.
இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் உயிரிழப்பு 558-ஆக உயர்வு
பல ஆண்டுகளுக்குப் பிறகு லெபனானில் இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 558-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை பல்கலை. 166-ஆவது பட்டமளிப்பு விழா
ஆளுநர் ஆர்.என்.ரவி, அமைச்சர் பொன்முடி பங்கேற்பு
முசெத்தியை முறியடித்த ஷாங்
சீனாவில் நடைபெற்ற மற்றொரு ஏடிபி 250 போட்டியான செங்டு ஓபனில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் உள்நாட்டு இளம் வீரர் ஷாங் ஜுன்செங் வாகை சூடினார்.
ஹாங்ஸு ஓபன்
சீனாவில் நடைபெற்ற ஏடிபி 250 போட்டியான ஹாங்ஸு ஓபனில், ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன்/விஜய்சுந்தர் பிரசாந்த் கூட்டணி செவ்வாய்க்கிழமை சாம்பியனானது.
கடனைத் திருப்பிச் செலுத்தாத நிறுவனத்தின் பங்குகளை வாங்க எஸ்பிஐ முடிவு
ஆர்பிஐ தலையிட காங்கிரஸ் வலியுறுத்தல்
உள்ளாட்சி அமைப்புகளில் கூட்டத்தொடர் அமர்வுகளுக்கு சட்டம்
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வலியுறுத்தல்
தொழில் துறையில் செயல்பாட்டுக்கு வந்த 535 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
அமைச்சர் டிஆர்பி ராஜா
கொளத்தூரில் ரூ.4.76 கோடியில் உள்கட்டமைப்பு வசதிகள்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
மணலியில் ஒரே நாளில் 150 மி.மீ. மழை
சென்னை மணலியில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் அதிகபட்சமாக 150 மி.மீ. மழை பதிவானது.