கை கோக்கும் மாநகர கயவர்
Dinamani Chennai|May 16, 2024
உலகின் உன்னத மறை நூல் திருக்குறள் என்று வானுயர போற்றப்படுகிறது. வள்ளுவர் பெருமான் பார்வை படாத விடயம் ஒன்றுமேயில்லை என்ற அளவில் வாழ்வியலில் அத்துணை நடைமுறைகளையும் ஆராய்ந்துள்ளார். ரொளடிகளையும் விட்டு வைக்கவில்லை!
ஆர்.நடராஜ்
கை கோக்கும் மாநகர கயவர்

மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பார் யாங்கண்டதில் என்றார் வள்ளுவர். தோற்றத்தில் மக்களை போலவே கயவர் உள்ளனர், இந்த ஒற்றுமையை வேறு எங்கும் பார்க்க முடியாது என்று வியக்கிறார். மனிதனிடம் அந்தக் கொடூரம் ஒளிந்திருக்கிறது. எப்போது மிருகமாவான் என்று கணிக்க முடியாது. நடக்கும் வன்முறைகளைப் பார்த்தால் மிருகத்தனம்தான் எங்கும் பரவியிருப்பதை நிரூபிக்கின்றது.

உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் நிகழ்வுகள், மனித உடலுக்கு ஊறு விளைவிக்கும் மோதல்களில் பதியப்பட்ட வழக்குகளில் காவல்துறை கறாரான நடவடிக்கை எடுத்தால்தான் சட்டம் ஒழுங்கு சீராக இயங்கும். எந்த அளவில் இத்தகைய வழக்குகள் நேர்மையாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு எதிரிகளுக்கு தண்டனை சட்டப்படி பெறப்படுகிறது என்பது காவல்துறையின் செயல்பாடுகளின் அளவுகோலாக கருதப்படும்.

பொது இடங்களில் வெட்டு குத்து நடைபெறுவது சமுதாயத்தில் பீதியை கிளப்பும். கொடூரமான கொலைகள், சமீபத்தில் நெல்லையில் நடந்தது போல் வெட்டிக் கொலை செய்து தீக்கிரையான உடல் வீசப்படுவது போன்ற கொலைகள் பயங்கர சூழலை உருவாக்கும். இம்மாதிரி நிகழ்வுகள் தொடர்ந்து நடந்தால் மக்களுக்கு காவல்துறை மீதுள்ள நம்பிக்கை குறையும். காவல்துறை நடவடிக்கைகளுக்கு இன்றியமையாத மக்களின் ஒத்துழைப்பு அற்றுப்போகும். இதுவே சட்டம் ஒழுங்கு சீர்குலைவிற்கு வித்திடும்.

தேசிய குற்ற ஆவண வாரியம் 2022-ஆம் ஆண்டு வரை மாநிலங்களில் நிகழ்ந்த குற்றங்களும் அதன் காரிய காரணங்களும் ஆராய்ந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அனைத்து மாநிலங்களிலும் இந்திய தண்டனை சட்டப்படி பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 35.61 லட்சம். தமிழ்நாட்டில் 1.91 லட்சம். மாநிலங்களில் ஆண்டுதோறும் வழக்குகள் குறையலாம் அதிகமாகலாம். ஆனால் தமிழ்நாட்டில் 2021-இல் பதியப்பட்ட வழக்குகள் 3.22 லட்சம், 2020-இல் 8.9 லட்சம். 2022-இல் 1.91 லட்சம் வழக்குகள். முந்தைய வருடங்களைவிட 300% சரிவு ஆச்சரியம் அளிக்கிறது. முழுமையாக வழக்குகள் பதியப்படுகிறதா என்பதை தலைமை கண்காணிக்க வேண்டும்.

Diese Geschichte stammt aus der May 16, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

Diese Geschichte stammt aus der May 16, 2024-Ausgabe von Dinamani Chennai.

Starten Sie Ihre 7-tägige kostenlose Testversion von Magzter GOLD, um auf Tausende kuratierte Premium-Storys sowie über 8.000 Zeitschriften und Zeitungen zuzugreifen.

