அதே போல், நான் ஒரு சைக்கோ, நான் ஒரு நார்சிஸ்ட், நான் ஒரு அப்நார்மல் பெர்சன் என்றும் கூறும் ஆண்களையும் பார்த்தும் இருக்கிறோம். இம்மாதிரியான மனநல மருத்துவத்தில் பயன்படுத்தும் வார்த்தைகளை நமக்குத் தெரிந்தவர்கள் பயன்படுத்துவதால், அவர்கள் அனைவரும் மனநலப் பிரச்னைகளில் இருப்பவர்களா என்று கேட்டால், வீட்டிலுள்ளவர்கள், நண்பர்கள் அனைவரும் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் திரும்பி நம்மையே பார்ப்பார்கள்.
நீங்கள் பேசுவதைப் புரியாமல், ஏன் வீட்டிலுள்ளவர்கள் முழிக்கிறார்கள் என்றால், நாம் அனைவரும் வார்த்தைகளைப் பார்த்து பயப்படும் நபர்களாகத்தான் இருந்திருக்கிறோம். அதுவும் நோயின் அடிப்படையில் இருக்கும் வார்த்தைகளை உச்சரிக்கவே ஆயிரம் தடவை யோசிக்கும் நபர்களைத்தான் பார்த்திருக்கிறோம். ஏனென்றால், தன்னை ஒரு நோயாளி என்று கூறி விட்டால் அல்லது அடிக்கடி உடம்புக்கு முடியல என்று கூறுவதை யாரும் தவறாக நினைத்து விடுவார்களோ என்றெல்லாம் யோசிக்கும் தலைமுறையைத்தான் பார்த்திருக்கிறோம். இன்றைக்கு அவை எல்லாமே முற்றிலும் மாறி விட்டது.
அதற்கேற்ற மாதிரி காலநிலை மாற்றத்தால், உடலுக்கு அடிக்கடி முடியாமல் போவது என்று சிறுவர் சிறுமியரில் இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் ஏதோ ஒரு காரணங்களுக்காக தனக்கு உடம்புக்கு சரியில்லை என்ற வார்த்தையை எளிதாக பயன்படுத்தத் தொடங்கி விட்டோம். இந்த டிஜிட்டல் உலகில், இன்னும் முன்னேறி, உணர்வுகளை கையாளத் தெரியவில்லை என்றாலும் கூட, மனநலம் சார்ந்த வார்த்தைகளை உடனுக்குடன் பயன்படுத்தத் தொடங்கி விட்டார்கள். ஒரு விதத்தில் ஒரு மனநல ஆலோசகராக நல்லதுதான் என்றாலும், தும்மினால் கூட உடலுக்கு முடியவில்லை என்று சொல்வது போல், சும்மா அழுதால் கூட, டிப்ரெஸன்ல இருக்கேன் என்று கூறுவதைப் பார்க்கும் போது தான், கொஞ்சம் பயமாக இருக்கிறது.
Bu hikaye Kungumam Doctor dergisinin July 01, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Kungumam Doctor dergisinin July 01, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap
லைப்போமா அறிவோம்!
லைப்போமா எனப்படும் கொழுப்புத் திசுக்கட்டி என்பது கொழுப்புள்ள திசுக்களினால் உருவாகும் வலியற்ற கட்டி ஆகும்.
சில்லுன்னு ஜஸ் தெரப்பி!
வலியும் வீக்கமும் இருக்கும் இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது நம் பாரம்பரிய சிகிச்சைதான்.
எப்போதும் கேட்கும் ஒலிகள்!
ஒருவரின் காதில் இடைவிடாத ஒலிகள் கேட்டுக்கொண்டே இருந்தால் அது எவ்வளவு துயரம். எந்த வேலையும் செய்ய விடாத மன உளைச்சலை தரும் இந்த விநோத நோயின் பெயர் டினைடஸ் (Tinnitus).
மாதுளையின் மருத்துவம்!
மாதுளை ஜூஸை தொடர்ந்து 40 நாட்கள் அருந்தி வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்னை நீங்கும். நினைவாற்றல் பெருகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரித்து, ரத்தசோகையை போக்குகிறது.
கோபத்தைக் குறைக்க உதவும் உனி திராட்சை
பழங்களில் மிகவும் சிறந்தது உலர் திராட்சை. உலர் திராட்சையின் மருத்துவக் குணம் அளவற்றது. அவற்றை பற்றி தெரிந்துகொள்வோம்.
ஆரோக்கியமான கூந்தலை பராமரிக்க எளிய வழிகள்!
அழகான தோற்றத்துக்கு முகப் பொலிவு மற்றும் மென்மையான சருமம் எவ்வளவு முக்கியமோ அதே அளவு ஆரோக்கியமான கூந்தலும் அவசியம்.
சர்க்கரை கசக்கிற சர்க்கரை
இன்று இளவயதினருக்குக்கூட சர்க்கரைநோய் வருகிறது. பாரம்பரியம், வாழ்வியல் கோளாறுகள், உணவுமுறை எனப் பலவிதமான காரணங்கள் இதற்கு இருக்கின்றன.
அம்மான் பச்சரிசி கீரையின் பயன்கள்!
அம்மான் பச்சரிசி சாலை ஓரங்களிலும் தரிசு நிலப்பகுதிகளிலும் வளரக்கூடிய தாவரமாகும். இது மழைக்காலங்களில் நன்கு வளரக்கூடியது.
ஜீன்ஸ்... Twins ரகசியங்கள்!
இயற்கையின் அற்புதங்களில் இரட்டைக் குழந்தைகளுக்கு ஒரு தனியிடம் உண்டு. எப்போதும் அந்தக் குழந்தைகளை வியப்போடுதான் பார்ப்போம்.
கவனிக்கும் கலை
ஒரே நேரத்தில் பல செயல்களில் ஈடுபடுவதை ‘மல்டி டாஸ்கிங் {MULTI TASKING}’ என்றும் தனித்திறமை என்றும் நாம் சொல்கிறோம்.