
சென்னை, நவ.11: தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகை கஸ்தூரி போலீசாரின் கைதுக்கு பயந்து சென்னையில் உள்ள வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பிராமணர்கள் சங்கம் சார்பில் கடந்த 4ம் தேதி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டு 18 நிமிடங்கள் பேசினார். அப்போது தெலுங்கு சமுதாய பெண்கள் குறித்து அவதூறாக பேசியிருந்தார். தெலுங்கு பேசும் மக்கள் மற்றும் பெண்கள் குறித்து நடிகை கஸ்தூரியின் பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள தெலுங்கு மக்கள், நடிகை கஸ்தூரி மீது போலீசில் புகார் அளித்து வருகின்றனர்.
அதேநேரம் பல்வேறு தரப்பினரும் கஸ்தூரியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் மற்றும் தமிழர் முன்னேற்றப்படை நிறுவனர் தலைவர் வீரலட்சுமி புகார் அளித்தார். மேலும், கோயம்பேடு காவல் நிலையத்திலும் தெலுங்கு அமைப்பு சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
Bu hikaye Dinakaran Chennai dergisinin November 11, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber ? Giriş Yap
Bu hikaye Dinakaran Chennai dergisinin November 11, 2024 sayısından alınmıştır.
Start your 7-day Magzter GOLD free trial to access thousands of curated premium stories, and 9,000+ magazines and newspapers.
Already a subscriber? Giriş Yap

மாமல்லபுரம் அருகே பேரூரில் 4276.44 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணி தீவிரம்
மாமல்லபுரம்: மாமல்லபுரம் அடுத்த நெம்மேலி ஊராட்சிக்குட்பட்ட பேரூரில், ரூ.4276.44 கோடி மதிப்பில் 85.51 ஏக்கர் பரப்பளவில் உருவாகும் கடல்நீரை குடிநீராக்கும் 3வது ஆலை கட்டுமான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
பீகாரில் லாலுவை விளாசிய பிரதமர் மோடி காட்டாட்சியை நடத்தியவர்கள் கும்பமேளாவை பழிக்கிறார்கள்
‘கால்நடை தீவனத்தை திருடியவர்கள், காட்டாட்சியை அறிமுகப்படுத்தியவர்கள் மகா கும்பமேளாவை மோசமாக பேசுகிறார்கள்’ என பீகாரில் பேசிய பிரதமர் மோடி, ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தை கடுமையாக தாக்கினார்.
வீடியோ எடுத்த ரசிகரின் செல்போனை அபேஸ் செய்த ஹீரோ
வீடியோ எடுத்த ரசிகரின் செல்போனை பறித்துக்கொண்டார் மலையாள நடிகர் உன்னி முகுந்தன். தமிழில் கடந்த ஆண்டு வெளிவந்த சூரி நடித்த ‘கருடன்’ திரைப்படத்தில் உன்னி முகுந்தன் வில்லனாக நடித்திருந்தார்.

குழந்தைகளும் பார்க்க வேண்டிய படம் அகத்தியா
வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ், வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜூன் தேவ் இணைந்து தயாரித்துள்ள படம், ‘அகத்தியா’.

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் வங்கத்தை வீழ்த்திய நியூசி.
ஐசிசி சாம்பியன்ஷிப் கோப்பைக்காக நேற்று நடந்த ஒரு நாள் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிராக வங்கதேசம் 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்தது.
திருவனந்தபுரத்தில் பயங்கரம் காதலி, தம்பி, பாட்டி உள்பட 5 பேர் சுத்தியலால் அடித்துக் கொலை
திருவனந்தபுரம் அருகே தம்பி, காதலி, பாட்டி உள்பட 5 பேரை வாலிபர் சுத்தியலால் தலையில் அடித்தும், கத்தியால் குத்தியும் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலக மகளிர் டென்னிஸ் தரவரிசை டாப் 10க்குள் நுழைந்த மிர்ரா ஆண்ட்ரீவா
துபாய் ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ரஷ்ய இளம் வீராங்கனை மிர்ரா ஆண்ட்ரீவா (17) முதல் முறையாக உலக மகளிர் டென்னிஸ் தரவரிசையில் 10 இடங்களுக்குள் முன்னேறி சாதனை படைத்துள்ளார்.

ஒரு பெண் என்றும் பாராமல் பொதுவெளியில் நக்கல், நையாண்டித்தனமாக பேசலாமா?
மயிலாடுதுறை காங்கிரஸ் எம்பி வழக்கறிஞர் சுதா நேற்று வெளியிட்ட அறிக்கை: கும்பகோணத்தில் கடந்த 23ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அன்புமணி பேசும் போது, நாட்டில் எவ்வளவோ பிரச்னைகள் இருக்கிறது.

அரையிறுதிக்கு செல்வது யார்? - ஆஸி - தெ.ஆ. கிரிக்கெட் போர்
ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 8வது லீக் ஆட்டத்தில் பி பிரிவில், தலா ஒரு வெற்றி பெற்றுள்ள ஆஸ்திரேலியா-தென் ஆப்ரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்த உள்ளன.
2,642 அரசு டாக்டர்கள் நியமனம் என்பது வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது
தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2642 உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு, மருத்துவ தேர்வு வாரியம் மூலம் கடந்த ஜனவரி 5ம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.