WEITERE ARTIKEL AUS DINAMANI CHENNAIAlle anzeigen
சென்னையில் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாதெமி
Dinamani Chennai

சென்னையில் கலைஞர் நூற்றாண்டு குத்துச்சண்டை அகாதெமி

முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

time-read
1 min  |
February 26, 2025
ரூ.4.45 லட்சம் கோடியிலான ரஷிய கச்சா எண்ணெய்: இந்தியா இறக்குமதி
Dinamani Chennai

ரூ.4.45 லட்சம் கோடியிலான ரஷிய கச்சா எண்ணெய்: இந்தியா இறக்குமதி

ரஷியாவிடமிருந்து கடந்த ஆண்டில் மட்டும் ரூ.4.45 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளதாக எரிசக்தி மற்றும் தூய காற்று ஆய்வுக்கான மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

time-read
1 min  |
February 26, 2025
மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்
Dinamani Chennai

மகா கும்பமேளா: ஆன்மிகம், கலாசாரம், மக்கள் ஒற்றுமையின் சங்கமம்

உலகின் மிகப்பெரிய ஆன்மிக-கலாசார திருவிழாவான மகா கும்பமேளா, உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பௌஷ பௌா்ணமி நாளான ஜனவரி 13-ஆம் தேதி முதல் புதன்கிழமை (பிப். 26) வரை பிரம்மாண்டமாக நடைபெறுகிறது.

time-read
2 Minuten  |
February 26, 2025
ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்
Dinamani Chennai

ஆக்கிரமிப்பு உக்ரைன் கனிமங்களை அமெரிக்காவுக்கு விற்கத் தயார்

தங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள உக்ரைன் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் இருக்கும் அரியவகை கனிமப் பொருள்களை அமெரிக்காவுக்கு விற்பனை செய்யத் தயாராக இருப்பதாக ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
February 26, 2025
Dinamani Chennai

தமிழகத்தில் நாளைமுதல் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (பிப்.27) முதல் மாா்ச் 1- ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 26, 2025
Dinamani Chennai

ஈரான் பெட்ரோலிய நிறுவனத்துடன் தொடர்பு: 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானில் உள்ள பெட்ரோலிய மற்றும் பெட்ரோகெமிக்கல் தொழிற்சாலைகளுடன் தொடா்பில் இருந்ததாக இந்தியாவைச் சோ்ந்த 4 நிறுவனங்கள் உள்பட 16 நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

time-read
1 min  |
February 26, 2025
Dinamani Chennai

47 பல் மருத்துவர் பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியீடு

தமிழக அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 47 உதவி பல் மருத்துவா் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியம் (எம்ஆா்பி) தெரிவித்துள்ளது.

time-read
1 min  |
February 26, 2025
‘போப் உடல்நிலையில் சற்று முன்னேற்றம்’
Dinamani Chennai

‘போப் உடல்நிலையில் சற்று முன்னேற்றம்’

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கத்தோலிக தலைமை மதகுரு போப் பிரான்சிஸின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

time-read
1 min  |
February 26, 2025
வேளாண் நிதிநிலை அறிக்கை: தமிழக அரசு ஆலோசனை
Dinamani Chennai

வேளாண் நிதிநிலை அறிக்கை: தமிழக அரசு ஆலோசனை

வேளாண் நிதிநிலை அறிக்கை தொடா்பாக, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்தியது.

time-read
1 min  |
February 26, 2025
உலகிலேயே திறமையான இந்திய கடலோரக் காவல்படை
Dinamani Chennai

உலகிலேயே திறமையான இந்திய கடலோரக் காவல்படை

‘இந்திய கடலோரக் காவல்படை வலிமையான, நம்பகமான மற்றும் உலகின் மிகவும் திறமையான கடல்சாா் பாதுகாப்புப் படைகளில் ஒன்றாக வளா்ந்துள்ளது’ என்று பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங் புகழாரம் சூட்டினாா்.

time-read
1 min  |
February 26, 2025